மேலும் அறிய

கூடலூர் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு.. விதிமுறைகள் என்ன?

கூடலூரில் `டி23’ என்று பெயரிடப்பட்டிருக்கும் புலி, மனிதரைக் கொன்றுள்ள நிலையில், தமிழ்நாடு தலைமை கானுயிர் கண்காணிப்பாளர் சேகர் குமார் நீரஜ் அதனை கொல்வதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் `டி23’ என்று பெயரிடப்பட்டிருக்கும் புலி ஒன்று, மனிதர்களை கொன்றுள்ள நிலையில், தமிழ்நாடு தலைமை கானுயிர் கண்காணிப்பாளர் சேகர் குமார் நீரஜ் அதனை வேட்டையாடி கொல்வதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முதுமலை புலிகள் காப்பகத்தின் அருகில் இருக்கும் சிங்காரா பகுதியில் இதுவரை நான்கு மனிதர்களை இதே புலி கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

மனிதர்களை வேட்டையாடும் புலிகளைப் பிடிப்பதற்காகவும், தேவை இருப்பின் கொல்வதற்காகவும் விதிமுறைகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி புலிகளையும், மனிதர்களையும் முதலில் காக்கும் விதமாக தடுப்பு முயற்சிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி, கானுயிர் பாதுகாப்புச் சட்டம் கூறியுள்ளதன் அடிப்படையில், மனித விலங்கு மோதல் ஏற்படாதவாறு புலிகளுக்குத் தேவையான இடம் காட்டில் ஒதுக்கப்பட வேண்டும். புலிகள் பாதுகாப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். அப்பகுதியில் வாழும் மக்களுக்குப் புலிகள் பாதுகாப்பு குறித்தும், சூழலியல் பாதுகாப்பு குறித்தும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

கூடலூர் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு.. விதிமுறைகள் என்ன?

புலிகளால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் கால்நடை விலங்குகளின் இழப்பு குறித்து அதிகாரிகள் தகவல்கள் பரிமாற்றத்தில் தொடர்ந்து ஈடுபடுவதோடு, பாதிக்கப்படும் மக்களுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். புலிகளின் நடமாட்டத்தை நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கிராம மக்கள் வாழும் பகுதிகளில் நிரந்தரமாக புலிகளோ, சிறுத்தைகளோ குடியேறாமல் இருக்கும் விதமாக அப்பகுதி மக்கள் கால்நடைகள் இறந்தால் அவற்றைப் பாதுகாப்பாகப் புதைக்கும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். 

புலிகள் மனிதர்களை வேட்டையாடுவதற்கும் மனிதர்களை உண்பதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. புலிகள் மனிதர்களைத் தேடித் தேடி கொல்வதற்கும், கெடுவாய்ப்பாக மனிதர்களை உண்பதற்குமான சம்பவங்கள் வெவ்வேறானவை. பெண் புலி தனது குட்டிகளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் போதும், உறக்கத்தில் இருக்கும் புலிகளை மனிதர்கள் எழுப்பிவிடும் போதும், மனிதர்களைப் பிற விலங்குகள் எனப் புலிகள் கருதும் போதும், மனிதர்களைப் புலிகள் உண்கின்றன. முதல் மனிதனைப் புலிகள் கொன்ற பிறகு, அவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மனிதன் கொல்லப்பட்ட இடத்தின் அடிப்படையில், புலியின் நடமாட்டம் கணக்கிடப்பட்டு, அடுத்தடுத்த மனிதக் கொலைகள் ஏற்படும் போது, புலிகளைக் கூண்டுகளை வைத்தோ, மயக்க மருந்து செலுத்தியோ பிடிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். 

கூடலூர் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு.. விதிமுறைகள் என்ன?

மனிதர்களை வேட்டையாடும் புலிகளைக் கொல்வதற்கு அனுபவம் வாய்ந்த மூத்த வனப்பிரிவு அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பிற வேட்டையாளர்களுக்கு இந்த அனுமதியை அளித்து, மனிதர்களை வேட்டையாடாத புலிகளைக் கொல்லும் வாய்ப்புகளும் இருப்பதால், இந்த அனுமதி பிறருக்கு அளிக்கப்படுவதில்லை. எனினும் மலைப்பகுதிகளில் தேர்ந்த வேட்டையாளர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டு, அவருடன் வனப்பிரிவு அதிகாரிகள் பயணிக்க விதிமுறைகள் விதிக்கப்படுவதோடு, அதற்கான செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும். 

புலிகளைக் கொல்வதற்காக எந்த சன்மானமும் யாருக்கும் வழங்கப்படாது. இவ்வாறு மத்திய அரசு மனிதர்களை வேட்டையாடும் புலிகளைக் கொல்வதற்கான விதிமுறைகளை விதித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
Embed widget