மேலும் அறிய

Punjab President Rule: பஞ்சாபில் குடியரசு தலைவர் ஆட்சியா? பகீர் கிளப்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் கடிதம்

கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தொடர் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மேற்குவங்கம், டெல்லி என இந்த பட்டியல் நீள்கிறது. சமீபத்தில், டெல்லி அரசின் அதிகாரங்களை நிலைநாட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவால் அரசின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியது.

அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வரும் எதிர்க்கட்சி மாநிலங்கள்:

கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தொடர் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் சூழலில், இந்த பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் மற்றொரு மாநிலமான பஞ்சாப் இணைந்துள்ளது. அங்கு, மாநில அரசுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

அனுப்பப்படும் கடிதங்களுக்கு முதலமைச்சர் பகவந்த் மான்  பதிலளிக்கவில்லை என்றால், பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்யப்படும் என ஆளுநர் எச்சரித்திருப்பது புதிய அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. 

முதலமைச்சருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எழுதியுள்ள கடிதத்தில், "போதைப்பொருள்கள் கிடைப்பது குறித்தும், அதை மக்கள் பயன்படுத்தி வருவது குறித்தும், பல்வேறு அரசு அமைப்புகளிடமிருந்து அறிக்கைகள் கிடைத்துள்ளன.

பஞ்சாபை புரட்டிபோட்ட ஆளுநரின் கடிதம்:

மேலும் அவை மருந்தகங்களிலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுபானக் கடைகளிலும் கிடைப்பதாகக் கூறப்படுவது" என குறிப்பிட்டுள்ளார். பஞ்சாபில் ஐந்தில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் சமீபத்திய அறிக்கையை மேற்கோள் காட்டிய ஆளுநர், "முந்தைய கடிதத்தில் முதலமைச்சரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காததால் வருத்தம் அடைந்துள்ளேன். அரசியலமைப்பு தோல்வி அடைந்துவிட்டதாக குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்புவேன்.

பொதுவாக, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356இன் கீழ், மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது. அரசியலமைப்பு தோல்வி அடைந்துவிட்டதாக குடியரசு தலைவருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பும்பட்சத்தில், குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. இதன் மூலம், குறிப்பிட்ட மாநிலம், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது.

இதை கடிதத்தில் மேற்கோள் காட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், "அரசியலமைப்பு தோல்வி குறித்து சட்டப்பிரிவு 356வது பிரிவின் கீழ் இந்திய குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்புவது குறித்து இறுதி முடிவை எடுப்பதற்கு முன், ஐபிசியின் 124வது பிரிவின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்குவது குறித்து முடிவெடுக்க உள்ளேன்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள எனது கடிதங்களின் கீழ் தேவையான தகவல்களை எனக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாநிலத்தில் போதைப்பொருள் பிரச்னை தொடர்பாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் எனக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். தவறினால் நான் நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
Maruti Ignis கார் வாங்கலாமா? வேண்டாமா? விலை, மைலேஜ், தரம் இதுதான்!
Maruti Ignis கார் வாங்கலாமா? வேண்டாமா? விலை, மைலேஜ், தரம் இதுதான்!
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
Embed widget