மேலும் அறிய

இஸ்லாமியப் பெண்களுக்கு எதிராகப் பாலியல் மிரட்டல்: மன்னிப்பு கேட்க மறுத்த சாமியார்

சீதாபூரில் உள்ள கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசீன் ஆசிரமத்தின் மஹந்த் பஜ்ரங் முனி தாஸ், ஏப்ரல் 2 அன்று முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வுடன் பேசியதாகக் கூறப்படுகிறது.

முஸ்லீம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்ட சீதாபூர் சாமியாருக்கு ஞாயிற்றுக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது. அவரது கருத்துக்காக, அவர் தன் மீது எந்த வகையான தாக்குதலுக்கும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். இப்படிக் கூறியதற்கு ஏதேனும் வருத்தப்படுகிறாரா  என்று அவரிடம் கேட்டபோது, ​​"எனக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை. நான் சொன்னது என் மதத்திற்காகவும், நம் பெண்களுக்காகவும். என் மதத்திற்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்" என்றார்.

சீதாபூரில் உள்ள கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசீன் ஆசிரமத்தின் மஹந்த் பஜ்ரங் முனி தாஸ், ஏப்ரல் 2 அன்று முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வுடன் பேசியதாகக் கூறப்படுகிறது. அதன் வீடியோ பின்னர் சமூக ஊடக தளங்களில் வெளிவந்தது.

ஒரு மசூதிக்கு வெளியே அவர் பேசிய இரண்டு நிமிட வீடியோவில், அவர் ஒரு சமூகத்தைக் குறிக்க "ஜிஹாதி" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையும், அந்த சமூகத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவரால் எந்த இந்துப் பெண்ணை துன்புறுத்தினாலும், பதிலுக்கு அவர் அவர்களது பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வேன் என்று மிரட்டுவதையும் கவனிக்க முடிந்தது. 

அவர் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை மாலை அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது.
இதையடுத்து ஏப்ரல் 13ஆம் தேதி உத்தரபிரதேச காவல்துறையினரால் சீதாபூரில் கைது செய்யப்பட்டார்.
சாமியார் கைது செய்யப்படுவதில் நிலவிய தாமதம் குறித்து கேள்வி எழுப்பிய சமாஜ்வாதி கட்சி, ஆளும் பாஜகவை "சகோதரத்துவத்தின் மிகப்பெரிய எதிரி" என்று கூறியது.

"காவல்துறையினர் ஏன் இன்னும் வெறுங்கையுடன் இருக்கிறார்கள்? அரசு பதில் சொல்ல வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எப்போது? முதல்வர்தான் இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்," என்று அந்தக் கட்சி ஒரு ட்வீட்டில் கேள்வி எழுப்பியிருந்தது.

நாற்பது வருட காத்திருப்புக்குப் பிறகு, கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) இருந்து இடம்பெயர்ந்த 63 இந்துக் குடும்பங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு செவ்வாயன்று வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளை வழங்கியது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் விவசாய தேவைகளுக்காக இரண்டு ஏக்கர் நிலமும், கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் ஒரு வீடும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்,  "இந்த குடும்பங்களின் இத்தகைய அவலங்களுக்கு முன்னாள் ஆட்சி செய்த அரசுகளே பொறுப்பு. இந்தக் குடும்பங்கள் அனைத்தும் 1970களில் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வந்து புலம்பெயர்ந்தவர்கள். அதாவது தற்போது பங்களாதேஷ் என்று பெயர் கொண்டுள்ள நாட்டில் இருந்து இடம்பெயர்ந்து மீரட் மாவட்டத்தில் உள்ள ஹஸ்தினாபூர் நகரத்தில் உள்ள நூல் ஆலையில் வேலை செய்தனர்"  என்றார். 1984 ஆம் ஆண்டு நூல் ஆலை மூடப்பட்டதாகவும், அவர்களில் சிலருக்கு மட்டுமே புனர்வாழ்வளிக்கப்பட்டதாகவும், 65 குடும்பங்கள் தங்கள் மறுவாழ்வுக்காகக் காத்திருந்ததாகவும் யோகி கூறினார். "உங்களது 38 ஆண்டுகால காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துவிட்டது” என்று துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஸ்வதந்த்ரா தேவ் சிங் முன்னிலையில் யோகி ஆதித்யநாத் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் ED ரெய்டு..
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் ED ரெய்டு..
Top 10 Headlines: இந்தியாவில் எபோலா தொற்று? .. உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 Headlines: இந்தியாவில் எபோலா தொற்று? .. உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
Karnataka CM: முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
EPS ADMK: கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
US Iran War: மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!
பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!
Karnataka CM: முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
அரசு பள்ளிகளில் 50ஆயிரம்+ காலியிடங்கள்: தகுதித்தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை
அரசு பள்ளிகளில் 50ஆயிரம்+ காலியிடங்கள்: தகுதித்தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை
Embed widget