மேலும் அறிய

பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு திட்டம்...மீண்டும் தொடங்கிய மத்திய அரசு

பிச்சை எடுப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலான திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

பிச்சை எடுப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலான திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

 

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நகராட்சிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு ‘SMILE-75’ பிச்சை எடுப்பவர்களுக்கான விரிவான மறுவாழ்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி மருத்துவ காப்பீடு வழங்கப்படவுள்ளது.

2025-2026 வரை 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அமைச்சகத்தின் ஸ்மைல் திட்டத்தின் (விளிம்புநிலை தனி நபர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் ஆதரவு) ஒரு பகுதியாக இந்த முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "SMILE-75 திட்டத்தின் கீழ், 75 மாநகராட்சிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து பிச்சையெடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு விரிவான நலன்சார்ந்த நடவடிக்கைகளை எடுக்கப்பட உள்ளது. 

மறுவாழ்வு, மருத்துவ வசதி, ஆலோசனை, விழிப்புணர்வு, கல்வி, திறன் மேம்பாடு, பொருளாதார உதவி மற்றும் பிற அரசு நலத்திட்டங்களில் கவனம் செலுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

75 நகராட்சிகளில் பிச்சை எடுக்கும் தொழிலை ஒழிப்பதே சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீரேந்திர குமாரால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

மார்ச் 2021 இல் நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, "2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவில் 4,13,670 பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். இதில் 2,21,673 ஆண் பிச்சைக்காரர்களும், 1,91,997 பெண் பிச்சைக்காரர்களும் அடங்குவர்.

பராமரிப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு, தங்குமிடங்களில் பணி மையங்களை நிறுவ நிதி உதவி வழங்குவதற்காக 1992-93 முதல் 1997-98 வரை பிச்சைக்காரர் தடுப்புக்கான திட்டத்தை அரசு முன்பு செயல்படுத்தியது. ஆனால் 1998-99இல் இத்திட்டம் நிறுத்தப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget