மேலும் அறிய

`சூழலைக் கெடுக்காமல் ஒற்றுமையாக வாழுங்கள்!’ - வெறுப்புப் பேச்சு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!

ஹரித்வார் தரம் சன்சத் வெறுப்புப் பேச்சுகளின் மீதான விசாரணையில் வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்பவருக்குப் பிணை வழங்க உத்தராகண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஹரித்வார் தரம் சன்சத்தில் நிகழ்ந்த வெறுப்புப் பேச்சுகளின் மீதான விசாரணையில் வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்பவருக்குப் பிணை வழங்க உத்தராகண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒன்று, ஜிதேந்திர தியாகி போன்றோர், `மொத்த சூழலையும் கெடுக்கிறார்கள்’ என்று கூறியுள்ளதோடு, அவரது பிணை மனுவின் மீதான உத்தராகண்ட் மாநில அரசின் கருத்தைக் கேட்டுள்ளது. 

சர்ச்சைக்குரிய ஹரித்வார் தரம் சன்சத் நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், `பிறர் உணர்வதற்கு முன், அவர்களை உணரச் சொல்லுங்கள். இவர்கள் உணரவே இல்லை. மொத்த சூழலையும் கெடுப்பது போல நடந்துகொள்கிறார்கள்’ எனச் சுட்டிக்காட்டியுள்ளது. 

`சூழலைக் கெடுக்காமல் ஒற்றுமையாக வாழுங்கள்!’ - வெறுப்புப் பேச்சு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!
ஜிதேந்திர தியாகி (இடமிருந்து மூன்றாம் நபர்)

 

இந்து மதத்தைத் தழுவதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் ஷியா வக்ப் வாரியத்தின் முன்னாள் தலைவரான ஜிதேந்திர தியாகி கடந்த மார்ச் 8 அன்று உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் தனக்குப் பிணை வழங்க மறுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினார். `பதில் மனுவைத் தாக்கல் செய்யுங்கள். என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் மொத்த விவகாரத்தையும் அணுக வேண்டும்.. தண்டனை, எத்தனை நாள்கள் காவல் வைப்பது முதலானவற்றை முடிவு செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். 

இந்நிலையில், இன்று (மே 12) வழக்கு விசாரணையின் போது, ஜிதேந்திர தியாகியின் வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவிடம், `தரம் சன்சத் என்றால் என்ன?’ என உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்ப, அவர், `நான் ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்தவன். எனக்கு தெரியாது.. நான் வீடியோக்களில் பார்த்துள்ளேன்.. அதில் காவி உடை அணிந்த நபர்கள் ஒன்றுகூடி, மேடைகளில் பேசுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார். 

`சூழலைக் கெடுக்காமல் ஒற்றுமையாக வாழுங்கள்!’ - வெறுப்புப் பேச்சு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!
ஹரித்வார் தரம் சன்சத்

 

இதனைக் கேட்ட நீதிபதி அஜய் ரஸ்தோகி, `சூழலைக் கெடுக்கிறார்கள்.. ஒன்றாக அமைதியாக வாழுங்கள்.. வாழ்க்கையை மகிழ்ந்து கொண்டாடுங்கள்’ எனக் கூறியுள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர் ஏற்கனவே ஜனவரி மாதம் முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளது. 

கடந்த ஜனவரி 13 அன்று, இரு தரப்பினரிடையே மோதலைத் தூண்டுவது, பிற சமயத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகப் பேசுவது முதலான வழக்குகளின் கீழ் ஜிதேந்திர தியாகி கைது செய்யப்பட்டார். வெறுப்பைத் தூண்டும் விதமாக அவரது ஆபாச பேச்சுகள் இருந்ததாகக் கூறி, உத்தராகண்ட் மாநில உயர் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget