மேலும் அறிய

முடிஞ்சது சண்டை.. காஷ்மீருக்கு ஹனிமூன் போக ரெடியா! பயணிகள் விமான சேவை தொடக்கம்

மோதலை நிறுத்தி கொள்வதாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், ஸ்ரீநகர், சண்டிகர், குலு மணாலி உள்ளிட்ட விமான நிலையங்கள் திறக்கப்பட்டு, பயணிகள் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக AAI அறிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்து வந்த சண்டையால் மூடப்பட்ட 32 விமான நிலையங்கள், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மோதலை நிறுத்தி கொள்வதாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், ஸ்ரீநகர், சண்டிகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட விமான நிலையங்கள் திறக்கப்பட்டு, பயணிகள் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அறிவித்துள்ளது.

முடிவுக்கு வந்தது சண்டை:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை கதிகலங்க வைத்தது இந்தியா. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றது இந்தியா. இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற பாகிஸ்தான், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள், ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.

ஆனால், இஸ்ரேல், ரஷிய மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் முயற்சியை இந்தியா முறியடித்தது. இதையடுத்து, நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, மோதலை நிறுத்தி கொள்வதாக இரண்டு நாடுகளும் அறிவித்தன.

காஷ்மீருக்கு ஹனிமூன் போக ரெடியா!

இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 32 விமான நிலையங்கள் மூடப்பட்டன. தற்போது சண்டை முடிவுக்கு வந்ததையடுத்து, மூடப்பட்ட விமான நிலையங்கள் திறக்கப்பட்டு, பயணிகள் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அறிவித்துள்ளது.

ஸ்ரீநகர், சண்டிகர், அமிர்தசரஸ், ஜெய்சால்மர், ஜாம்நகர், ஜோத்பூர், அதம்பூர், அம்பாலா, அவந்திபூர், பதிண்டா, பூஜ், பிகானேர், ஹல்வாரா, ஹிண்டன், ஜம்மு, காண்ட்லா, காங்க்ரா (ககல்), கேஷோத், கிஷன்கர், குலு மணாலி (பூந்தர்), லே, லூதியானா, முந்த்ரா, நாலியா, பாட்டியல், பாட்டியா, (ஹிராசர்), சர்சாவா, சிம்லா, தோயிஸ், உத்தரலை ஆகிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்:

இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல முக்கிய விமான நிறுவனங்களும் இந்த விமான நிலையங்களில் தங்கள் சேவைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டவர்களுக்கு, இந்த செய்தி மகிழ்ச்சியை அளித்துள்ளது.  

விமான நிறுவனங்களை பயணிகள் நேரடியாக தொடர்பு கொண்டு, விமான சேவை தொடர்பான தகவல்களை பெற்று கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் 26 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி இந்தியா தனது வான்வெளியை பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு மூடியது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget