மேலும் அறிய

Eagle squad: இந்தியாவிலே முதன்முறை! கழுகுப்படையை உருவாக்கிய தெலங்கானா போலீஸ் - எதற்காக தெரியுமா?

Eagle Squad - Telengana Police : சட்டவிரோதமாக பறக்கும் ட்ரோன்களை வானிலே மடக்கிப்பிடிப்பதற்காக தெலங்கானா போலீஸாரால் கழுகுப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

Eagle Squad - Telengana Police : தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. ட்ரோன்களின் பயன்பாடு சமீபகாலமாக இந்தியாவில் அதிகரித்துள்ளது. சினிமா படப்பிடிப்பு, திருமண படப்பிடிப்பு, காவல்துறை கண்காணிப்பு என பலவற்றிற்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ட்ரோன்களை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத வேலைகளிலும் ஈடுபட்டு வரும் அபாயமும் உள்ளது.

கழுகுப்படை:

பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்டவற்றை கருதி ட்ரோன்களை பயன்படுத்த வேண்டுமென்றால் போலீசின் முன் அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும் என்று காவல்துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தெலங்கானா காவல்துறையினர் சட்டவிரோதமாக மற்றும் சந்தேகத்திற்குரிய வகையில் பறக்கவிடப்படும் ட்ரோன்களை பறிமுதல் செய்வதற்காகவும், வானிலே அதை மடக்கிப்பிடிக்கவும் புதிய உத்தியை கையாண்டுள்ளனர். இரைகளை தனது கூர்மையான மற்றும் வலிமையான கால்களால் கவ்விப்பிடிக்கும் திறன் கொண்ட கழுகுகளையே தெலங்கானா காவல்துறையினர் இதற்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இரண்டு தொழில் முறை பயிற்சியாளர்களை கொண்டு மூன்று கழுகுகளுக்கு, இதற்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று ஆண்டுகள் பயிற்சிக்கு பிறகு, வானில் பறக்கும் ட்ரோன்களை (Drones) கழுகுகள் கனகச்சிதமாக கவ்விப்பிடித்து கீழே கொண்டு வருகின்றன. ஓரிரு தினங்களுக்கு முன்பு, அந்த மாநில டி.ஜி.பி. ரவி குப்தா மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் முன்பு ஹைதரபாத் அருகே உள்ள மொய்னாபாத்தில் இதற்கான சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. கழுகின் மேலே கேமரா பொருத்தப்பட்டு, கீழே நடப்பவை அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது.

உலகிலேயே இரண்டாவது முறை:

இந்த கழுகுகளை வி.வி.ஐ.பி. வருகை, அவர்களின் பொதுமக்கள் கூட்டம் ஆகியவற்றிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். நாட்டிலே முதன்முறையாக கழுகு படைப்பிரிவு வைத்துள்ள ஒரே மாநிலம் தெலங்கானா மட்டுமே ஆகும். உலகிலே கழுகுகளை கண்காணிப்பிற்காக பயன்படுத்தும் இரண்டாவது நாடு என்ற பெருமையை இந்தியா இதன்மூலம் அடைந்துள்ளது. இதற்கு முன்பு, நெதர்லாந்து நாட்டில் கழுகுகள் பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

2020ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு, இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பிறந்த 3 மாதங்கள் முதல் இந்த கழுகுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், கழுகுகள் ட்ரோன்களை கீழே இழுத்து கொண்டு வரப்படும்போது சேதம் அடையாமல் அதை கீழே இறக்குவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா போலீசார் கழுகுகளை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதற்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க: பாதியில் நிறுத்தப்பட்ட திருப்பணிகள்; சிதிலமடைந்த நாகநாத சுவாமி கோயில் - சீரமைக்க கோரும் பக்தர்கள்

மேலும் படிக்க:  Crime: வேறு ஒருவருடன் நிச்சயம் செய்த காதலி: கையை துண்டாக வெட்டிய காதலன்: நடந்தது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget