மேலும் அறிய

`பரிசோதனை மேற்கொண்ட 3100 பேரில் ஒருவருக்கும் கொரோனா இல்லை’ - சூரத் மாநகராட்சி அறிவிப்பு!

குஜராத் மாநிலம் சூரத்திற்குள் தீபாவளி முடிந்து வந்தவர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் கையோடு தடுப்பூசி போட்டுக் கொள்ள திரளாக மக்கள் வந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத் நகரத்திற்குள் தீபாவளி பண்டிகை முடிந்து வந்தவர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் கையோடு தடுப்பூசி போட்டுக் கொள்ள திரளாக மக்கள் வந்துள்ளனர். 

தீபாவளி பண்டிகை முடிந்து, சூரத் நகரத்திற்குள் சாலை, ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், விமான நிலையம் ஆகிய மார்க்கங்களின் மூலமாக நுழைந்த 3100 பயணிகள் கடந்த இரண்டு நாள்களாகக் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 3100 பேர்களுள் ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரத் முனிசிபல் கார்ப்பரேஷனில் பணியாற்றும் சுகாதாரத்துறையினரால் ரேபிட் பரிசோதனைகளும், ஆர்டி - பிசிஆர் பரிசோதனைகளும் நகரத்திற்குள் நுழையும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. 

`பரிசோதனை மேற்கொண்ட 3100 பேரில் ஒருவருக்கும் கொரோனா இல்லை’ - சூரத் மாநகராட்சி அறிவிப்பு!
கோவிட் பரிசோதனை

 

கடந்த 10 நாள்களுக்கு முன்பு, சூரத் முனிசிபல் கார்ப்பரேஷனைச் சேர்ந்த சுகாதாரத் துறையினர் தீபாவளி பண்டிகையை ஒட்டி, வெளியூருக்குச் செல்பவர்கள் மீண்டும் ந்கருக்குள் நுழையும் போது, 72 மணி நேரங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை முடிவுகளோடு நுழைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தது. கொரோனா தடுப்பூசியை இரண்டு தவணைகள் செலுத்தி இருந்தாலும், அவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டு இருந்தது. சூரத் மாநகரத்திற்குள் பணியாற்றும் பலரும் வெளியூரைச் சேர்ந்த தொழிலாளிகள். சூரத்தில் உள்ள வைரம், பின்னலாடை முதலான தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கமான ஒன்று.

எனினும், மீண்டும் சூரத் நகரத்திற்குள் நுழைந்தோரின் பரிசோதனை முடிவுகள் எதுவும் சோதிக்கப்படாமல், நகரத்திற்குள் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக பரிசோதனைகளை மேற்கொள்வதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சமீபத்திய கொரோனா பரிசோதனை முடிவுகளை எடுத்து வராதவர்கள் சூரத் நகரத்திற்குள் நுழையும் போதே பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

`பரிசோதனை மேற்கொண்ட 3100 பேரில் ஒருவருக்கும் கொரோனா இல்லை’ - சூரத் மாநகராட்சி அறிவிப்பு!
தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தவர்கள்

 

`சூரத் நகரத்திற்குள் நுழையும் வெவ்வேறு இடங்களில் தனிநபர்கள் பலரையும் கண்டறிந்து, அவர்களுள் 3100 பேருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அவர்களுள் ஒருவர் கூட கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகவில்லை என இதுவரை வந்துள்ள தகவல்கள் காட்டுகின்றன’ என்று சுகாதாரத்துறையைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் கூறியுள்ளார். 

இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து சூரத் நகருக்குள் நுழைந்த மக்கள் பலரும் திரளாக சென்று கொரோனா தடுப்பூசியையும் போட்டுக் கொண்டனர். 

கடந்த அக்டோபர் மாதம், சூரத் நகரத்திற்குள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டதால், `100 சதவிகிதத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநகரம்’ என்று அறிவித்துக் கொண்டது. எனினும், முன்களப் பணியாளர்களுள் 15 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்ற செய்திகள் வெளியாகின. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget