மேலும் அறிய

புதுச்சேரியில் தொடர்மழை: வீடுகளில் புகுந்த மழைநீர்!

புதுச்சேரியில் தொடர்மழையால் வீடுகளில் புகுந்த மழைநீர். மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேச்சரிக்கை நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.

தொடர்மழையால் புதுச்சேரியில் வீடுகளில் மழைநீர் புகுந்தது; தற்காலிக முகாமோ, உணவு வசதியோ அரசு செய்து தராத நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர். தொடர் மழையால் புதுச்சேரி வெள்ளக்காடானாது. வீடுகளில் மழைநீர் புகுந்தது. பாதிக்கப்பட்டோருக்கு உணவோ, தற்காலிக முகாமோ எவ்வித ஏற்பாடுகளையும் புதுச்சேரி அரசு தரப்பில் மாவட்ட நிர்வாகம் ஏதும் செய்யவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் யாரும் ஆய்வு செய்யாத சூழலும் நிலவியது. முதல்வர் காரில் அமர்ந்தவாறே பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்த்ததாகக்குறிப்பிட்டனர்.

புதுச்சேரியில் நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய தொடர் மழை பெய்து வருகிறது. கனமழையாக நிதானமாக மழை பெய்தவண்ணம் உள்ளது. இதனால் நகர பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியது. இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 82.1 மிமீ மழை பொழிந்தது. குறிப்பாக இந்திராகாந்தி சிலை, சிவாஜி சிலை, புஸ்சி வீதி உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. இதனால் நகர பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.


புதுச்சேரியில் தொடர்மழை: வீடுகளில் புகுந்த மழைநீர்!

தொடர் மழை எதிரொலியாக பாவாணர் நகர், பூமியான்பேட்டை, ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், உப்பறம் மணல்மேடு, நேதாஜி நகர், வாணரப்பேட்டை, வம்பாகீரப்பாளயைம் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக பாவாணர் நகர் பகுதியில் பல வீடுகளில் மழைநீர் புகுந்தது. அங்குள்ள நான்கு பிரதான சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. சாலையெங்கும் பள்ளங்கள் இருந்ததால், அப்பகுதியினரே தடுப்பு கட்டை கட்டியும், வாகனங்களை குறுக்கே நிறுத்தி போக்குவரத்தை தடை செய்தனர்.

பாதிக்கப்பட்டோர் கூறுகையில், வடிகால் வசதி இல்லை. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. நள்ளிரவு முதல் வீட்டுக்கு தண்ணீர் வந்து பாதிக்கப்பட்டும் யாரும் வந்து பார்க்கவில்லை. உணவுக்கும் வழியில்லை. தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். மழைநீர் தேங்கிய சில பகுதிகளில் ராட்சத மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் மழைநீர் தேங்கியவாறே உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.


புதுச்சேரியில் தொடர்மழை: வீடுகளில் புகுந்த மழைநீர்!

தமிழகத்தின் சாத்தனூர், வீடூர் அணைகள் திறக்கப்பட்டதால் மலட்டாறு, சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. இதனால் புதுவையில் உள்ள படுகை அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. இங்கு பொதுமக்கள் குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை காரணமாக விவசாயப் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது. விவசாய கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதேபோல கட்டிட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், அன்றாட கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களும், மீன்விற்கும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


புதுச்சேரியில் தொடர்மழை: வீடுகளில் புகுந்த மழைநீர்!

பொதுமக்கள் கூறுகையில், தொடர் மழை பெய்தும் தங்க தற்காலிக முகாமோ, உணவோ தர புதுச்சேரி அரசு தரப்பில் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். அதேபோல் அமைச்சர்கள் யாரும் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டனர். முதல்வர் ரங்கசாமி காரில் அமர்ந்தவாறே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்ததாக அவரது அலுவலக தரப்பில் குறிப்பிட்டனர்.

தலைப்பு செய்திகள்

Keralam: இப்படி ஒரு மோசமான மனைவியா? .. நடத்துநருக்காக கண்ணீர் விடும் கேரளம்!
Keralam: இப்படி ஒரு மோசமான மனைவியா? .. நடத்துநருக்காக கண்ணீர் விடும் கேரளம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Actor Dhanush Political Entry : ’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
DMK MLA Markandeyan : திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசு.! தக்க பாடம் புகட்டப்படும்- கனிமொழி
திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசு.! தக்க பாடம் புகட்டப்படும்- கனிமொழி
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Embed widget