Tamil Nadu Corona LIVE: கர்நாடகாவில் 9 ஆயிரத்து 808 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
கர்நாடகாவில் 9 ஆயிரத்து 808 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9 ஆயிரத்து 808 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 லட்சத்து 17 ஆயிரத்து 289 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் கர்நாடகாவில் 179 நபர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை கர்நாடகாவில் 32 ஆயிரத்து 99 நபர்கள் கொரோனாவிற்கு இதுவரை பலியாகி உள்ளனர்.
18ஆவது நாளாக கொரோனா தொற்று குறைவு
தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா தொற்றானது குறைந்து வருகிறது. மாநில அளவில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 112 பேருக்கு இன்று கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 18ஆயிரத்து 23 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 31ஆயிரத்து 45 பேர் இன்று குணமடைந்தனர். சிகிச்சை பலனின்றி 409 பேர் உயிரிழந்தனர்
மத்திய அரசு 44 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உத்தரவு
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தில் நாட்டில் 18 வயதை கடந்த அனைவருக்கும் வரும் ஜூன் 21-ந் தேதி முதல் மத்திய அரசே இலவசமாக கொரோனா தடுப்பூசியை செலுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். இதையடுத்து, மாநிலங்களுக்கு வழங்குவதற்காக 25 கோடி கோவிஷீல்டு மற்றும் 19 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி சென்னை வந்தது
கொரோனா வைரசில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், இன்று ஹைதராபாத்தில் இருந்து ஸ்புட்னிக் தடுப்பூசிகள் தனியார் விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளது.
கர்நாடகாவில் கொரோனா வைரசுக்கு 9 மருத்துவர்கள் மட்டுமே உயிரிழப்பு
நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தாக்கத்திற்கு பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட சுகாதாரப் பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 624 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் கர்நாடகாவில் 9 மருத்துவர்கள் மட்டுமே கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளதாகவும், முன்களப் பணியாளர்களை காக்க கர்நாடக அரசு எடுத்த நடவடிக்கைகளே காரணம் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.