மேலும் அறிய

ஆர்.எஸ்.எஸ் - பாஜக இப்படித்தான்... - ஒரு கப் காஃபியுடன் ஒப்பிட்ட பிரசாந்த் கிஷோர்

அக்டோபர் 2ந் தேதி முதல் பீகாரில் 3,500 கிலோமீட்டர் நீளமுள்ள பாத யாத்திரையில் இருக்கும் கிஷோர்  மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள லாரியாவில் பேசுகையில் இந்த ஒற்றுமையைக் குறிப்பிட்டார். 

தேர்தலில் அரசியல் வியூகங்களை வகுத்து பின்னர் செயல்பாட்டாளராக மாறிய பிரசாந்த் கிஷோர் ஞாயிற்றுக்கிழமை பிஜேபி-ஆர்எஸ்எஸ் கூட்டணியை ஒரு கப் காபியுடன் ஒப்பிட்டார். அதில் பாஜக என்பது மேலிருக்கும் வெறும் நுரைதான் அடியில் இருக்கும் காபிதான் அதன் தாய் நிறுவனம் ஆர்.எஸ்.எஸ். என்றார்.

அக்டோபர் 2ந் தேதி முதல் பீகாரில் 3,500 கிலோமீட்டர் நீளமுள்ள பாத யாத்திரையில் இருக்கும் கிஷோர்  மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள லாரியாவில் பேசுகையில் இந்த ஒற்றுமையைக் குறிப்பிட்டார். 

"காந்தியின் காங்கிரஸக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் மட்டுமே கோட்சேவின் சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியும்" என்பதை உணர தனக்கு நீண்ட காலம் பிடித்ததாக கிஷோர் வருத்தம் தெரிவித்தார். மேலும் இந்தப் பாதையில் செல்லாமல் தான் நிதிஷ் குமார் மற்றும் ஜெகன் மோகனுக்கு உதவி காலத்தை வீணடித்ததாகவும் கவலை தெரிவித்துள்ளார்.


ஆர்.எஸ்.எஸ் - பாஜக இப்படித்தான்... - ஒரு கப் காஃபியுடன் ஒப்பிட்ட பிரசாந்த் கிஷோர்

நரேந்திர மோடியின் அரசியல் தந்திரங்களைத் தடுத்து நிறுத்துவதில் எதிர்க்கட்சியின் செயல்திறன் பற்றி தொடக்கத்தில் இருந்தே பிரசாந்த் கிஷோர் சந்தேகத்தில் இருந்தாலும் மற்றொருபக்கம் அது என்ன என்பதை ஒருவர் புரிந்து கொள்ளாவிட்டால், பாஜகவை தோற்கடிக்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளார்.

"நீங்கள் எப்போதாவது ஒரு கப் காப்பியைப் கவனித்திருக்கிறீர்களா? மேலே நுரை வருகிறது. பாஜக அப்படித்தான் இருக்கிறது. அதற்குக் கீழே ஆர்எஸ்எஸ் என்ற ஆழமான அமைப்பு உள்ளது. சமூகக் கட்டமைப்பில் ஆர் எஸ் எஸ் புழுக்கள் போலப் பரவிவிட்டது. அதைக் குறுக்கு வழிகளில் தற்போது தோற்கடிக்க முடியாது” எனக் குறிப்பிட்டார்.

2014 லோக்சபா தேர்தலில் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தை அவர் கையாண்டதுதான் பிரசாந்த் கிஷோரின் முழு முதல் புகழுக்கு காரணம், இது அந்தத் தேர்தலில் பாஜக தனித்து பெரும்பான்மை பெற உதவியது.

மற்றொருபக்கம் தனது யாத்திரையின் ஒரு பகுதியாக தன்னை பாரதிய ஜனதா ஏஜெண்ட் என்று அழைக்கும் நிதிஷ் குமார் கட்சியை சரமாரியாகச் சாடினார்.

