மேலும் அறிய

Rahul Gandhi: பொய்களால் கட்டமைக்கப்பட்ட ராகுல் காந்தியின் H-Files; அம்பலமான ‘வாக்கு திருட்டு‘ நாடகம்

கடந்த 2024-ம் ஆண்டு, ஹரியானா தேர்தலில் ராகுல் காந்தி சுமத்திய “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது உண்மை கண்டறிதல் மூலம் அம்பலமாகியுள்ளது.

2024 ஹரியானா சட்டசபைத் தேர்தலில் பெரும் “வாக்கு திருட்டு” நடந்ததாக சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ஆனால், உண்மை கண்டறிதலில், ​​அவரது குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக அடிபட்டுவிட்டது. தனது “H-Files” மூலம் அவர் வைத்த குற்றச்சாட்டுகள் நன்கு திட்டமிட்ட ஒரு தவறான தகவல் பிரசாரமாகவே மாறியுள்ளது.

ராகுல் காந்தியின் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது

முதலாவது குற்றச்சாட்டாக, வயதான ஒரு பெண்மணியின் பெயர், தாகோலா கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் 220 முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாக ராகுல் காந்தி கூறினார். ஆனால், அந்தப் பட்டியல் “முலானா” தொகுதியில் இருந்தது. அங்கு காங்கிரஸ் தான் வெற்றி பெற்றது. உண்மையில், வாக்காளர் எண்ணிக்கை அதிகமானால் தேர்தல் ஆணையம் புதிய பூத் பிரிவுகளை உருவாக்குவது வழக்கமான ஒன்று. அது சாதாரண நிர்வாக நடைமுறைதான், மோசடி அல்ல.

அடுத்ததாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு பற்றிய குற்றச்சாட்டு. பொதுவாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்பாத ராகுல் காந்தி, சில கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக வந்தவுடன், அதையே முக்கிய சான்றாக எடுத்துக் கொண்டார். இதுவே ராகுல் காந்தியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதன்பின், தபால் வாக்கு குறித்து அவர் கூறியதெல்லாம் தவறான விளக்கம் என்பது தெரியவந்துள்ளது. ஹரியானாவில் மொத்த தபால் வாக்குகள் 0.57 சதவீதம் மட்டுமே. இத்தனை சிறிய எண்ணிக்கையை கொண்டு பெரிய அளவிலான மோசடி நடந்தது எனச் சொல்லுவது அபத்தமானதாகும். மேலும், பல இடங்களில் பாஜக தான் தபால் வாக்குகளில் முன்னிலையில் இருந்து இறுதியில் தோற்றது என்பது பதிவாகியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான 99.43 சதவீத வாக்குகளை விட்டுவிட்டு, ஒரு சதவீதத்திற்கும் குறைவான தபால் வாக்குகளை வைத்து அவர் சுமத்திய குற்றச்சாட்டு, வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டது என தெளிவாகிறது.

வெட்டி ஒட்டி வெளியிடப்பட்ட பொய்யான வீடியோ

மேலும், முதலமைச்சர்ர் நயாப் சிங் சைனியின் பேச்சை துண்டித்து வெளியிட்டு “வாக்கு திருட்டு ஒப்புதல்” என ராகுல் காந்தி வதந்தி பரப்பினார். ஆனால், அந்த முழு வீடியோவில், “தனியாக அரசு அமைக்கும் நம்பிக்கை” குறித்து அவர் கூறியிருந்தார் என்பது பின்னர் உறுதியானது. பின்னர், அது குறித்து முதலமைச்சர் சைனி ராகுல் காந்தியை விமர்சித்தது தனிக்கதை.

அதேபோல, ஒரே பெண் 22 முறை வாக்களித்தார் என்ற ராகுலின் குற்றச்சாட்டும், முழுக்க முழுக்க புனையப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. பெயர் வேறுபாடு, குடியிருப்பு மாற்றம் போன்ற காரணங்களால், சில பெயர்கள் இருமுறை தோன்றலாம். தேர்தல் ஆணையம் அவற்றை திருத்துவது வழக்கம். இதற்கு எந்த சட்டபூர்வ புகாரும் காங்கிரஸால் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டில் வெளிநாட்டையும் இழுத்த ராகுல்

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி “நகல் வாக்காளர் அடையாளம்” என காங்கிரஸ் காட்டியது. ஆனால், அந்த பிரேசில் நாட்டு மாடல், தனக்கு இந்திய அரசியலோடு தொடர்பே இல்லை என தெரிவித்திருந்தார். இதுவே காங்கிரஸின் தவறான பிரசாரத்தின் உச்சநிலையை காட்டுகிறது.

மொத்தத்தில், ராகுல் காந்தியின் “H-Files”, உண்மைக்குப் புறம்பான நாடகம் என்பது தெளிவாகிறது. எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் உண்மையான ஆதாரமே இல்லை. தேர்தல் முறைகள் வெளிப்படையாகவும், சட்டப்படியும் நடைபெற்றுள்ளன. மொத்தத்தில், ராகுல் காந்தி சொன்னது போல் உண்மையில் “வாக்கு திருட்டு” நடைபெறவில்லை. மாறாக, ராகுல் காந்தியால்உண்மை திருட்டுநடத்தப்பட்டுள்ளது என்பதே தெளிவாகிறது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Musk on World War: “இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
“இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
Embed widget