மேலும் அறிய

எதிர்காலத்தை நோக்கிய நீண்ட பயணத்திற்கு வாழ்த்துகள்...ஏபிபி நாடு குடும்பத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து..!

"ஏபிபி குழுமத்திற்கும் குறிப்பாக ஏபிபி நாடு குடும்பத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்காலத்தை நோக்கிய அவர்களின் நீண்ட போற்றத்தக்க பயணத்திற்காகவும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்"

ஏபிபி குழுமத்தால் தொடங்கப்பட்ட தமிழின் முதல் டிஜிட்டல் செய்தி தளமான ஏபிபி நாடு இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

மாநிலம் கடந்து நாடு கடந்து உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகளைக் கண்டறிந்து, சரியான நேரத்தில் முக்கிய கட்டுரைகளாக, செய்திகளாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதை கடமையாக கொண்டுள்ளது.

ஏபிபி நாடுவின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "ஏபிபி நாடு, இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி.

எதிர்காலத்தை நோக்கிய நீண்ட பயணத்திற்கு வாழ்த்துகள்...ஏபிபி நாடு குடும்பத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து..!

இந்த தருணத்தில், ஏபிபி குழுமத்திற்கும் குறிப்பாக ஏபிபி நாடு குடும்பத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்காலத்தை நோக்கிய அவர்களின் நீண்ட போற்றத்தக்க பயணத்திற்காகவும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 

இந்த இரண்டு ஆண்டு காலத்தில், பார்வையாளர்கள் மத்தியில் நற்பெயரை பெற்று பெரும் நம்பிக்கையை பெற்றுள்ளது ஏபிபி நாடு. ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கும் செழுமைப்படுத்துவதற்கும் பொறுப்பான சுதந்திரமான ஊடகம் அவசியம். தங்களின் சமூக மற்றும் தேச நலன்களை கருத்தில் கொண்டு செயல்படுவது ஊடகத்திற்கு அவசியமான ஒன்று. 

தமிழ் மொழி ஒரு பழமையான மொழி. செழுமையான இலக்கிய வளத்தை கொண்டுள்ளது. 9 கோடி பெருமைமிகு பேச்சாளர்களை கொண்டுள்ளது. உண்மையை சொல்லபோனால் சர்வதேச மொழியாக உள்ளது. அது, இந்தியாவின் பெருமை. 

எதிர்காலத்தை நோக்கிய நீண்ட பயணத்தில் தமிழ் கலாசாரம், ஆன்மீகம், இலக்கிய வளத்தை பறைசாற்றுவது மட்டும் இன்றி நெறி சார்ந்த இதழியிலில் ஏபிபி நாடு நிலையான உறுதியை பூண்டு இருக்கும் என நம்பிக்கை உள்ளது.

ஏபிபி நாடுவுக்கும் அதன் ஒட்டுமொத்த குழுவிற்கும் நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நன்றி. வாழ்க தமிழ். ஜெய்ஹிந்த்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Kanimozhi MP:
Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Nomination Issue : வேட்புமனு சர்ச்சை” இது ஒரு விஷயமே இல்ல” அ.மலையின் புது TWIST | BJPSingai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Kanimozhi MP:
Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
Gouri Kishan : என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
Lok Sabha Elections 2024: பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்  -  மதுரையில் எடப்பாடி பழனிசாமி
பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி
Prithviraj Sukumaran : 98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
ICC Elite Panel: ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!
ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!
Embed widget