மேலும் அறிய

IND-PAK Tension: ”நீங்க எதிர்பார்க்குறது நடக்கும்” பாகிஸ்தானுக்கான பதிலடி - அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

IND-PAK Tension: தீவிரவாதிகளுக்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

IND-PAK Tension: ”நீங்கள் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ அது, பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் நடைபெறும்” என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங் பேச்சு:

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த நாடு முழுவதும் இன்னும் கனலாய் எரிந்துகொண்டுள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் தான், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “இந்தியாவின் மீது தீய எண்ணத்துடன் பார்வையை செலுத்துபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என விளக்கமளித்துள்ளார்.

”ஆசைபட்டது நடக்கும்”

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சனாதன் சமஸ்கிருதி ஜாக்ரன் மஹோத்சவத்தில் பேசிய ராஜ்நாத் சிங், “பாதுகாப்பு அமைச்சராக நாட்டில் பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து நாட்டின் எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது எனது கடைமை. இந்தியாவின் மீது தீய பார்வையை செலுத்தியவர்களுக்கு, பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தக்க பதிலடி கொடுப்பதும் எனது கடைமையே. பிரதமர் மோடியின் பணி நெறிமுறை மற்றும் விடாமுயற்சி குறித்து நாம் அனைவரும் அறிந்ததே. அவருடைய தீர்மானம் மற்றும் திறன் குறித்தும் நாம் அறிந்ததே.  வாழ்க்கையில் ஆபத்தான முடிவுகளை எடுப்பது குறித்து அறிந்து இருக்கிறார் என்பது நாம் அறிவோம். எனவே, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நீங்கள் அனைவரும் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அது நடைபெறும்” என குறிப்பிட்டார். அதவாது பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என சூசகமாக அமைச்சர் விளக்கினார்.

”இந்தியாவின் பலம்”

தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், “இந்தியாவின் பலம் அதன் ஆயுதப்படையில் மட்டும் சார்ந்தது இல்லை. அதன் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திலும் உள்ளது. உருவம் கொண்ட நமது நாட்டின் எல்லைகளை தைரியம் மிக்க நமது வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்பு வருகின்றனர். அதேநேரம், நமது முனிவர்களும், ஞானிகளும் நமது நாட்டின் ஆன்மீக வடிவத்தை பாதுகாத்து வருகின்றனர். நமது வீரர்கள் போர்க்களத்தில் போராடும்போது, நமது துறவிகள் வாழ்க்கை எனும் போர்க்களத்தில் போராடி வருகின்றனர். 

”முனிவர்களிடம் ஆசி”

ராஜநீதி என்ற சொல் ஆட்சி மற்றும் கொள்கைகளால் ஆனது. இதன் பொருள் தேசத்தை செழிப்பான பாதைக்கு இட்டுச் செல்லும் ஆட்சி என்பதாகும். ஆனால், தற்போதைய சூழலில் ராஜநீதி என்ற சொல் அதன் உண்மையான சாராம்சத்தையே இழந்துவிட்டது. அந்த வார்த்தை அதன் அசல் கண்ணியத்தை மீண்டும் பெறுவதற்காக நான் மதிப்பிற்குரிய துறவிகளின் ஆசீர்வாதங்களை நாடுகிறேன்” என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget