Breaking | யூனிட்டி - 22 விண்கலத்தில் விண்வெளி புறப்பட்ட மனிதர்கள்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Background
தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
யூனிட்டி - 22 விண்கலத்தில் விண்வெளி புறப்பட்ட மனிதர்கள்
அமெரிக்க தனியார் நிறுவனத்தின் யூனிட்டி-22 விண்கலம் மூலம் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் உள்பட 5 பேர் கொண்ட குழு விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றது. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளி பெண் ஸ்ரீஷா பாண்ட்லா விண்கலத்தில் சென்றுள்ளார்.
சென்னையில் பரவலாக மழை
சென்னை கே.கே.நகர், ராமாபுரம், சித்தாலபாக்கம், தாம்பரம், அனகாபுத்தூர், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.




















