மேலும் அறிய

National Herald Case: அமலாக்கத்துறை விசாரணை: ஆஜராக அவகாசம் கோரினார் ராகுல் காந்தி

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவகாசம் கோரியுள்ளார். ஜூன் 17 முதல் ஜூன் 20 வரையிலான நாட்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியுள்ளார்.

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவகாசம் கோரியுள்ளார். ஜூன் 17 முதல் ஜூன் 20 வரையிலான நாட்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியுள்ளார். தனது தாய் சோனியா காந்தி உடல்நிலையை காரணம் காட்டி அவர் விலக்கு கோரியுள்ளார். ஆகையால், ஜூன் 20 திங்களன்று ஆஜராவதாகக் கூறியுள்ளார். இருப்பினும் ராகுல் காந்தியின் இந்த கோரிக்கைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை. 

அமலாக்கத்துறை சம்மன்:

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சோனியா காந்தி கடந்த 5ஆம் தேதியும் ராகுல் காந்தி 8ஆம் தேதியும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பால் வரும் 23 ஆம் தேதி ஆஜராகுமாறு புதிய சம்மன் அனுப்பப்பட்டது. ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்ததால் கூடுதல் அவகாசம் கேட்டார். இதையடுத்து அவருக்கு ஜூன் 13ல் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அன்றைய தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். ஆஜராவதற்கு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நடை பேரணியாக வந்தார். அவருடன் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பேரணியாக சென்றனர். பேரணியாக சென்றவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதால், ராகுல் காந்தி காரில் சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார். 

முதல் நாளன்று, அவரிடம் 11 மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியை ராகுல் காந்தியும், பிரியா காந்தியும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். இரண்டாம் நாளில் சற்று குறைவான நேரம் விசாரணை நடந்தது. மூன்றாவது நாள் விசாரணைக்கு முன்னர் காங்கிரஸ் எம்.பி.க்களை காவல்துறையினர் கையாண்ட விதம் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்தனர்.

வழக்கு:

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010ஆம் ஆண்டு கைப்பற்றியது. நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை, யங் இந்தியா நிறுவனத்துக்கு  மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ராகுல் காந்தியும் மூன்று நாட்கள் விசாரணைக்கு ஆஜராகிவிட்டார். தற்போது தாயின் சிகிச்சைக்காக ஆஜராவதிலிருந்து விலக்கு கோரியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget