மேலும் அறிய

புதுச்சேரியில் தொடர்மழை: வீடுகளில் புகுந்த மழைநீர்!

புதுச்சேரியில் தொடர்மழையால் வீடுகளில் புகுந்த மழைநீர். மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேச்சரிக்கை நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.

தொடர்மழையால் புதுச்சேரியில் வீடுகளில் மழைநீர் புகுந்தது; தற்காலிக முகாமோ, உணவு வசதியோ அரசு செய்து தராத நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர். தொடர் மழையால் புதுச்சேரி வெள்ளக்காடானாது. வீடுகளில் மழைநீர் புகுந்தது. பாதிக்கப்பட்டோருக்கு உணவோ, தற்காலிக முகாமோ எவ்வித ஏற்பாடுகளையும் புதுச்சேரி அரசு தரப்பில் மாவட்ட நிர்வாகம் ஏதும் செய்யவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் யாரும் ஆய்வு செய்யாத சூழலும் நிலவியது. முதல்வர் காரில் அமர்ந்தவாறே பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்த்ததாகக்குறிப்பிட்டனர்.

புதுச்சேரியில் நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய தொடர் மழை பெய்து வருகிறது. கனமழையாக நிதானமாக மழை பெய்தவண்ணம் உள்ளது. இதனால் நகர பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியது. இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 82.1 மிமீ மழை பொழிந்தது. குறிப்பாக இந்திராகாந்தி சிலை, சிவாஜி சிலை, புஸ்சி வீதி உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. இதனால் நகர பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.


புதுச்சேரியில் தொடர்மழை: வீடுகளில் புகுந்த மழைநீர்!

தொடர் மழை எதிரொலியாக பாவாணர் நகர், பூமியான்பேட்டை, ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், உப்பறம் மணல்மேடு, நேதாஜி நகர், வாணரப்பேட்டை, வம்பாகீரப்பாளயைம் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக பாவாணர் நகர் பகுதியில் பல வீடுகளில் மழைநீர் புகுந்தது. அங்குள்ள நான்கு பிரதான சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. சாலையெங்கும் பள்ளங்கள் இருந்ததால், அப்பகுதியினரே தடுப்பு கட்டை கட்டியும், வாகனங்களை குறுக்கே நிறுத்தி போக்குவரத்தை தடை செய்தனர்.

பாதிக்கப்பட்டோர் கூறுகையில், வடிகால் வசதி இல்லை. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. நள்ளிரவு முதல் வீட்டுக்கு தண்ணீர் வந்து பாதிக்கப்பட்டும் யாரும் வந்து பார்க்கவில்லை. உணவுக்கும் வழியில்லை. தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். மழைநீர் தேங்கிய சில பகுதிகளில் ராட்சத மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் மழைநீர் தேங்கியவாறே உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.


புதுச்சேரியில் தொடர்மழை: வீடுகளில் புகுந்த மழைநீர்!

தமிழகத்தின் சாத்தனூர், வீடூர் அணைகள் திறக்கப்பட்டதால் மலட்டாறு, சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. இதனால் புதுவையில் உள்ள படுகை அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. இங்கு பொதுமக்கள் குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை காரணமாக விவசாயப் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது. விவசாய கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதேபோல கட்டிட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், அன்றாட கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களும், மீன்விற்கும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


புதுச்சேரியில் தொடர்மழை: வீடுகளில் புகுந்த மழைநீர்!

பொதுமக்கள் கூறுகையில், தொடர் மழை பெய்தும் தங்க தற்காலிக முகாமோ, உணவோ தர புதுச்சேரி அரசு தரப்பில் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். அதேபோல் அமைச்சர்கள் யாரும் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டனர். முதல்வர் ரங்கசாமி காரில் அமர்ந்தவாறே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்ததாக அவரது அலுவலக தரப்பில் குறிப்பிட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget