மேலும் அறிய

இந்தியா-சீனா எல்லை சர்ச்சை: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்! அதிர்ச்சியில் காங்கிரஸ், நடந்தது என்ன?

பாரத் ஜோடோ யாத்திரை 2022 இன் போது ராகுல் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வந்த ராகுலை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரை 2022 இன் போது ராகுல் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வந்த ராகுலை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. இருப்பினும், லக்னோவில் நடைபெற்று வரும் வழக்குக்கு உச்ச நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது.

வழக்கு விசாரணை-நீதிபதிகள் கண்டனம்

இந்த வழக்கானது நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைந், 'சீனா 2000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் அங்கு இருந்தீர்களா? உங்களிடம் என்ன ஆதாரம் இருந்தது? நீங்கள் ஒரு உண்மையான இந்தியராக இருந்தால், அப்படிச் சொல்ல முடியாது. எல்லையில் மோதல் ஏற்படும்போது, இரு தரப்பு ராணுவமும் இழப்பைச் சந்திப்பது அசாதாரணமானது அல்ல' என்று கூறியது.

டிசம்பர் 16, 2022 அன்று பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி இந்தக் கருத்தைத் தெரிவித்தார். ராகுல் காந்தி தனது உரையில், சீன வீரர்கள் இந்திய வீரர்களை அடிப்பதாக கூறியிருந்தார். இந்தக் கூற்றின் அடிப்படையில், எல்லைச் சாலை அமைப்பின் முன்னாள் இயக்குநர் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா, லக்னோவில் ராகுல் மீது குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

மனுதாரர் சொன்னது என்ன?

லக்னோ எம்பி எம்எல்ஏ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில், ஸ்ரீவஸ்தவா, இந்திய எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததற்கு நமது வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் டிசம்பர் 12, 2022 அன்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டதாகக் கூறியுள்ளார். இதன் பிறகு சீன ராணுவம் திரும்பிச் சென்றது. இதையும் மீறி, ராகுல் காந்தி ராணுவத்தை அவமதிக்கும் வகையில் தவறான அறிக்கையை வெளியிட்டார். இது அவரையும் இந்திய வீரர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மே மாதம், அலகாபாத் உயர் நீதிமன்றம் ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்தது.
இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் எதிர்த்தார். புகார்தாரர் வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் அல்ல என்று அவர் கூறினார், ஆனால் உயர் நீதிமன்றம் ராகுலின் மனுவை நிராகரித்து, ராணுவத்தை மதிக்கும் எந்தவொரு நபரும் அத்தகைய அறிக்கையால் காயமடையக்கூடும் என்று கூறியது. கருத்து சுதந்திரத்திற்கும் ஒரு வரம்பு உள்ளது. அதன் பெயரில் எதையும் சொல்ல அனுமதி இல்லை.

உச்ச நீதிமன்றத்தில் ராகுல் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி , இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்பு கீழ் நீதிமன்றம் தனது தரப்பைக் கேட்கவில்லை என்று கூறினார். இது குறித்து, நீதிபதிகள் அவரது பேச்சில் குறுக்கிட்டு, இந்த வாதம் உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படவில்லை என்று கூறினர். இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்படவில்லை என்பதை சிங்வி ஒப்புக்கொண்டார்

”நாடளுமன்றத்தில் ஏன் பேசவில்லை”

சுமார் 5 நிமிடங்கள் நீடித்த விசாரணையின் போது , எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் ஏன் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்புவது பொருத்தமானது என்று கருதவில்லை என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அவர் ஏன் அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டார் ? விசாரணையின் முடிவில் , புகார்தாரருக்கும் உத்தரபிரதேச அரசுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி பதில் கோரியது. தற்போதைக்கு, இந்த வழக்கில் கீழ் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் செப்டம்பரில் விசாரிக்கும்.

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget