மேலும் அறிய

கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்துகளை வழங்க மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Tamil Nadu Corona Virus LIVE Updates 3 June 2021 chennai Coimbatore Covid19 latest news Updates கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்துகளை வழங்க மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
கொரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ்

Background

21:48 PM (IST)  •  03 Jun 2021

கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்துகளை வழங்க மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, மாநில அரசு ஏற்கனவே 35 ஆயிரம் குப்பிகள் மருந்துகளுக்கு ஆர்டர் செய்திருக்கிறது. ஆனால், அதன் விநியோகம் மத்திய அரசின் ஒதுக்கீட்டின் அடிப்படையிலே கொடுக்கப்படுகிறது. இதுவரை 1,790 குப்பிகள் மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த தமிழ்நாட்டிற்கு 30 ஆயிரம் ஆம்போடெரிசின் பி மருந்துக்குப்பிகளை வழங்க வேண்டும். இதில், தனிப்பட்ட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

20:47 PM (IST)  •  03 Jun 2021

தமிழகத்திற்கு ஜூன் மாதம் 18.36 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் - மத்திய அரசு தகவல்

மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்திற்கு கடந்த ஜூன் 2-ந் தேதி வரையில் மட்டும் ஒரு கோடிககும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வரும் 15ந் தேதி முதல் 30-ந் தேதி வரையில் 18.36 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு விலையில்லாமல் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசிடம் 7.24 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்படாமல் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  

 

 

 

 

 

 

 

19:45 PM (IST)  •  03 Jun 2021

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து 24 ஆயிரத்து 405 ஆக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 460 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 32 ஆயிரத்து 221 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தமாக 21 லட்சத்து 72 ஆயிரத்து 751 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 2 ஆயிரத்து 62 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கோவையில் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 980 ஆக பாதிப்பு பதிவாகி உள்ளது.

17:48 PM (IST)  •  03 Jun 2021

எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்

கொரோனா பரவலில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வ ஏற்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 12 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி பரிசோதனை இன்று நடத்தப்பட்டது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் இன்றும் ஓரிரு தினங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்ட உள்ளது.  

16:53 PM (IST)  •  03 Jun 2021

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் குறைந்தது

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள எட்டு மாநிலங்களில் டெல்லியும் ஒன்றாக உள்ளது. அந்த மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள், ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக கடந்த 74 நாட்களுக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தினசரி வீதம் 1 சதவீத்திற்கும் கீழ் இரு தினங்களுக்கு முன்பு குறைந்தது. இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 487 ஆக உயர்ந்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு வீதம் 0.61 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 45 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,058 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசிய என்ன?
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசிய என்ன?
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

லேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசிய என்ன?
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசிய என்ன?
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
நீங்க என்ன மன்னரா? நாக்கை அடக்கி பேசுங்க! முடியுமா முடியாதா? – பிரதானை மிரட்டிவிட்ட முதல்வர் ஸ்டாலின்
நீங்க என்ன மன்னரா? நாக்கை அடக்கி பேசுங்க! முடியுமா முடியாதா? – பிரதானை மிரட்டிவிட்ட முதல்வர் ஸ்டாலின்
Rain Alert : வாட்டி வதைக்கும் வெயில்.. 12 மாவட்டங்களுக்கு கனமழை.. ஆரஞ்சு அலட் எச்சரிக்கை..
Rain Alert : வாட்டி வதைக்கும் வெயில்.. 12 மாவட்டங்களுக்கு கனமழை.. ஆரஞ்சு அலட் எச்சரிக்கை..
மக்களே நாளைக்கு 8 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கு! ப்ளான் பண்ணிக்கோங்க! எங்கெல்லாம்?
மக்களே நாளைக்கு 8 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கு! ப்ளான் பண்ணிக்கோங்க! எங்கெல்லாம்?
‘நீங்க நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை’ – மாற்றி பேசும் மத்திய அமைச்சர்? - கொந்தளித்த அன்பில் மகேஸ்
‘நீங்க நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை’ – மாற்றி பேசும் மத்திய அமைச்சர்? - கொந்தளித்த அன்பில் மகேஸ்
Embed widget