மேலும் அறிய

ஒரு மண்டபம்... இரு காதலிகள்.... மூன்று முடிச்சு! ‛டூ இன் ஒன்’ டும் டும் டும்!

ஒரே மண்டபத்தில் இரண்டு பெண்களை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல கட்டுப்பாடுகளை தாண்டி திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில் தெலுங்கானாவில் நடைபெற்ற ஒரு திருமணம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒரே மண்டபத்தில் இரண்டு பெண்களை ஒருவர் திருமணம் செய்துள்ளது தான் அதற்கு காரணம். எப்படி இந்த திருமணம் நடந்தது?

தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டத்தில் கென்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த சமூகத்தை சேர்ந்த அர்ஜூன் என்ற இளைஞர் பிஎட் பட்டப்படிப்பு முடித்துள்ளார். பட்டப்படிப்பை முடித்துவிட்டு அவர் அரசாங்க வேலைக்கான தேர்வுகளுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இவருடைய அத்தை மகளான உஷா ராணிக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயத்தில் மற்றொரு அத்தை மகளான சுரேகாவை பார்த்தவுடனும் இவருக்கு காதல் வயப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து முதலில் இந்த இரு பெண்களிடம் முதலில் அர்ஜூன் பேசி தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதன்பின்னர் இந்த இரு பெண்களையும் இவர் 5 மாதங்களாக காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜூனின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய பெண் பார்க்க தொடங்கியுள்ளனர். 


ஒரு மண்டபம்... இரு காதலிகள்.... மூன்று முடிச்சு! ‛டூ இன் ஒன்’ டும் டும் டும்!

அந்த சமயத்தில் இந்த இரண்டு பெண்களையும் காதலிப்பதாக அர்ஜூன் தனது வீட்டில் கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவரின் பெற்றோர்கள் இரண்டு பெண்களின் வீட்டிலும் பேசியுள்ளனர். அத்துடன் உஷா ராணி மற்றும் சுரேகா ஆகிய இருவரிடமும் இது தொடர்பாக பெற்றோர்கள் பேசியுள்ளனர். இருவரும் இந்த திருமணத்திற்கு ஒப்பு கொண்டுள்ளனர். இதனால் ஒரே மண்டபத்தில் இரண்டு பெண்களையும் அர்ஜூனிக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்காக கடந்த 14ஆம் தேதி திருமண ஏற்பாடை செய்துள்ளனர். அங்கு ஒரே மண்டபத்தில் அர்ஜூன் உஷா ராணி மற்றும் சுரேகா ஆகிய இரண்டு பெண்களையும் திருமணம் செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இத்திருமணம் தொடர்பாக பேசிய அந்த ஊரின் தலைவர், “எங்கள் பழங்குடியின வழக்கப்படி ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது இயல்பான ஒன்று. அதேபோன்று தான் இந்த திருமணமும் நடைபெற்றுள்ளது. மேலும் அந்த இரண்டு பெண்களின் சம்மதம் கேட்ட பிறகு தான் இத்திருமணம் நடத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.  பழங்குடியின மக்கள் சிலரின் சமூக முறைப்படி ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம்  செய்ய அனுமதி உண்டு. ஆகவே இந்த பழங்குடியின இளைஞரின் திருமணம் செல்லும் வகையில் அமைந்துள்ளது. இந்த திருமணம் சம்பவம் செய்தி தற்போது பெரும் ஆச்சரியம் மற்றும் வரவேற்பை பெற்று வருகிறது. 

மேலும் படிக்க: அதிகமான குழந்தைகள் பெற்றால் ஒரு லட்சம் பரிசா? அமைச்சரின் அதிரடி அறிவிப்பு ஏன்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget