மேலும் அறிய

Rahul Gandhi : ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு நன்றி..அவங்கதான் என்னோட குரு...என்ன சொல்ல வருகிறார் ராகுல் காந்தி..!

"நாட்டை சிந்திக்க வைப்பதற்கு ஒரு புதிய வழியை வழங்க முயற்சிக்கிறேன். பாஜக பல பிரச்சாரங்களை செய்கிறது. ஆனால், உண்மையை எதிர்த்து அதனால் போராட முடியாது"

காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். 
 
இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது டெல்லியை எட்டி உள்ளது. 

நடைபயணத்தில் யாத்திரீகர்கள் தூங்குவதற்காக பயன்படுத்தப்படும் கண்டைனரின் பராமரிப்புக்காக ராகுல் காந்தியின் நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

இதற்கு மத்தியில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை சரமாரி குற்றம்சாட்டி இருந்தது.

இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "நடைபயணத்தின் போது, பாதுகாப்பு நெறிமுறைகளை நான் மீண்டும் மீண்டும் மீறுவதாக பாதுகாப்புப் படையினரை சொல்ல வைத்ததன் மூலமும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபயணத்தை நிறுத்துமாறு கடிதங்களை அனுப்புவதன் மூலமும் பாஜக தலைமையிலான அரசாங்கம் காரணமின்றி என் மீது வழக்கு பதிவு முயற்சிக்கிறது.

நீங்கள் குண்டு துளைக்காத வாகனத்தில் செல்லுங்கள் என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. நான் அதை எப்படி செய்ய முடியும்? நடைபயணத்திற்கு நான் கால் நடையாக நடக்க வேண்டும். பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், இதை பிரச்னை ஆக்குகிறார்கள்.

வெறுப்புக்கு எதிராக தேசத்தை ஒன்றிணைப்பதே நடைபயணத்தின் நோக்கமாகும். இது எங்களுக்கு ஒரு வெற்றிகரமான நடைபயணம். இது பல சாதனைகளை படைத்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

நாட்டை சிந்திக்க வைப்பதற்கு ஒரு புதிய வழியை வழங்க முயற்சிக்கிறேன். பாஜக பல பிரச்சாரங்களை செய்கிறது. ஆனால், உண்மையை எதிர்த்து அதனால் போராட முடியாது.

அவர்களிடம் நிறைய பணம் உள்ளது. ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் சத்தியத்துடன் போராட முடியாது. எந்த முன் யோசனையும் இன்றி நடைபயணத்தை தொடங்கினேன்.

 

இந்த பயணத்திலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் விமர்சனங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அது நம்மை வலுவாக்க உதவுகிறது. அவர்கள்தான் என் குரு" என்றார்.

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget