Tamil Nadu Corona LIVE: கர்நாடகாவில் 9 ஆயிரத்து 808 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
தமிழ்நாட்டில் படிப்படியாகக் குறைந்துவரும் கொரோனா தொற்றின் அளவானது, நேற்று 19ஆயிரத்து 448-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய சில நாள்களைப் போலவே, குணமானவர்களின் எண்ணிக்கை தொற்றுப்பதிவைவிட அதிகமாகவே இருக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று 31ஆயிரத்து 360 பேர் குணமாகியுள்ளனர். சிகிச்சையில் இருந்தவர்களில் 351 பேர் உயிரிழந்தனர். தற்போது, மாநில அளவில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றியதால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தலிலும் மருத்துவமனை சிகிச்சையிலும் இருக்கின்றனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் 9 ஆயிரத்து 808 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9 ஆயிரத்து 808 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 லட்சத்து 17 ஆயிரத்து 289 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் கர்நாடகாவில் 179 நபர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை கர்நாடகாவில் 32 ஆயிரத்து 99 நபர்கள் கொரோனாவிற்கு இதுவரை பலியாகி உள்ளனர்.
18ஆவது நாளாக கொரோனா தொற்று குறைவு
தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா தொற்றானது குறைந்து வருகிறது. மாநில அளவில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 112 பேருக்கு இன்று கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 18ஆயிரத்து 23 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 31ஆயிரத்து 45 பேர் இன்று குணமடைந்தனர். சிகிச்சை பலனின்றி 409 பேர் உயிரிழந்தனர்





















