மேலும் அறிய

Raghav Chadha: ஆம் ஆத்மிக்கு ஆபத்து; பாஜகவில் இணையும் ராகவ் சத்தா உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி-க்கள்; டெல்லியில் பரபரப்பு

Raghav Chadha Joins BJP: ஆம் ஆத்மி கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு எம்.பி-க்கள் பாஜகவில் இணைவார்கள் என்று மாநிலங்களவை எம்.பி. ராகவ் சதா கூறியுள்ளார். இதனால் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சத்தா, இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து தனது ராஜினாமாவை அறிவித்தார். சத்தாவுடன், சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோரும் மாநிலங்களவையிலிருந்து ராஜினாமா செய்தனர். மேலும், மூன்றில் இரண்டு பங்கு எம்.பி-க்கள் பாஜகவில் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“பாஜகவுடன் இணைகிறோம்“

இது குறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சத்தா, "நாங்கள் பாஜகவுடன் இணைகிறோம். கடந்த 12 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, முன்பு பல தலைவர்கள் எடுக்க அஞ்சிய பல முடிவுகளை எடுத்துள்ளது. இந்த தலைமைக்கு மக்கள் ஒருமுறை அல்ல, மும்முறை ஒப்புதல் அளித்துள்ளனர். பிரதமர் மோடியின் தலைமையில் நாங்கள் நாட்டிற்காக பணியாற்றுவோம்," என்று கூறியுள்ளார்.

மேலும், "15 ஆண்டுகளாக என் ரத்தத்தால் நான் வளர்த்தெடுத்த ஆம் ஆத்மி கட்சி, தன் பாதையை இழந்துவிட்டது. இப்போது அது தேசிய நலனுக்காகச் செயல்படாமல், தனிப்பட்ட ஆதாயத்திற்காகச் செயல்படுகிறது. நான் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி, மீண்டும் மக்களிடம் திரும்புகிறேன். இந்தக் கட்சியை டெல்லி, பஞ்சாப் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற மாநிலங்களுக்கு விரிவுபடுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்தோம்," என்றும் அவர் கூறினார்.

பின்னர் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சந்தீப் பதக், 'என் வாழ்வில் இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், அது ஏற்பட்டுவிட்டது. நான் 10 ஆண்டுகளாக இந்தக் கட்சியுடன் இணைந்திருந்தேன். இன்று ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பிரிகிறேன்' என்று கூறினார்.

ஆம் ஆத்மியில் இப்போது எத்தனை எம்.பி-க்கள் இருப்பார்கள்.?

தன்னுடன் 8 எம்.பி.க்கள் இருப்பதாக மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா கூறியுள்ளார். அவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைவார்கள். மாநிலங்களவையில் 10 ஆம் ஆத்மி எம்.பி-க்கள் உள்ளனர், அவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் எங்களுடன் உள்ளனர் என்று ராகவ் சத்தா கூறியுள்ளார்.

“அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இன்று காலை நாங்கள் கையெழுத்திட்ட கடிதம் மற்றும் ஆவணங்களை மாநிலங்களவை தலைவரிடம் ஒப்படைத்துள்ளோம். அவர்களில் 3 பேர் உங்கள் முன்னால் இங்கே இருக்கிறார்கள். எங்களைத் தவிர, ஹர்பஜன் சிங், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி மற்றும் சுவாதி மாலிவால் ஆகியோரும் உள்ளனர்." என்று செய்தியாளர்கள் சந்திப்பில் சத்தா தெரிவித்தார்.

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கு, மாநிலங்களவையில் நாராயண் தாஸ், சஞ்சய் சிங் மற்றும் சந்த் பல்பிர் சிங் ஆகியோர் மட்டுமே எஞ்சியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம்! தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு வானிலை எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம்! தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு வானிலை எச்சரிக்கை!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget