மேலும் அறிய

Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து

பீகார் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்ட நிதிஷ் குமாரை வாழ்த்தியுள்ள தேஜஸ்வி யாதவ், புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என்று நம்புவதாக பதிவிட்டுள்ளார்.

பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, பீகார் முதலமைச்சராக 10-வது முறையாக இன்று நிதிஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், அவருக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், புதிய அரசு பொறுப்புடன் செயல்பட்டு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று நம்புவதாக கூறியுள்ளார். அவரது பதிவின் முழு விவரங்களை காண்போம்.

தேஜஸ்வி யாதவின் பதிவு என்ன.?

இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள தேஜஸ்வி யாதவ், “பீகார் முதலமைச்சராக பதவியேற்ற மதிப்பிற்குரிய ஸ்ரீ நிதிஷ் குமார் ஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற பீகார் அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

புதிய அரசாங்கம் பொறுப்புள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், அதன் வாக்குறுதிகள் மற்றும் அறிவிப்புகளை நிறைவேற்றும், பீகார் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் தரமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.“ என கூறியுள்ளார்.

பீகார் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி

நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 202 இடங்களை கைப்பற்றி, பாஜக- ஜெடியு-வின் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்-ஆர்ஜேடி-யின் மகாகட்பந்தன் கூட்டணி, 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதில் ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றது.

இந்நிலையில், பீகார் முதலமைச்சராக 10-வது முறையாக இன்று நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில் தேர்தலுக்கு பின் முதல் முறையாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ்

இதனிடையே, பீகாரில் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க, குறைந்தது 10 சதவீத தொகுதிகளை கைப்பற்றி இருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில், காங்கிரஸ் வெறும் 6 தொகுதியில்  மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த எண்ணிக்கை, மொத்தம் உள்ள 243 தொகுதிகளில், 10 சதவீததிற்கும் அதிகம் ஆகும். அதனால், கடந்த ஆட்சிக் காலத்தை போலாவே, தேஜஸ்வி யாதவ் பீகார் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக தொடர உள்ளார். பீகார் தேர்தலில், ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று தேஜஸ்வி யாதவ் எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget