மேலும் அறிய

Hijab Case : நெருங்கும் இறுதித் தேர்வுகள்... ஹிஜாப் தடை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கர்நாடகாவில் ஹிஜாப் தடை உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க ஹோலி விடுமுறைக்குப் பின்னர் அமர்வு உருவாக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கர்நாடகாவில் ஹிஜாப் தடை உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க ஹோலி விடுமுறைக்குப் பின்னர் அமர்வு உருவாக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஹிஜாப் தடை

கர்நாடகாவில் கடந்தாண்டு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் கலந்துக் கொள்ளக்கூடாது என உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ. கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு இஸ்லாம் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஆனால் இதனை கண்டித்து இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தியதால் கர்நாடகாவின் மாண்டியா, சிவமொக்கா, பெலகாவில் பகுதிகளில் கடும் மோதல் ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை  விடப்பட்டு இயல்புநிலை திரும்பிய பிறகு கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள ஆடை, கயிறு உள்ளிட்டவற்றை அணிந்து வர மாநில அரசு தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இதனால் அதிருப்தியடைந்த இஸ்லாம் மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கில் மாணவிகளின் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்பிறகு  உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அந்த மாணவிகள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இதனால் வழக்கு அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் மீது விசாரணை விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

நெருங்கும் இறுதியாண்டு தேர்வு 

இந்த நிலையில் தான், கர்நாடகாவைச் சேர்ந்த சில இஸ்லாம் மாணவிகள், உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், கர்நாடகாவில் வரும் மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகள் தொடங்குகின்றது. இதனால் தங்களுக்கு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த கோரிக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் முன்வைக்கப்பட்டது. அப்போது மார்ச் 9 ஆம் தேதி கர்நாடகாவில் பள்ளி தேர்வுகள் தொடங்குகின்றது. இதில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால்  அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் என மாணவிகள் சார்பில் ஆஜரான வக்கீல், சாதன் பராசத் தெரிவித்தார்.

மேலும் பெரும்பாலான மாணவிகள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள்.  தேர்வுகள் அரசு பள்ளிகளில் நடைபெறும் என்பதால் அங்கு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதியில்லை. எனவே இதனை அவசர வழக்காக கருதிக் கொண்டு மாணவிகள் தாக்கல் செய்த மனு மீது உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்  என்றும் கூறினார். ஆனால் இந்த முறையீட்டை நிராகரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஹோலி பண்டிகையை முன்னிட்டு உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. அதன் பிறகு இந்த மனுவை விசாரிக்க அமர்வு உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

HIV Cases: அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?
லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?
Longest Serving PM Modi: ‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget