மேலும் அறிய

Vande Bharat Train: 'மனித மிருகங்களின் கொடூர புத்தி' வந்தே பாரத் ரயிலின் டிராக்கில் கற்கள் - கோர விபத்து தவிர்ப்பு!

ராஜஸ்தானில் வந்தே பாரத் ரயிலுக்கு ஏற்பட இருந்த கோர விபத்து, ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் வந்தே பாரத் ரயிலின் இருப்புப் பாதையில் கற்கள் குவிக்கப்பட்டு இருந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வந்தே பாரத் ரயில்:

ராஜஸ்தான் மாநிலத்தில் வந்தே பாரத் ரயிலை கவிழ்க்கும் விதமாக, நடைபெற்ற முயற்சி தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. உதய்பூர் மற்றும் ஜெய்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை, கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில், அந்த ரயில் சேவையில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக தான் ஒரு முயற்சி நடந்துள்ளது.

ரயிலை கவிழ்க்க சதி?

ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி சித்தோர்கர் பகுதியில் பாஜக சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. அதில், பிரதமர் மோடியும் பங்கேற்று பேசினார். இந்நிலையில் அதேபகுதியில் தான், உதய்பூர் மற்றும் ஜெய்பூர் இடையேயான வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது.

கங்க்ரார் மற்றும் சோனியானா ரயில் நிலையங்களுக்கு இடைபட்ட பகுதியில்,  இருப்புப் பாதையில் கற்கள் வைக்கப்பட்டு இருந்தன. இருப்பு பாதைக்கு இடையில் கம்பிகள் கூட சொறுகப்பட்டு இருந்தன. இதனை கவனித்த ஓட்டுனர், உடனடியாக சுதாரித்துக்கொண்டு எமர்ஜென்சி பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தியுள்ளார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியிலேயே, வந்தே பாரத் ரயிலை கவிழ்க்கும் முயற்சி நடைபெற்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு:

வந்தே பாரத் ரயிலை உடனடியாக நிறுத்திய ஓட்டுனர், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அங்கு வந்தவர்கள் ஆய்வு செய்து இருப்புப் பாதையில் இருந்த கற்கள் மற்றும் கம்பிகளை அகற்றியதோடு, சம்பவம் தொடர்பாக வழக்கும் பதிவு செய்தனர்.

இதனால், அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பிரதமர் தொடங்கி வைத்த திட்டம்:

உதய்பூர் மற்றும் ஜெய்பூர் இடையேயான இந்த ரயில் சேவையை, கடந்த மாதம் 24ம் தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த ரயிலானது 435 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 15 நிமிடங்களில் கடக்கிறது. முன்பு இதே மார்க்கத்தில் பயணித்த இந்த ரயில்கள் இந்த தூரத்தை 7 மணி நேரத்தில் கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. அதிவேகத்தில் செல்லும் இந்த ரயில் விபத்திற்கு ஆளாகியிருந்தால், விளைவுகள் மோசமாக இருந்திருக்கக் கூடும். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget