மேலும் அறிய

"பாகிஸ்தானுக்கு அதிக பணத்தை கொடுத்திருப்போம்" தேர்தல் நேரத்தில் ராஜ்நாத் சிங் பரபர கருத்து!

இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நல்லுறவு இருந்திருந்தால், IMFயிடம் கேட்டதை விட அதிகமான பணத்தை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியிருக்கும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

இந்திய - பாகிஸ்தான் இடையே நல்லுறவு இருந்திருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டதை விட அதிகமான பணத்தை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியிருக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் - இந்தியா:

வரலாற்று ரீதியாகவும் சமகால அரசியல் சூழல் காரணமாகவும் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, காஷ்மீர் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது.

பாகிஸ்தானில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல, இந்தியாவில் நடக்கும் அரசியல் நகர்வுகளை பாகிஸ்தான் உற்று கவனிக்கும்.

இந்த நிலையில், பாகிஸ்தான் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து வரும் கருத்து புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு இருந்திருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டதை விட அதிகமான பணத்தை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியிருக்கும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பரபரப்பாக பேசிய ராஜ்நாத் சிங்:

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராஜ்நாத் சிங், "இன்சானியத், ஜமுஹ்ரியாத், காஷ்மீர் ஆகிய மூன்றும் இணைந்தால், காஷ்மீர் மீண்டும் சொர்க்கமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. இது இந்தியாவின் ஜனநாயகம், அதன் வலிமையின் நிரூபணம். வாக்களிக்காத ஒருவர் கூட எஞ்சியிருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். கடந்த 2014-15 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்காக ஒரு சிறப்பு தொகுப்பை பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமரின் அந்த தொகுப்பு இப்போது அதிகரித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் கேட்ட பணத்தை விட இது அதிகம். நண்பர்களை மாற்றலாம். ஆனால், அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என்று வாஜ்பாய் கூறுவார்.

நல்ல உறவு இருந்திருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) பாகிஸ்தானுக்கு அவர்கள் கேட்டதை விட அதிகமான பணத்தை நாங்கள் கொடுத்திருப்போம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் பாகிஸ்தானின் செயல்படும் பயங்கரவாத முகாம்களை மூட வேண்டும் என்று கூறியது. ஆனால், பாகிஸ்தான் அதைச் செய்யவில்லை.

இது புதிய இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்துவிடக் கூடாது. தீவிரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராடத் தயாராக இருக்கிறோம். எல்லையின் இந்தப் பக்கம் அல்ல, தேவைப்பட்டால் எல்லையின் மறுபக்கத்திற்கும் சென்று அதைச் செய்வோம்" என்றார்.

 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET 2025 Cut Off Marks: குழப்பி அடித்த நீட் தேர்வு கேள்விகள் - குறையும் கட்-ஆஃப் மார்க், யாருக்கு எவ்வளவு? கணக்கீடு
NEET 2025 Cut Off Marks: குழப்பி அடித்த நீட் தேர்வு கேள்விகள் - குறையும் கட்-ஆஃப் மார்க், யாருக்கு எவ்வளவு? கணக்கீடு
Ramadoss Vs Anbumani : “திமுக கூட்டணி – ராமதாஸ் ; அதிமுக கூட்டணி –அன்புமணி” அடம்பிடிக்கும் தந்தை – மகன்..!
“திமுக கூட்டணி – ராமதாஸ் ; அதிமுக கூட்டணி –அன்புமணி” அடம்பிடிக்கும் தந்தை – மகன்..!
Trump: இனி சினிமாவும் க்ளோஸ்? 100 சதவிகித வரியை அறிவித்த ட்ரம்ப், “ஹாலிவுட்டிற்கு ஆபத்தாம்”
Trump: இனி சினிமாவும் க்ளோஸ்? 100 சதவிகித வரியை அறிவித்த ட்ரம்ப், “ஹாலிவுட்டிற்கு ஆபத்தாம்”
Honda Elevate EV: சம்பவம் லோடட் - மின்சார எடிஷனில் ஹோண்டாவின் ஹிட் SUV மாடல் - 450 கிமீ ரேஞ்ச், விலை, எந்த கார்?
Honda Elevate EV: சம்பவம் லோடட் - மின்சார எடிஷனில் ஹோண்டாவின் ஹிட் SUV மாடல் - 450 கிமீ ரேஞ்ச், விலை, எந்த கார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நான் தான் முடிவெடுப்பேன்” கறாராக சொன்ன ஸ்டாலின்! கலக்கத்தில் மா.செ.க்கள்”விஜய்-இபிஎஸ் சேரக் கூடாது” காய் நகர்த்தும் ரஜினிகாந்த்! காரணம் என்ன?TVK Vijay Meets Rahul Gandhi: ராகுலை சந்திக்கும் விஜய்! தவெக-காங் கூட்டணி? மாறும் கூட்டணி கணக்கு!விஜய்யை பார்க்கப்போன போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET 2025 Cut Off Marks: குழப்பி அடித்த நீட் தேர்வு கேள்விகள் - குறையும் கட்-ஆஃப் மார்க், யாருக்கு எவ்வளவு? கணக்கீடு
NEET 2025 Cut Off Marks: குழப்பி அடித்த நீட் தேர்வு கேள்விகள் - குறையும் கட்-ஆஃப் மார்க், யாருக்கு எவ்வளவு? கணக்கீடு
Ramadoss Vs Anbumani : “திமுக கூட்டணி – ராமதாஸ் ; அதிமுக கூட்டணி –அன்புமணி” அடம்பிடிக்கும் தந்தை – மகன்..!
“திமுக கூட்டணி – ராமதாஸ் ; அதிமுக கூட்டணி –அன்புமணி” அடம்பிடிக்கும் தந்தை – மகன்..!
Trump: இனி சினிமாவும் க்ளோஸ்? 100 சதவிகித வரியை அறிவித்த ட்ரம்ப், “ஹாலிவுட்டிற்கு ஆபத்தாம்”
Trump: இனி சினிமாவும் க்ளோஸ்? 100 சதவிகித வரியை அறிவித்த ட்ரம்ப், “ஹாலிவுட்டிற்கு ஆபத்தாம்”
Honda Elevate EV: சம்பவம் லோடட் - மின்சார எடிஷனில் ஹோண்டாவின் ஹிட் SUV மாடல் - 450 கிமீ ரேஞ்ச், விலை, எந்த கார்?
Honda Elevate EV: சம்பவம் லோடட் - மின்சார எடிஷனில் ஹோண்டாவின் ஹிட் SUV மாடல் - 450 கிமீ ரேஞ்ச், விலை, எந்த கார்?
Avinashi flyover: இறுதிகட்டம் - தமிழ்நாட்டின் நீளமான உயரடுக்கு மேம்பாலம் - 4 வழி, 10.1 கி.மீ., எப்போது திறப்பு விழா?
Avinashi flyover: இறுதிகட்டம் - தமிழ்நாட்டின் நீளமான உயரடுக்கு மேம்பாலம் - 4 வழி, 10.1 கி.மீ., எப்போது திறப்பு விழா?
IND-PAK Tension: ”நீங்க எதிர்பார்க்குறது நடக்கும்” பாகிஸ்தானுக்கான பதிலடி - அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
IND-PAK Tension: ”நீங்க எதிர்பார்க்குறது நடக்கும்” பாகிஸ்தானுக்கான பதிலடி - அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
TN Chennai Weather: சென்னையில் உதிக்காத சூரியன் - தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை
TN Chennai Weather: சென்னையில் உதிக்காத சூரியன் - தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை
நூலிழையில் உயிர் தப்பிய ஆ.ராசா..! மயிலாடுதுறையில் பரபரப்பு..!!
நூலிழையில் உயிர் தப்பிய ஆ.ராசா..! மயிலாடுதுறையில் பரபரப்பு..!!
Embed widget