மேலும் அறிய

Ratan Tata: ”இந்தியர்களின் மகிழ்ச்சியே முக்கியம்” - உப்பு டூ நானோ கார் - சாமானியர்களுக்கான ரத்தன் டாடா

Ratan Tata: ரத்தன் டாடா இந்தியாவின் சாமானிய குடிமக்களிடையே, ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Ratan Tata: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக காலமானார்.

சாமானியர்களுக்கான ரத்தன் டாடா:

இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபரான ரத்தன் டாடா தனது 86வது வயதில் இயற்கை எய்தினார். பெரும் பணக்காரர், சிறந்த புத்திக் கூர்மை கொண்டவர் என்பதை தாண்டி, சாமானிய மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தியவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. பணக்காரர்கள் பட்டியலில் நீங்கள் இல்லாதது ஏன் என்ற கேள்விக்கு, “அவர்கள் வியாபாரிகள், நாங்கள் தொழிலதிபர்கள் . இந்தியா பொருளாதார வல்லரசாக இருப்பதை நான் விரும்பவில்லை. இந்தியா மகிழ்ச்சியான நாடாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என ரத்தன் டாடா பதிலளித்து இருந்தது குறிப்பிடத்தகக்து. அந்த பதிலுக்கு ஏற்றபடி, இந்தியாவில் சாமானியர்களின் வாழ்க்கையில் அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டும், எதிர்காலத்திற்கு தேவையான விதைகளை விதைத்துமே தனது வாழ்க்கை பயணத்தை முடித்துள்ளார். அதன் விளைவாக நாட்டில் டாடா தயாரிப்புகள் மற்றும் சேவையைப் பயன்படுத்தாத ஒருவரை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமானதாக உள்ளது.

உப்பு தொடங்கி நானோ கார் வரை:

இந்தியாவில் நிலவிய ஊட்டச்சத்து குறைபாட்டை உணர்ந்தே, நாட்டின் முதல் அயோடின் கலந்த உப்பை ரத்தன் டாடா தலைமையில் டாடா குழுமம் அறிமுகம் செய்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. நடுத்தர குடும்பத்தினரும் பயன்படுத்தும் வகையில், ஒரு லட்சம் ரூபாய் என்ற மலிவு விலை நானோ காரை ரத்தன் டாடா அறிமுகப்படுத்தினார். “இரண்டு பேருக்கான இருசக்கர வாகனங்களில் இந்திய குடும்பங்கள் பயணித்தது, தாய் மற்றும் தந்தைக்கு இடையே குழந்தை அமர்ந்து பைக்குகளில் பயணித்ததை கண்டதன் விளைவாக மலிவு விலை காரை” அறிமுகப்படுத்தியதாக ரத்தன் டாடாவே கூறியிருந்தார். இப்படி சாமானியர்களுக்கு தேவையானதை உணர்ந்து சந்தைப்படுத்தியதன் மூலமே, 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கைக்குரிய தொழிலதிபராக ரத்தன் டாடா திகழ்கிறார்.

ரத்தன் டாடாவின் சமூக பொறுப்பு:

பணிவு, இரக்கம் மற்றும் தொலைநோக்கு பார்வைக்கு பெயர் பெற்ற ரத்தன் டாடா, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய வணிக நிலப்பரப்பை வடிவமைக்க உதவினார். அவரது வணிக புத்திசாலித்தனத்திற்கு அப்பால், டாடா தனது நேர்மை, நெறிமுறை தலைமை மற்றும் சமூக நலனுக்கான அர்ப்பணிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டார், இது அவரை இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் ஒரு அடையாளமாக மாற்றியது. டாடா குழுமத்தை உலகளாவிய அதிகார மையமாக மாற்றியது மட்டுமல்லாமல், பெருநிறுவன சமூகப் பொறுப்பு மற்றும் சமூக சேவை ஆகியவற்றில் தன்னை அர்ப்பணித்ததற்காகவும் நினைவுகூறப்படுகிறார். அவரது தொலைநோக்கு pஆர்வ எப்போதும் சமூக நலனுடன் இணைந்திருந்தது, தொண்டு நோக்கங்கள் மற்றும் நிலைத்தன்மை முயற்சிகள் மீதான அவரது அர்ப்பணிப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டது.

