மேலும் அறிய

உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் 2 நீதிபதிகள்... தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் உள்பட இருவர் பதவியேற்பு..!

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே. கவுல், கே.எம் ஜோசப், அஜய் ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய கொலிஜியம், இவர்களை நீதிபதிகளாக மே 16ஆம் தேதி பரிந்துரை செய்தது.

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மேலும் இருவர் இன்று பதவியேற்றுள்ளனர். ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த குமார் மிஸ்ரா, தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கல்பாத்தி வேங்கடராமன் விஸ்வநாதன் ஆகியோருக்கு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் 2 நீதிபதிகள்:

பதவியேற்பு விழா உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தற்போது, உச்ச நீதிமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் நீதிபதிகள் உள்ளனர். தற்போது பதவியேற்றுள்ள பிரசாந்த குமார், விஸ்வநாதன் உள்பட 34 நீதிபதிகள் உள்ளனர். இவர்களை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேற்று உத்தரவு வெளியிட்டார்.

பின்னர், இதுதொடர்பான அறிவிப்பை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வெளியிட்டார். இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே. கவுல், கே.எம் ஜோசப், அஜய் ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய கொலிஜியம், இவர்களை நீதிபதிகளாக மே 16ஆம் தேதி பரிந்துரை செய்தது.

நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எம்.ஆர். ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, அவர்களின் இடத்தை நிரப்பும் வகையில் புதிதாக இரண்டு நீதிபதிகளை கொலிஜியம் பரிந்துரை செய்தது.

இந்திய தலைமை நீதிபதியாகும் தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன்:

உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.பி. பர்திவாலாவை தொடர்ந்து, வரும் 2030ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இந்திய தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் பதவியேற்க உள்ளார். வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படுவது இது 9ஆவது முறை. 

அதேபோல, 4ஆவது முறையாக, நீதிபதியாக இருந்த ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு அவர் தலைமை நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார்.

கடந்த 1966ஆம் ஆண்டு, மே 26ஆம் தேதி பிறந்த விஸ்வநாதன், கோவை சட்டக் கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் பட்டப்படிப்பை முடித்தார். மேலும், 1988இல் தமிழ்நாடு பார் கவுன்சிலில் சேர்ந்தார். 20 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்த பின்னர் 2009இல் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 

அரசியலமைப்பு, குற்றவியல், வணிகம், திவால் மற்றும் நடுவர் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பரந்த அளவிலான வழக்குகளில் ஆஜராகியுள்ளார். பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு உதவி புரிந்துள்ளார்.

அதேபோல, நீதிபதி மிஸ்ரா, சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து பிரதிநிதித்துவம் இல்லை என்பதை கருத்தில் கொண்டு கொலீஜியம் மிஸ்ராவை நீதிபதியாக பரிந்துரை செய்தது.

நீதிபதி மிஸ்ரா, டிசம்பர் 10ஆம் தேதி, 2009ஆம் ஆண்டு, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அக்டோபர் 13, 2021 அன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget