மேலும் அறிய

Delhi Air Pollution: டெல்லியில் மோசமடையும் காற்றின் தரம்.. மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்..

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் இந்த நிலை அடுத்த மூன்று நாட்களுக்கு தொடரும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் குறைந்து வந்த நிலையில் நேற்று மதியம் மிக மோசமான நிலைக்கு சென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலை அடுத்த சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு காரணமாக வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் ஃபரிதாபாத் ஆகிய இடங்களிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், குருகிராமில் மட்டும் காற்றின் தரம் மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் சராசரி காற்றின் தரக் குறியீடு (AQI) நேற்று மாலை 4 மணியளவில் 313 ஆக பதிவானது, சனிக்கிழமையன்று 248 ஆக இருந்த நிலையில், அது கணிசமாக உயர்ந்துள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  காற்று தரக்கூறியீடு 201 முதல் 300 க்கு இடையில் இருந்தால் "காற்று தரம் மோசமாக இருப்பதாகவும்", 301 முதல் 400 "காற்று தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும்", மற்றும் 401 முதல் 500 "காற்று தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்" கருதப்படுகிறது. காற்று மாசி காரணமாக மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஓடுவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை தவிர்த்து நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், ஏதேனும் அசாதாரணமான இருமல், மார்பில் அசௌகரியம், மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் அல்லது சோர்வு ஏற்பட்டால் உடனடியாக அந்த செயல்பாட்டினை நிறுத்துமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது.

டில்லியின் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என்பதால், சனிக்கிழமையன்று, காற்றின் தர மேலாண்மை ஆணையம்  கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான் (ஜிஆர்ஏபி) 2 ஆம் கட்டத்தை விதிப்பதாக அறிவித்தது.  GRAP என்பது காற்று மாசுபாட்டைக் குறைக்க எடுக்கப்பட்ட அவசர நடவடிக்கைகளின் தொகுப்பாகும்.  மக்கள் தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) அதிகாரிகள் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தவும், CNG/எலக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களின் சேவையை அதிகரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.     

குளிர்காலத்தில் முக்கியமாக அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மரக்கன்றுகள் எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைவதாக கூறப்படுகிறது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு முன்பு 15 அம்ச குளிர்கால செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Actor Sathyaraj:
"மதவாதிகளுக்கு நாங்க பிரச்னை இல்லை.! சேகர்பாபுதான் பிரச்னை ": நடிகர் சத்யராஜ் அதிரடி.!
Embed widget