மேலும் அறிய

Kashmir Terror Incidents: “ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம், கலவரம் குறைந்துள்ளது” - உச்சநீதிமன்றத்தில் புள்ளிவிவரம் சொன்ன மத்திய அரசு

"2018 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் பயங்கரவாத சம்பவங்கள் 45.2% குறைந்துள்ளன. ஊடுருவல் குறைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் 97% குறைந்துள்ளது" என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான தினசரி விசாரணை, கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கும் மனுதாரர் தரப்புக்கும் இடையே பரபர வாதம் நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் வழக்கு:

கடந்த 14 நாள்களாக நடந்து வரும் விசாரணையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம், "ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற முடியுமா? ஒரு மாநிலத்திலிருந்து யூனியன் பிரதேசத்தை பிரிக்க முடியுமா? தேர்தல் எப்போது நடத்தப்படும்" என அடுக்கடுக்கான கேள்விகளை இந்திய தலைமை நீதிபதி எழுப்பினார்.

அதற்கு, மத்திய அரசின் பதிலை மனுவாக இன்று தாக்கல் செய்வதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார். அதன்படி, இந்திய தலைமை நீதிபதி எழுப்பிய கேள்விக்கு இன்று பதில் அளித்துள்ள மத்திய அரசு, "ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானது. இருப்பினும், ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து மீண்டும் எப்போது வழங்கப்படும் என்பதை சொல்ல முடியாது" என தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், "ஜம்மு காஷ்மீரில் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். இந்திய தேர்தல் ஆணையமும் ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் ஆணையமும் தான் இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும்.

"தேர்தலை நடத்த தயார்"

மத்திய அரசின் கருத்து என்னவென்றால், யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானது என்று கூறும் அதே நேரத்தில், ​​முழுமையான மாநில அந்தஸ்து எப்போது வழங்கப்படும் பற்றிய சரியான காலக்கெடுவை என்னால் இப்போது கொடுக்க முடியாது. பல 10 ஆண்டுகளாக தொடர்ச்சியான இடையூறுகளுடன் அரசு கடந்து வந்த விசித்திரமான சூழ்நிலைகள் காரணமாக, அதற்கு சிறிது நேரம் ஆகலாம்" என்றார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, "2018 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் பயங்கரவாத சம்பவங்கள் 45.2% குறைந்துள்ளன. ஊடுருவல் 90% குறைந்துள்ளது. கல் வீச்சு போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் 97% குறைந்துள்ளது. 

பாதுகாப்புப் பணியாளர்களின் உயிரிழப்பு 65% குறைந்துள்ளது. 2018இல் 1767 கல் வீச்சு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு ஒரு சம்பவம் கூட நடைபெறவில்லை. இளைஞர்கள் இப்போது வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். முன்னதாக அவர்கள் பிரிவினைவாத சக்திகளால் தவறாக வழிநடத்தப்பட்டனர். 2018ஆம் ஆண்டு, 52 முறை பந்த் நடந்துள்ளது. இந்தாண்டு 1 கூட நடைபெறவில்லை. 2022 ஜனவரியில் மட்டும் 1.8 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 2023ல் 1 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்" என வாதிட்டது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், இதற்கு பதில் அளிக்கையில், "நீங்கள் 5,000 பேரை வீட்டுக் காவலில் வைத்திருந்தால், 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தால், எந்த பந்தையும் நடத்த முடியாது" என்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget