மேலும் அறிய

Tirumala Tirupathi: 30 மணிநேரம்..! திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்..

திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் இலவச தரிசனத்திற்கு நேரம் அதிகமாக எடுக்கிறது.

புரட்டாசி 3-வது சனிக்கிழமையில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் திருமலைக்கு படை எடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்ய இன்று 6ம் தேதி மாலை நிலவரப்படி 30 மணி நேரம் ஆகும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று காலை 5-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்வுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனைத் தொடர்ந்து கொடிமரத்தில் ஏற்றப்பட்டிருந்த பிரம்மோற்சவக் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு செய்யப்பட்டது. இந்த பிரம்மோற்சவத்தில் சுமார் 57 லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாக தேவஸ்தானம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது புரட்டாசி 3-வது சனிக்கிழமையன்று சுவாமியை தரிசிக்க வேண்டும் என்று நினைத்த பக்தர்கள் 4-ம் தேதி முதலே திருமலைக்கு குடும்பம்குடும்பமாக வந்து கொண்டிருக்கின்றனர்.

ஏற்கெனவே திருமலையில் இன்று மாலை நிலவரப்படி சுமார் 5 கி.மீ தொலைவிற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுவாமியை சர்வ தரிசனத்தில் (இலவச தரிசனம்) தரிசிக்க சுமார் 30 மணி நேரம் ஆகும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது. அதாவது இன்று மாலை 6ம் தேதி சர்வ தரிசன வரிசையில் நின்றால், நாளை 7ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

திருமலையில் பக்தர்கள் கூட்டம்:

ஆனால் இதனை அறியாத பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திருமலைக்கு வந்துகொண்டிருக்கின்றனர். இதனால், திருமலையில் தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் இரவில் கடும் குளிரைக் கூட பொருட்படுத்தாமல் ஏழுமலையானத் தரிசிப்பதற்காக காத்திருக்கின்றனர்.

மேலும் தற்போது கடந்த 2 நாட்களாக திருமலையில் மழை பெய்து வருகிறது. மழையில் நனைந்தும், குளிரில் நடுங்கியவாறும் பக்தர்கள் புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையன்று எப்படியாவது சுவாமியை தரிசிக்க வேண்டுமென பக்தியுடனும் ஆர்வத்துடனும் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

மலை போல் குவிந்திருக்கும் திருமலை பக்தர்கள்:

வரிசையில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் உணவுப் பொட்டலங்கள், குடிநீர், பால், மோர், டீ, காபி முதலானவற்றை வழங்கி வருகின்றனர். நேற்று தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி உள்ளிட்டோர் நேரில் சென்று பக்தர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை உடனுக்குடன் சரி செய்து கொடுத்தார்கள்.

கூட்டம் அதிகரித்துள்ளதால், திருமலையில் தங்குவதற்கு இடமும் இல்லை. மேலும் தலைமுடி காணிக்கை செலுத்துவதற்கும், லட்டுப் பிரசாதம் வாங்கவும், இலவச உணவு சாப்பிடவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தக் கூட்டம் நாளை 7ம் தேதி வெள்ளிக்கிழமை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆதலால், திருமலைக்கு வரும் பக்தர்கள் பொறுமை காக்க வேண்டும் எனவும் தேவைப்பட்டால் திருமலை யாத்திரையை தள்ளிப்போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஒரே வாரத்தில் பல்டி அடித்த தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவா.? எப்போ தான் விலை குறையும்.?
ஒரே வாரத்தில் பல்டி அடித்த தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவா.? எப்போ தான் விலை குறையும்.?
Embed widget