"சிஏஏ-என்பிஆர்-என்ஆர்சிக்கு எதிராக நாடு கொதித்தெழுந்தபோது நான் ஜேடி(யு) தேசிய துணைத் தலைவராக இருந்தேன். குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக எனது கட்சியின் எம்.பி.க்கள் வாக்களித்ததை அறிந்து திகைத்தேன்" என்று நினைவு கூர்ந்தார். 45 வயதான பிரசாந்த் கிஷோர்  பெரும்பாலும் கருத்தியல் ரீதியாக அஞ்ஞானவாதியாகக் கருதப்படுகிறார்.

"அப்போது எங்கள் தேசியத் தலைவராக இருந்த நிதிஷ் குமாரை நான் எதிர்கொண்டேன். அவர் சுற்றுப்பயணத்தில் இருப்பதாகவும், உறுப்பினர்கள் வாக்களித்ததைப் பற்றி அறியவில்லை என்றும், ஆனால் பீகாரில் என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம் என்று வெளிப்படையாக உறுதியளித்தார். இந்த இரட்டைப் போக்கு நிலவிய இடத்தில் என்னால் வேலை செய்ய முடியாது என்பதை உணர்த்தியது. அதனால் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட தகராறில் ஜே.டி.(யு)வில் இருந்து நீக்கப்பட்டேன்” என கிஷோர் கூறினார்.

கிஷோர், காங்கிரசில் கடந்த ஆண்டு அதன் உயர்மட்டத் தலைவர்களை சந்தித்த போதிலும் பலனளிக்கவில்லை. ஆனால் மகாத்மா காந்தியின் தலைமையின் ஒன்றிணைந்த அந்தக் கட்சியின் பழைய சித்தாந்தத்தை தான் போற்றுவதாகக் குறிப்பிட்டார்.

"காந்தியின் காங்கிரஸை புத்துயிர் அளிப்பதன் மூலம் மட்டுமே கோட்சேவின் சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியும்" என்ற கிஷோர், மகாத்மாவின் கொலையாளிக்கு ஆர்எஸ்எஸ் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டார்..

தலைப்பு செய்திகள்

Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
இந்தியாவின் இரண்டாவது சைவ நகரம்.. மாஸ் காட்டும் வாரணாசி.. எகிறும் எதிர்பார்ப்பு!
இந்தியாவின் இரண்டாவது சைவ நகரம்.. மாஸ் காட்டும் வாரணாசி.. எகிறும் எதிர்பார்ப்பு!
Indian Citizenship: பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்தியர் கிடையாது.. மத்திய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு
Indian Citizenship: பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்தியர் கிடையாது.. மத்திய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு
PUNE MURDER : நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?
நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: நிக்காத பஸ்சுக்கு பஸ் ஸ்டாப் எதுக்கு? கனிமொழியை கும்பலாக கேள்வி கேட்ட பெண்கள்
Kanimozhi: நிக்காத பஸ்சுக்கு பஸ் ஸ்டாப் எதுக்கு? கனிமொழியை கும்பலாக கேள்வி கேட்ட பெண்கள்
Strait of Hormuz: “எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
“எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
Vijayabaskar: விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதில் என்ன சிக்கல்? விடாப்பிடியாக எதிர்க்கும் அமைச்சர் யார்?
Vijayabaskar: விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதில் என்ன சிக்கல்? விடாப்பிடியாக எதிர்க்கும் அமைச்சர் யார்?
Sirkazhi MLA Senthil Selvan : நான் திமுக உறுப்பினர்.! மதிமுகவிற்கு டாடா காட்டிய சீர்காழி எம்எல்ஏ.! ஷாக்காகி நிற்கும் வைகோ- நடந்தது என்ன.?
நான் திமுக உறுப்பினர்.! மதிமுகவிற்கு டாடா காட்டிய சீர்காழி எம்எல்ஏ.! ஷாக்காகி நிற்கும் வைகோ- நடந்தது என்ன.?
Minister Jagadeeswari : என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
TVK Candidates: இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
Embed widget