மேலும் அறிய

IND-PAK Tension: ”நீங்க எதிர்பார்க்குறது நடக்கும்” பாகிஸ்தானுக்கான பதிலடி - அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

IND-PAK Tension: தீவிரவாதிகளுக்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

IND-PAK Tension: ”நீங்கள் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ அது, பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் நடைபெறும்” என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங் பேச்சு:

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த நாடு முழுவதும் இன்னும் கனலாய் எரிந்துகொண்டுள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் தான், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “இந்தியாவின் மீது தீய எண்ணத்துடன் பார்வையை செலுத்துபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என விளக்கமளித்துள்ளார்.

”ஆசைபட்டது நடக்கும்”

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சனாதன் சமஸ்கிருதி ஜாக்ரன் மஹோத்சவத்தில் பேசிய ராஜ்நாத் சிங், “பாதுகாப்பு அமைச்சராக நாட்டில் பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து நாட்டின் எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது எனது கடைமை. இந்தியாவின் மீது தீய பார்வையை செலுத்தியவர்களுக்கு, பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தக்க பதிலடி கொடுப்பதும் எனது கடைமையே. பிரதமர் மோடியின் பணி நெறிமுறை மற்றும் விடாமுயற்சி குறித்து நாம் அனைவரும் அறிந்ததே. அவருடைய தீர்மானம் மற்றும் திறன் குறித்தும் நாம் அறிந்ததே.  வாழ்க்கையில் ஆபத்தான முடிவுகளை எடுப்பது குறித்து அறிந்து இருக்கிறார் என்பது நாம் அறிவோம். எனவே, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நீங்கள் அனைவரும் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அது நடைபெறும்” என குறிப்பிட்டார். அதவாது பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என சூசகமாக அமைச்சர் விளக்கினார்.

”இந்தியாவின் பலம்”

தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், “இந்தியாவின் பலம் அதன் ஆயுதப்படையில் மட்டும் சார்ந்தது இல்லை. அதன் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திலும் உள்ளது. உருவம் கொண்ட நமது நாட்டின் எல்லைகளை தைரியம் மிக்க நமது வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்பு வருகின்றனர். அதேநேரம், நமது முனிவர்களும், ஞானிகளும் நமது நாட்டின் ஆன்மீக வடிவத்தை பாதுகாத்து வருகின்றனர். நமது வீரர்கள் போர்க்களத்தில் போராடும்போது, நமது துறவிகள் வாழ்க்கை எனும் போர்க்களத்தில் போராடி வருகின்றனர். 

”முனிவர்களிடம் ஆசி”

ராஜநீதி என்ற சொல் ஆட்சி மற்றும் கொள்கைகளால் ஆனது. இதன் பொருள் தேசத்தை செழிப்பான பாதைக்கு இட்டுச் செல்லும் ஆட்சி என்பதாகும். ஆனால், தற்போதைய சூழலில் ராஜநீதி என்ற சொல் அதன் உண்மையான சாராம்சத்தையே இழந்துவிட்டது. அந்த வார்த்தை அதன் அசல் கண்ணியத்தை மீண்டும் பெறுவதற்காக நான் மதிப்பிற்குரிய துறவிகளின் ஆசீர்வாதங்களை நாடுகிறேன்” என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Bike Challan: பைக்கில் செல்பவரா நீங்கள்? இனி ஒரு தப்பு செஞ்சா கூட ₹10,000 அபராதம் - உடனே இதைப் படிங்க!
Bike Challan: பைக்கில் செல்பவரா நீங்கள்? இனி ஒரு தப்பு செஞ்சா கூட ₹10,000 அபராதம் - உடனே இதைப் படிங்க!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் ஆலோசனை, தங்கம் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை சரிவு, ட்ரம்ப் அச்சுறுத்தல் - 11 மணி செய்திகள்
முதல்வர் விஜய் ஆலோசனை, தங்கம் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை சரிவு, ட்ரம்ப் அச்சுறுத்தல் - 11 மணி செய்திகள்
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்
’சூலூர் வழக்கில் சிரித்த பெண் IG’ யார் இந்த ரம்யா பாரதி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: அடுத்தடுத்து ராஜினாமா! சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக! என்னதான் செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?
EPS: அடுத்தடுத்து ராஜினாமா! சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக! என்னதான் செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?
CM Vijay: நாளை டெல்லி செல்கிறார் சிஎம் விஜய் - மேகதாது டூ கல்வி நிதி - நீளும் பட்டியல், தீர்வு கிடைக்குமா?
CM Vijay: நாளை டெல்லி செல்கிறார் சிஎம் விஜய் - மேகதாது டூ கல்வி நிதி - நீளும் பட்டியல், தீர்வு கிடைக்குமா?
Guru Peyarchi 2026 Rishabam: 2026 குரு பெயர்ச்சி.. ரிஷப ராசிக்காரர்களுக்கு பொன்னான வாய்ப்பு.. என்ன நடக்கும்?
2026 குரு பெயர்ச்சி.. ரிஷப ராசிக்காரர்களுக்கு பொன்னான வாய்ப்பு.. என்ன நடக்கும்?
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM.. அநீதி, மோசடி செய்வதா CM சார்? சீறிய உதயநிதி
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM.. அநீதி, மோசடி செய்வதா CM சார்? சீறிய உதயநிதி
நெஞ்சை உலுக்கும் விபரீதம் - தந்தையைப் பார்த்துவிட்டு ஊர் திரும்பியபோது சோகம்; 'என் தம்பி சாகல' அக்காக்கள் கதறல்!
நெஞ்சை உலுக்கும் விபரீதம் - தந்தையைப் பார்த்துவிட்டு ஊர் திரும்பியபோது சோகம்; 'என் தம்பி சாகல' அக்காக்கள் கதறல்!
Vivo T5X 5G Vs OnePlus Nord CE6 Lite: விவோ T5X 5G-ஆ.? ஒன்பிளஸ் நார்ட் CE6 லைட்டா.? ரூ.25,000 பட்ஜெட்டிற்குள் சிறந்தது எது.? முழு ஒப்பீடு
விவோ T5X 5G-ஆ.? ஒன்பிளஸ் நார்ட் CE6 லைட்டா.? ரூ.25,000 பட்ஜெட்டிற்குள் சிறந்தது எது.? முழு ஒப்பீடு
Esakki Subaya resigned : அதிமுக MLA இசக்கி சுப்பையா ராஜினாமாவை ஏற்க சபாநாயாகர் மறுப்பு.! திடீர் ட்விஸ்ட்- இது தான் காரணமா.?.
அதிமுக MLA இசக்கி சுப்பையா ராஜினாமாவை ஏற்க சபாநாயாகர் மறுப்பு.! திடீர் ட்விஸ்ட்- இது தான் காரணமா.?.
Cong TVK: தவெகவை மொத்தமாக ஆதரிப்பதா? குதிரை பேரத்தை ஏற்க முடியாது - காங்., ஜோதிமணி ஆவேசம்
தவெகவை மொத்தமாக ஆதரிப்பதா? குதிரை பேரத்தை ஏற்க முடியாது - காங்., ஜோதிமணி ஆவேசம்
Embed widget