மேலும் அறிய

Rahul Gandhi : ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு நன்றி..அவங்கதான் என்னோட குரு...என்ன சொல்ல வருகிறார் ராகுல் காந்தி..!

"நாட்டை சிந்திக்க வைப்பதற்கு ஒரு புதிய வழியை வழங்க முயற்சிக்கிறேன். பாஜக பல பிரச்சாரங்களை செய்கிறது. ஆனால், உண்மையை எதிர்த்து அதனால் போராட முடியாது"

காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். 
 
இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது டெல்லியை எட்டி உள்ளது. 

நடைபயணத்தில் யாத்திரீகர்கள் தூங்குவதற்காக பயன்படுத்தப்படும் கண்டைனரின் பராமரிப்புக்காக ராகுல் காந்தியின் நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

இதற்கு மத்தியில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை சரமாரி குற்றம்சாட்டி இருந்தது.

இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "நடைபயணத்தின் போது, பாதுகாப்பு நெறிமுறைகளை நான் மீண்டும் மீண்டும் மீறுவதாக பாதுகாப்புப் படையினரை சொல்ல வைத்ததன் மூலமும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபயணத்தை நிறுத்துமாறு கடிதங்களை அனுப்புவதன் மூலமும் பாஜக தலைமையிலான அரசாங்கம் காரணமின்றி என் மீது வழக்கு பதிவு முயற்சிக்கிறது.

நீங்கள் குண்டு துளைக்காத வாகனத்தில் செல்லுங்கள் என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. நான் அதை எப்படி செய்ய முடியும்? நடைபயணத்திற்கு நான் கால் நடையாக நடக்க வேண்டும். பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், இதை பிரச்னை ஆக்குகிறார்கள்.

வெறுப்புக்கு எதிராக தேசத்தை ஒன்றிணைப்பதே நடைபயணத்தின் நோக்கமாகும். இது எங்களுக்கு ஒரு வெற்றிகரமான நடைபயணம். இது பல சாதனைகளை படைத்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

நாட்டை சிந்திக்க வைப்பதற்கு ஒரு புதிய வழியை வழங்க முயற்சிக்கிறேன். பாஜக பல பிரச்சாரங்களை செய்கிறது. ஆனால், உண்மையை எதிர்த்து அதனால் போராட முடியாது.

அவர்களிடம் நிறைய பணம் உள்ளது. ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் சத்தியத்துடன் போராட முடியாது. எந்த முன் யோசனையும் இன்றி நடைபயணத்தை தொடங்கினேன்.

 

இந்த பயணத்திலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் விமர்சனங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அது நம்மை வலுவாக்க உதவுகிறது. அவர்கள்தான் என் குரு" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
Deepa Shankar: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Embed widget