மேலும் அறிய

எவருடைய பேச்சுரிமையும் கருத்துச் சுதந்திரமும் எந்த வகையிலும் ஒடுக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக அரசு கருத்து சுதந்திரத்தை ஒடுக்கி வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக தேசிய ஊடகங்கள் மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இம்மாதிரியான பல்வேறு குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்துள்ளார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ வார இதழான பாஞ்சஜன்யா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்ட அவர், "பத்திரிகை சுதந்திரத்தை மீறுவதாகக் குற்றம் சாட்டுபவர்கள், பாஜக அரசாங்கங்கள் எந்தவொரு ஊடக அமைப்புக்கும் எந்தவித தடையையும் விதிக்கவில்லை என்பதை மறந்துவிடுகிறார்கள். யாருடைய பேச்சுரிமையையும் ஒடுக்கியதில்லை" என்றார்.

கடந்த 1951ஆம் ஆண்டு, அரசியலமைப்பின் 19ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை மேற்கோள் காட்டி பேசிய ராஜ்நாத் சிங், "பேச்சுரிமையை தடுக்கும் வகையில் அரசியல் சட்டத்தை காங்கிரஸ் அரசு திருத்தியது. நாட்டில் கருத்து சுதந்திரம் குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இன்று ஊடக சுதந்திரம் மீறப்படுவதாக குற்றம் சாட்டுபவர்கள், அது அடல்ஜியின் (முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்) அரசாக இருந்தாலும் அல்லது (பிரதமர் நரேந்திர மோடியின் அரசாக இருந்தாலும் சரி, எந்த ஊடகத்திற்கும் தடை விதிக்கவில்லை என்பதை மறந்துவிடுகிறார்கள். எவருடைய பேச்சுரிமையும் கருத்துச் சுதந்திரமும் எந்த வகையிலும் ஒடுக்கப்படவில்லை.

காங்கிரஸ் கட்சியின் முழு வரலாறும் எல்லா வகையான சுதந்திரங்களையும் மீறும் சம்பவங்களால் நிரம்பியுள்ளது. காங்கிரஸ் அரசு பேச்சுரிமையை தடுக்க அரசியல் சட்டத்தை கூட திருத்தியது. 

கண்ணாடி வீடுகளில் வசிப்பவர்கள் மற்றவர்கள் மீது கல்லெறியக்கூடாது. ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண். அதன் சுதந்திரம் வலுவான மற்றும் துடிப்பான ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானது" என்றார்.

பாஞ்சஜன்யா வார இதழ் மீது விதிக்கப்பட்ட தடை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து பேசிய அவர், "ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்.எஸ்.எஸ்) தொடர்புடைய வார இதழின் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை தேசியவாத பத்திரிகை மீதான தாக்குதல் மட்டுமல்ல. கருத்துச் சுதந்திரத்தின் மீதான முழுமையான மீறலும் ஆகும்" என்றார்.

சமீபத்தில், மக்கள் பிரதிநிதி எல்லை மீறி பேசுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தது. வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளில் நால்வர், "பேச்சுரிமையை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் விதிகள் எதுவும் தேவையில்லை. 

அரசியல் சாசனத்தின் 19 (1), 19 (2) பிரிவுகளின் கீழ் கருத்து சுதந்திரத்துக்கு, எந்த அளவுக்கு எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்கிறதோ... அதுவே மக்கள் பிரதிநிதிகளுக்கும் (அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள்) பொருந்தும். அவர்களுக்கென கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. 

தற்போது பேச்சுரிமை தொடர்பாக நடைமுறையிலிருக்கும் கட்டுப்பாடுகளே போதுமானதாக இருப்பதாகக் கருதுகிறோம். அதேபோல அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் கருத்துகளை அரசாங்கத்தின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் கருத்துகளுக்கும் அவர்கள் விடும் அறிக்கைகளுக்கும் அவர்கள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும்" என்றனர்.

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget