மேலும் அறிய

SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி

ஸ்வமித்வா திட்டத்தில், பிரதமர் மோடி 65 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு இன்று சொத்து அட்டைகள வழங்கியிருக்கார். ஸ்மித்வா திட்டம் என்பது என்ன.? இதனால உங்க சொத்து பாதுகாப்பா இருக்குமா.? பார்க்கலாம்...

ஸ்வமித்வா திட்டம் என்பது என்ன.?

ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் கிராமங்களில் கணக்கெடுப்பு செய்து, வீடுகள் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு 'உரிமைகளின் பதிவு' வழங்குவதன் மூலம், கிராமப்புற இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஸ்வமித்வா திட்டம் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.

மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் மூலம், கிராமப் பகுதிகளில் உள்ள நிலங்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு சட்டப்பூர்வமாக சொத்து அட்டைகள் வழங்கப்படுகின்றன.

சொத்துகளை பணமாக்குவதற்கும், வங்கியில் கடன் பெற்று அதன் மூலமாக நிதிநிறுவனக் கடனை அடைப்பதற்கும், சொத்து தொடர்பான தகராறுகளை குறைப்பதற்கும், கிராமப்புறங்களில் சொத்து வரியை சிறந்த முறையில் மதிப்பீடு செய்வதற்கும், கிராம அளவில் விரிவான திட்டமிடலை செயல்படுத்துவதற்கும் இந்த திட்டம் உதவுகிறது.

2.25 கோடி சொத்து அட்டைகள் தயார்

இந்த திட்டத்தின் மூலம், இதுவரை 3.17 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது. இது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கிராமங்களில் 92 சதவீதமாகும்.  இதுவரை, 1.53 லட்சம் கிராமங்களுக்கு, 2.25 கோடி சொத்து அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

அதன்படி, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், திரிபுரா, கோவா, உத்தராகண்ட், ஹரியானா ஆகியவற்றில் இந்தத் திட்டம் முழு வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், பல யூனியன் பிரதேசங்களிலும் ட்ரோன் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 65 லட்சம் பேருக்கு சொத்து அட்டைகள் வழங்கிய பிரதமர்

ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 230 மாவட்டங்களைச் சேர்ந்த 50,000-க்கும் அதிகமான கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு, 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை காணொலி காட்சி மூலம் வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, பயனாளிகளிடம் கலந்துரையாடினார். ஒரே நேரத்தில் இத்தனை லட்சம் பயனாளிகளுக்கு சொத்து அட்டைகள் வழங்கிய நிகழ்வு ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகும்.

எட்டப்பட்ட 90 சதவீத இலக்கு

ஸ்மித்வா திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள 3.44 லட்சம் கிராமங்களில் ஆளில்லா விமானம் மூலம் நிலங்களை கண்க்கீடு செய்து வரைபடம் தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதில், தற்போது வரை 3.17 லட்சம் கிராமங்களில் கணக்கீடு செய்யும் பணி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 90 சதவீதமாகும். முழுமையான இலக்கு 2026-ல் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்ட சோதனையில் மட்டுமே பங்கேற்ற தமிழ்நாடு

மத்திய அரசின் இந்த பிரமாண்ட திட்டத்தில் மொத்தம் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன. அதில், தமிழ்நாடு, தெலங்கானா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் சோதனை கட்டத்தில் மட்டுமே பங்கேற்றன. மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் இத்திட்டத்தில் இணையவில்லை.

சொத்துகளை காப்பாற்ற சொத்து அட்டை

இந்த சொத்து அட்டைகளை வைத்திருப்பதன் மூலம், சொத்துகளை அபகரிக்கும் செயல் கட்டுப்படுத்தப்படும். நாட்டில், ஆதார் அட்டை இல்லாமல் எப்படி எந்த ஒரு பரிவர்த்தனையும் தற்போது செய்ய முடியாதோ, அதேபோல், இந்த சொத்து அட்டை இல்லாமல், சொத்து தொடர்பான எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்ய முடியாது. மொத்தத்தில், இத்திட்டம் மூலம் வழங்கப்படும் சொத்து அட்டைகள், நமது சொத்துகளை பாதுகாக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.

 

தலைப்பு செய்திகள்

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget