மேலும் அறிய

"பாகிஸ்தானுக்கு அதிக பணத்தை கொடுத்திருப்போம்" தேர்தல் நேரத்தில் ராஜ்நாத் சிங் பரபர கருத்து!

இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நல்லுறவு இருந்திருந்தால், IMFயிடம் கேட்டதை விட அதிகமான பணத்தை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியிருக்கும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

இந்திய - பாகிஸ்தான் இடையே நல்லுறவு இருந்திருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டதை விட அதிகமான பணத்தை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியிருக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் - இந்தியா:

வரலாற்று ரீதியாகவும் சமகால அரசியல் சூழல் காரணமாகவும் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, காஷ்மீர் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது.

பாகிஸ்தானில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல, இந்தியாவில் நடக்கும் அரசியல் நகர்வுகளை பாகிஸ்தான் உற்று கவனிக்கும்.

இந்த நிலையில், பாகிஸ்தான் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து வரும் கருத்து புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு இருந்திருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டதை விட அதிகமான பணத்தை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியிருக்கும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பரபரப்பாக பேசிய ராஜ்நாத் சிங்:

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராஜ்நாத் சிங், "இன்சானியத், ஜமுஹ்ரியாத், காஷ்மீர் ஆகிய மூன்றும் இணைந்தால், காஷ்மீர் மீண்டும் சொர்க்கமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. இது இந்தியாவின் ஜனநாயகம், அதன் வலிமையின் நிரூபணம். வாக்களிக்காத ஒருவர் கூட எஞ்சியிருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். கடந்த 2014-15 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்காக ஒரு சிறப்பு தொகுப்பை பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமரின் அந்த தொகுப்பு இப்போது அதிகரித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் கேட்ட பணத்தை விட இது அதிகம். நண்பர்களை மாற்றலாம். ஆனால், அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என்று வாஜ்பாய் கூறுவார்.

நல்ல உறவு இருந்திருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) பாகிஸ்தானுக்கு அவர்கள் கேட்டதை விட அதிகமான பணத்தை நாங்கள் கொடுத்திருப்போம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் பாகிஸ்தானின் செயல்படும் பயங்கரவாத முகாம்களை மூட வேண்டும் என்று கூறியது. ஆனால், பாகிஸ்தான் அதைச் செய்யவில்லை.

இது புதிய இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்துவிடக் கூடாது. தீவிரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராடத் தயாராக இருக்கிறோம். எல்லையின் இந்தப் பக்கம் அல்ல, தேவைப்பட்டால் எல்லையின் மறுபக்கத்திற்கும் சென்று அதைச் செய்வோம்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?
IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
Embed widget