தொண்டு நிறுவனம் மூலம் உதவிகள்:

இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா டிரஸ்ட் , டாடாவின் வழிகாட்டுதலின் கீழ், கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. ஒரு நிறுவனத்தின் வெற்றி சமூகத்தின் நலனுடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது என்பது ரத்தன் டாடாவின் நம்பிக்கையாகும். டாடா அறக்கட்டளை மாணவர்களுக்கான உதவித்தொகைகளுக்கு நிதியளித்துள்ளன. இந்தியா முழுவதும் அடிப்படை வாழ்க்கைத் திட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளன. கொரோனா தொற்றின்போது,  டாடா குழுமம் அரசுக்கு ரூ. 500 கோடி நன்கொடை அளித்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் உள்ள டாடா மெடிக்கல் சென்டர் போன்ற முன்முயற்சிகளில் டாடாவின் சுகாதாரப் பாதுகாப்பைக் காணலாம். இது புற்றுநோயாளிகளுக்கு, குறிப்பாக பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வை உறுதிசெய்யும் வகையில், "தாஜ் பொதுச் சேவை நல அறக்கட்டளை"யை நிறுவுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ டாடா விரைவான நடவடிக்கை எடுத்தது.

உலகளவிலான சேவை:

ரத்தன் டாடாவின் தாராள மனப்பான்மை இந்தியாவுக்கு அப்பாலும் பரவியது. கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலுக்கு,  ஒரு நிர்வாக மையத்தை நிறுவுவதற்காக, 50 மில்லியனை அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்தார். இதன் மூலம் எதிர்காலத் தலைவர்களை வடிவமைக்கும் கல்வியின் ஆற்றல் மீதான நம்பிக்கையை ரத்தன் டாடா வலுப்படுத்தினார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
Top 10 News Headlines: ”முருங்கை இலைப் பொடி சேர்க்க கோரிக்கை” அமித் ஷாவிற்கு கெஜ்ரிவால் கேள்வி  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ”முருங்கை இலைப் பொடி சேர்க்க கோரிக்கை” அமித் ஷாவிற்கு கெஜ்ரிவால் கேள்வி - 11 மணி வரை இன்று
Tamilnadu Roundup: ரூ.600 கோடி முதலீடு, ”சாதி தான் இந்து சமூகத்தின் பிரச்னை” தங்கம் விலை உயர்வு- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: ரூ.600 கோடி முதலீடு, ”சாதி தான் இந்து சமூகத்தின் பிரச்னை” தங்கம் விலை உயர்வு- 10 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
TVK Congress: அப்ப 70 சீட்டு, ராகுல் மீட்டிங் எல்லாம் பொய்யா.. ”நாகரீகமாக பேசுங்க விஜய்” செல்வப்பெருந்தகை அட்டாக்
Top 10 News Headlines: ”முருங்கை இலைப் பொடி சேர்க்க கோரிக்கை” அமித் ஷாவிற்கு கெஜ்ரிவால் கேள்வி  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ”முருங்கை இலைப் பொடி சேர்க்க கோரிக்கை” அமித் ஷாவிற்கு கெஜ்ரிவால் கேள்வி - 11 மணி வரை இன்று
Tamilnadu Roundup: ரூ.600 கோடி முதலீடு, ”சாதி தான் இந்து சமூகத்தின் பிரச்னை” தங்கம் விலை உயர்வு- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: ரூ.600 கோடி முதலீடு, ”சாதி தான் இந்து சமூகத்தின் பிரச்னை” தங்கம் விலை உயர்வு- 10 மணி செய்திகள்
பெங்காலி நடிகை மீது முரட்டு காதல்..கமல் செய்த செயல்...அப்பாவைப் பற்றிய உண்மையை உடைத்த ஸ்ருதி ஹாசன்
பெங்காலி நடிகை மீது முரட்டு காதல்..கமல் செய்த செயல்...அப்பாவைப் பற்றிய உண்மையை உடைத்த ஸ்ருதி ஹாசன்
3BHK படம் பார்த்த சச்சின் டெண்டுல்கர்...என்ன சொல்லியிருக்கார் தெரியுமா!
3BHK படம் பார்த்த சச்சின் டெண்டுல்கர்...என்ன சொல்லியிருக்கார் தெரியுமா!
PM modi:
PM modi: "அவங்க என்ன வேணா பண்ணட்டும்.. நாங்க இப்படியே தான் இருப்போம்" - பிரதமர் மோடி ப்ராமிஸ்
Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
Affair Murder: திருமணமான 20 வயது காதலி.. வாயில் வெடியை வைத்து கொன்ற கொடூர காதலன் - நடந்தது என்ன?
Embed widget