மேலும் அறிய

Viral video :பீகாரில் களைக்கட்டும் துப்பாக்கி கலாச்சாரம் ! பிஸ்டலுடன் குத்தாட்டம் போட்ட நடன கலைஞர் ! வைரல் வீடியோ!

ஆனால் அந்த காலம் எல்லாம் மாறி இன்று துப்பாக்கி வைத்திருப்பவர்தான் மாஸ் என்பது போல கௌரவ அடையாள சின்னமாகவே மாறியிருக்கிறது

வட இந்தியாவில் குறிப்பாக பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் துப்பாக்கி கலாச்சாரம் கொடிக்கட்டி பறக்க தொடங்கிவிட்டது. பிறந்தநாள் விழா, திருமண விழா என அனைத்திலும் துப்பாக்கி குண்டுகள் முழங்குவது அந்த பகுதியில் வாடிக்கையாகிவிட்டது. ஆரம்பத்தில் வேட்டையாட வேண்டும் என துப்பாக்கியை பயன்படுத்தியவர்கள் , பின்னர் தங்களின் பாதுகாப்பு நலன் கருதி துப்பாக்கியை வைத்துக்கொண்டனர். ஆனால் அந்த காலம் எல்லாம் மாறி இன்று துப்பாக்கி வைத்திருப்பவர்தான் மாஸ் என்பது போல கௌரவ அடையாள சின்னமாகவே மாறியிருக்கிறது. துப்பாக்கி குண்டுகள் முழங்குவதால் ஏதோ ஒரு களிப்பு, கொண்டாட்டம் என்று நாம் கடந்து போகவும் முடியாது. ஏனென்றால்  அந்த குண்டுகள் பல உயிர்களை இரையாக்கிக்கொள்கின்றன. இதனால் அந்த பகுதியில் பலரும் கேளிக்கை, கொண்டாட்டம் என்றாலே அச்சத்தில் உறைந்து விடுவதாக வட இந்திய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த நிலையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு, மேடையில் நடனமாடும் பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பீகாரில் உள்ள சிவான் நகரில் உள்ள கொண்டாட்டம் ஒன்றில் எடுக்கப்பட்டிருக்கிறது. வீடியோவில் சிகப்பு நிற லெஹங்கா அணிந்த பெண் , பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு சுழன்று சுழன்று நடனமாட, அவருடன் இணைந்து அந்த பகுதி இளைஞர்களும் நடனமாடுகின்றனர். அந்த பெண்ணின் கையில் இருக்கும் துப்பாக்கி அவ்வபோது இளைஞர்களை குறி பார்த்துவிட்டு செல்வதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. அந்த பெண் ஒரு நடன கலைஞர் என்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது. தனது பாதுகாப்பு நலன் கருதி அவர் துப்பாக்கியை எடுத்து வந்தாரா அல்லது அங்கிருந்தவர்களுள் யாரும் பெண்ணுக்கு துப்பாக்கியை கெத்து என நினைத்து கொடுத்தார்களா தெரியவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.


வட இந்தியர்கள் துப்பாக்கியை திருமண விழாக்களில் ஒரு சடங்காகவே வைத்திருக்கின்றன. இப்படியான அச்சுறுத்தலை தடுக்க , கடந்த 2019 ஆம் ஆண்டு ஆயுத சட்ட திருத்தத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் திருமண விழாக்களாக இருந்தாலும், பிறந்த நாள் விழாக்களாக இருந்தாலும் அல்லது மற்ற பொது நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அங்கு உரிமம் பெற்ற துப்பாக்கியை கூட பயன்படுத்துவது சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டது. மீறினால் அவர்களுக்கு அபராதத்துடன் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என சட்டவிதிகள் இருப்பதும் நினைவு கூறத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget