மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோவில்: மண்டல பூஜை சாதனை! பக்தர்கள் கூட்டம், வருமானம் உச்சம் தொட்டது!

மண்டல பூஜை காலத்தில் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய சாதனையாக கோவில் வருமானம் வெகுவாக அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. கார்த்திகை முதல் தேதியான நவம்பர் 17ம் தேதி துவங்கி தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். நவம்பர் 17ம் தேதி துவங்கி, டிசம்பர் 27ம் தேதி வரை மொத்தம் 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்தது. டிசம்பர் 27ம் தேதியன்று மாலை மண்டல பூஜைக்கு பிறகு சபரிமலை நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதி தான் நடைதிறக்கப்பட உள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோவில்: மண்டல பூஜை சாதனை! பக்தர்கள் கூட்டம், வருமானம் உச்சம் தொட்டது!

சபரிமலை மண்டல பூஜை காலத்தில் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய சாதனையாக கோவில் வருமானம் வெகுவாக அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேவசம் போர்டு வெளியிட்ட  அறிக்கையின் படி, இந்தாண்டு சீசனில் கடந்த 41 நாட்களில் மட்டும் சபரிமலை கோவிலுக்கு ரூ.332,77,05152 வருமானம் கிடைத்துள்ளது. இதில் அரவணை பாயசம் விற்பனை மூலமாக மட்டும் ரூ.142 கோடியும், அப்பம் விற்பனையின் மூலம் ரூ.12 கோடியும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் ரூ.297, 06,67,679 வருமானம் கிடைத்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.35.70 கோடி கிடைத்துள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் மட்டும் உண்டியல் வசூலாக ரூ.83.17 கோடி பெறப்பட்டுள்ளது.

மண்டல பூஜை காலத்தில் மட்டுமே ரூ.332 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ள நிலையில், டிசம்பர் 30ம் தேதியான நாளை மாலை மகரவிளக்கு உற்சவத்திற்காக சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. டிசம்பர் 30ம் தேதி துவங்கி, ஜனவரி 19ம் தேதி இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு ஐயப்ப சீசன் நிறைவடைய இன்னும் 21 நாட்கள் உள்ளது. புது வருட பிறப்பு, மகரஜோதி தரிசனம் ஆகியவற்றிற்கு இனி வரும் நாட்களில் இன்னும் அதிகமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வரும்பட்சத்தில் சபரிமலை கோவில் வருமானம் மேலும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சபரிமலை ஐயப்பன் கோவில்: மண்டல பூஜை சாதனை! பக்தர்கள் கூட்டம், வருமானம் உச்சம் தொட்டது!

மண்டல பூஜை நிறைவடைந்திருந்தாலும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை காலமான கடந்த 41 நாட்களில் மட்டும் 32,49,756 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது முந்தைய மண்டல பூஜை காலங்களில் இல்லாத அளவிற்கு மிக அதிக அளவிலான புதிய உச்சம் என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் 28,42,447 பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்திருந்தனர். மண்டல பூஜைக்கு முந்தைய நாளான டிசம்பர் 26ம் தேதி அன்று மட்டும் 37,521 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். மண்டல பூஜை நாளான டிசம்பர் 27ம் அன்று பகல் 1 மணி வரை 17,818 பேர் தரிசனம் செய்துள்ளனர். மகரவிளக்கு கால விற்பனைக்காக 12 லட்சம் டின் அரவணை தயாராக வைக்கப்பட உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
உடலில் 51 காயங்கள்,. சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை! ஒன்றரை வயது குழந்தை உயிரப்பு!..
உடலில் 51 காயங்கள்,. சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை! ஒன்றரை வயது குழந்தை உயிரப்பு!..
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
Embed widget