மேலும் அறிய

National Herald Case: அமலாக்கத்துறை விசாரணை: ஆஜராக அவகாசம் கோரினார் ராகுல் காந்தி

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவகாசம் கோரியுள்ளார். ஜூன் 17 முதல் ஜூன் 20 வரையிலான நாட்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியுள்ளார்.

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவகாசம் கோரியுள்ளார். ஜூன் 17 முதல் ஜூன் 20 வரையிலான நாட்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியுள்ளார். தனது தாய் சோனியா காந்தி உடல்நிலையை காரணம் காட்டி அவர் விலக்கு கோரியுள்ளார். ஆகையால், ஜூன் 20 திங்களன்று ஆஜராவதாகக் கூறியுள்ளார். இருப்பினும் ராகுல் காந்தியின் இந்த கோரிக்கைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை. 

அமலாக்கத்துறை சம்மன்:

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சோனியா காந்தி கடந்த 5ஆம் தேதியும் ராகுல் காந்தி 8ஆம் தேதியும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பால் வரும் 23 ஆம் தேதி ஆஜராகுமாறு புதிய சம்மன் அனுப்பப்பட்டது. ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்ததால் கூடுதல் அவகாசம் கேட்டார். இதையடுத்து அவருக்கு ஜூன் 13ல் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அன்றைய தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். ஆஜராவதற்கு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நடை பேரணியாக வந்தார். அவருடன் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பேரணியாக சென்றனர். பேரணியாக சென்றவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதால், ராகுல் காந்தி காரில் சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார். 

முதல் நாளன்று, அவரிடம் 11 மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியை ராகுல் காந்தியும், பிரியா காந்தியும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். இரண்டாம் நாளில் சற்று குறைவான நேரம் விசாரணை நடந்தது. மூன்றாவது நாள் விசாரணைக்கு முன்னர் காங்கிரஸ் எம்.பி.க்களை காவல்துறையினர் கையாண்ட விதம் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்தனர்.

வழக்கு:

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010ஆம் ஆண்டு கைப்பற்றியது. நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை, யங் இந்தியா நிறுவனத்துக்கு  மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ராகுல் காந்தியும் மூன்று நாட்கள் விசாரணைக்கு ஆஜராகிவிட்டார். தற்போது தாயின் சிகிச்சைக்காக ஆஜராவதிலிருந்து விலக்கு கோரியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget