மேலும் அறிய

Punjab Internet Ban: மனித வெடிகுண்டுகளை சேர்க்கும் அம்ரித் பால்.. பஞ்சாபில் இணைய சேவை துண்டிப்பு நீட்டிப்பு

பஞ்சாபில் இணைய சேவை துண்டிப்பு இரண்டாவது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சீக்கிய மதபோதகர் அம்ரித் பாலை தேடும் பண்இ தொடரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி பஞ்சாபில் செல்போன்களுக்கான இணைய சேவை துண்டிப்பு செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை 12 மணி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

”இளைஞர்களை மனித வெடிகுண்டுகளாக்கும் அம்ரித் பால்”

தேடப்பட்டு வரும் சீக்கிய மதபோதகர் அம்ரித்பால் சிங் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. அதன்படி, போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் உள்ள இளைஞர்களை மூளை சலவை செய்து அவர்களை அம்ரித் மனித வெடிகுண்டுகளாக மாற்றி வருவதாக பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் தகவல் தெரிவிக்கின்றன.   அதோடு, குருத்வாரா பகுதியில் ஆயுதங்களை மறைத்து வைத்து, தற்கொலைப்படை தாக்குதல் நடத்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து, தலைமறைவாக உள்ள அம்ரித்பாலை தேடும் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இணைய சேவை ரத்து நீட்டிப்பு:

இதனிடையே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் பஞ்சாபில் “குரல் அழைப்பு தவிர, அனைத்து மொபைல் இணைய சேவைகள், எஸ்எம்எஸ் சேவைகள் (வங்கி மற்றும் மொபைல் ரீசார்ஜ் தவிர) மற்றும் அனைத்து டாங்கிள் (dongle) சேவைகளும் மொபைல் நெட்வொர்க்குகளில் வழங்கப்படும் பிற சேவைகளும்  பிராந்திய அதிகார வரம்பில் பொது பாதுகாப்பு நலன் கருதி நாளை நண்பகல் 12:00 மணி நேரம் இடைநிறுத்தப்படும்" தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், பஞ்சாபில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் நடப்பது என்ன?

சீக்கியர்களுக்கு தனி தேசம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான அம்ரித்பால் சிங், தன்னைத் தானே மதபோதகர் என அழைத்து கொள்கிறார். அம்ரித்பாலின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து அஜ்னாலா பகுதி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். லவ்பிரீத் சிங்கை விடுவிக்க வலியுறுத்தி, அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் கைகளில் வாள், துப்பாக்கிகளை ஏந்தியவாறு, கடந்த வாரம் அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சூறையாடி வன்முறையில் ஈடுபட்டனர்.

இதில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 6 போலீசார் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் 6 பேரை பஞ்சாப் போலீசார் இருதினங்களுக்கு முன்னர் கைது செய்தனர். இதையடுத்து, அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தினர். ஆனால், அம்ரித்தை கைது செய்தால் கலவரம் ஏற்பட்டு, பஞ்சாப்பில் நடைபெற்று வரும் ஜி20 கூட்டம் பாதிக்கப்படும் என, கைது நடவடிக்கையை தாமதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இணையதள சேவை துண்டிப்பு நீட்டிப்பு

இதனிடையே, ஜலந்தரின் ஷாகோட் பகுதிக்கு அம்ரித் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, ஆதரவாளர்களின் வாகனங்கள் புடைசூழ சென்று கொண்டிருந்த அம்ரித்பால் சிங்கை, பஞ்சாப் சிறப்பு போலீசார் விரட்டினர். ஆனால், போலீசாரின் பிடியில் சிக்காமல் அம்ரித் தப்பினர்.  இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் 18ம் தேதியன்றே இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து, அம்ரித்தின் ஆதரவாளர்கள் 80-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு, அம்ரித்தை தேடும் பணியும் மாநிலம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று நண்பலுடன் முடியவிருந்து இணைய சேவை துண்டிப்பு, மீண்டும் நாளை நண்பகல் 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
Embed widget