மேலும் அறிய

"பாகிஸ்தானுக்கு அதிக பணத்தை கொடுத்திருப்போம்" தேர்தல் நேரத்தில் ராஜ்நாத் சிங் பரபர கருத்து!

இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நல்லுறவு இருந்திருந்தால், IMFயிடம் கேட்டதை விட அதிகமான பணத்தை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியிருக்கும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

இந்திய - பாகிஸ்தான் இடையே நல்லுறவு இருந்திருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டதை விட அதிகமான பணத்தை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியிருக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் - இந்தியா:

வரலாற்று ரீதியாகவும் சமகால அரசியல் சூழல் காரணமாகவும் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, காஷ்மீர் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது.

பாகிஸ்தானில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல, இந்தியாவில் நடக்கும் அரசியல் நகர்வுகளை பாகிஸ்தான் உற்று கவனிக்கும்.

இந்த நிலையில், பாகிஸ்தான் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து வரும் கருத்து புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு இருந்திருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டதை விட அதிகமான பணத்தை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியிருக்கும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பரபரப்பாக பேசிய ராஜ்நாத் சிங்:

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராஜ்நாத் சிங், "இன்சானியத், ஜமுஹ்ரியாத், காஷ்மீர் ஆகிய மூன்றும் இணைந்தால், காஷ்மீர் மீண்டும் சொர்க்கமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. இது இந்தியாவின் ஜனநாயகம், அதன் வலிமையின் நிரூபணம். வாக்களிக்காத ஒருவர் கூட எஞ்சியிருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். கடந்த 2014-15 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்காக ஒரு சிறப்பு தொகுப்பை பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமரின் அந்த தொகுப்பு இப்போது அதிகரித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் கேட்ட பணத்தை விட இது அதிகம். நண்பர்களை மாற்றலாம். ஆனால், அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என்று வாஜ்பாய் கூறுவார்.

நல்ல உறவு இருந்திருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) பாகிஸ்தானுக்கு அவர்கள் கேட்டதை விட அதிகமான பணத்தை நாங்கள் கொடுத்திருப்போம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் பாகிஸ்தானின் செயல்படும் பயங்கரவாத முகாம்களை மூட வேண்டும் என்று கூறியது. ஆனால், பாகிஸ்தான் அதைச் செய்யவில்லை.

இது புதிய இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்துவிடக் கூடாது. தீவிரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராடத் தயாராக இருக்கிறோம். எல்லையின் இந்தப் பக்கம் அல்ல, தேவைப்பட்டால் எல்லையின் மறுபக்கத்திற்கும் சென்று அதைச் செய்வோம்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Aadi Perukku holiday Bus : ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
Dhanush : ‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Embed widget