மேலும் அறிய

Rajasthan Cop: எழுத்தறிவித்தவன் இறைவன்... இந்த போலீஸ்காரரும் தான்!

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பது கூற்று. அந்த வகையில் ராஜஸ்தானைச் சேர்ந்த காவலர் ஒருவர் கடந்த 4 ஆண்டுகளாக சேரிகளில் வசிக்கும் குழந்தைகளை தேடி கல்வி புகட்டி வருகிறார்.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பது கூற்று. அந்த வகையில் ராஜஸ்தானைச் சேர்ந்த காவலர் ஒருவர் கடந்த 4 ஆண்டுகளாக சேரிகளில் வசிக்கும் குழந்தைகளை தேடிச் சென்று அவர்களுக்கு கல்வி புகட்டி அவர்களின் வாழ்க்கையை மாற்றி வருகிறார்.

அவர் பெயர் தரம்வீர் ஜாகர். கடைநிலை காவலராக தான் இருக்கிறார். ஆனால் அவரது மனம் விசாலமானது அவரது இலக்கு உயர்ந்தது. அப்னி பாடசாலா தமிழில் சொல்ல வேண்டுமானால் உங்களின் பாடசாலை என்ற பெயரில் ஒரு  பாடசாலையை அமைத்தார். இந்தப் பள்ளியில் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை புகட்டுவார். ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் தான் தரம்வீர் இந்த பாடசாலையை முதன்முதலில் அமைத்தார்.

அப்னி பாடசாலா ஓர் அறிமுகம்:

2016 ஆன் ஆண்டு முதன்முதலில் அப்னி பாடசாலாவை தரம்வீர் ஜாக்கர் ஆரம்பித்தார். அதில் அப்போது வெறும் 5 குழந்தைகள் தான் இருந்தனர். இப்போது அவர் பள்ளியில் 450 பிள்ளைகள் படிக்கின்றனர். தான் வசிக்கும் பகுதியில் அரசுப் பள்ளி இல்லாததாலேயே அங்குள்ள பிள்ளைகளை பெற்றோர் வறுமையை சமாளிக்க யாசகம் பெற வைக்கின்றனர் என்பதே தரம்வீரின் மிகப்பெரிய ஆதங்கமாக இருக்கிறது. ஆரம்பத்தில் தரம்வீர் மட்டுமே இந்த சேவையை செய்து வந்தார்.

பின்னாளில் அவருடன் இணைந்து மூன்று மகளிர் காவலர்களும் இப்பணியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க வேண்டுமானால் அதற்கு அடிப்படையான உணவு, சீருடை, நோட்டு புத்தகத்திலிருந்து அனைத்தும் இலவசமாக தர வேண்டும். என் ஊதியத்தில் இருந்தே அதற்கான செலவை செய்கிறேன். ஆரம்பத்தில் குறைந்த அளவு குழந்தைகள் இருந்தபோது அது சுமையாக தெரியவில்லை. இப்போது 500 குழந்தைகள் என்றபோது சற்று கடினமாகவே இருக்கிறது. இருந்தாலும் நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்றார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hindustan Times (@hindustantimes)

ஆட்சியர் பாராட்டு:
இந்நிலையில் சுரு மாவட்ட ஆட்சியர், அண்மையில் தரம்வீரின் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு பள்ளி நடத்தப்படும் முறை குறித்து அவர் கேட்டறிந்தார். அவர் அதை மிகவும் வியந்து ரசித்து கேட்டறிந்தார். தரம்வீருக்கு அரசாங்க உதவிகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியும் கொடுத்துச் சென்றுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
ABP Southern Rising Summit 2025 LIVE: முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
ABP Southern Rising Summit 2025 LIVE: முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
Embed widget