மேலும் அறிய

Joshimath : பூமிக்குள் புதையத் தொடங்கிய ஜோஷிமத் நகரம்.. பதறி அழுத மக்கள்.. பிரதமர் அலுவலகம் தெரிவித்தது என்ன?

உத்தரகாண்ட் – ஜோஷிமத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே உடனடி முன்னுரிமை என்று உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் – ஜோஷிமத்தில் நிலமை சமாளிப்பதற்கான திட்டங்களைத் தயாரிக்க மத்திய நிறுவனங்களுக்கு நிபுணர்களும் உதவுகிறார்கள், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே உடனடி முன்னுரிமை என்று உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி கவலையடைந்துள்ளதாகவும், முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் இருந்து நிலைமையை ஆய்வு செய்துள்ளதாகவும் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) ஒரு குழுவும், மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) நான்கு குழுக்களும் ஏற்கனவே ஜோஷிமத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், நிலம் தொடர்ந்து தளர்ந்து சரிந்து  வருவதாலும், நூற்றுக்கணக்கான வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாலும் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.முக்கிய கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களின் பாதுகாப்பிற்கு உடனடி முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், குடியிருப்பாளர்களுடன் தெளிவான மற்றும் தொடர்ச்சியான தொடர்பை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

எல்லை மேலாண்மை செயலாளர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) உறுப்பினர்கள் இன்று உத்தரகண்ட் மாநிலத்திற்கு வருகை தரவுள்ளனர். NDMA, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், இந்திய புவியியல் ஆய்வு மையம், ஐஐடி ரூர்க்கி, வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் ஜியாலஜி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹைட்ராலஜி மற்றும் மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் நிபுணர்கள் குழு நிலைமையை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவார்கள் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரு தெளிவான காலவரையறை புனரமைப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு, தொடர்ச்சியான நில அதிர்வு கண்காணிப்பு செய்யப்பட வேண்டும், புனித நகரத்திற்கான ஆபத்து உணர்திறன் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். ஜோஷிமத், பத்ரிநாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் மற்றும் சர்வதேச பனிச்சறுக்கு இடமான அவுலி போன்ற புகழ்பெற்ற யாத்திரை தலங்களுக்கு நுழைவாயிலாகும்.  நடைமுறை மற்றும் சாத்தியமான நடவடிக்கைகள் மூலம் மோசமடைந்து வரும் நிலைமையைக் கட்டுப்படுத்த உடனடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் மிஸ்ரா.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Embed widget