மேலும் அறிய

SC Vs President: யாருக்கு பவர் அதிகம்? குடியரசு தலைவர் Vs உச்சநீதிமன்றம் - ஷாக் அடிக்கும் அதிகாரங்கள்

CJI Vs Presiudent: துணைக் குடியரசு தலைவரின் பேச்சால் குடியரசு தலைவர் மற்றும் உச்சநீதிமன்றம் அதிகாரங்கள் தொடர்பான கேள்வி எழுந்துள்ளது.

CJI Vs Presiudent: குடியரசு தலைவர் மற்றும் உச்சநீதிமன்றம், ஆகிய இருவரில் யாருக்கு வலுவான அதிகாரம் உள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

துணைக்குடியரசு தலைவர் பேச்சு:

தமிநாடு அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுதலைவர் மற்றும் ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக பேசிய துணைக்குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், ”குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. என் வாழ்நாளில் இப்படி ஒரு நிலையை பார்ப்பேன் என்று நான் கருதவில்லை. ”முழுமையான நீதியை" உறுதி செய்வதற்குத் தேவையான எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கும் அதிகாரத்தை வழங்கும் அரசியலமைப்பின் 142வது பிரிவு, ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையாக மாறியுள்ளது” என துணைக்குடியரசு தலைவர் விமர்சித்தார்.

எழும் கேள்விகள்..!

துணைக்குடியரசு தலைவரின் பேச்சை தொடர்ந்து நீதிமன்றம் சரியாக தான் செயல்படுகிறதா? சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறதா? உச்சநீதிமன்றத்தால் குடியரசு தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா? அவர் எடுத்த முடிவுகளை நீதித்துறை மறுஆய்வு செய்யவும் உச்ச நீதிமன்றத்திற்கு போதுமான அதிகாரம் உள்ளதா?  என பல கேள்விகள் எழுந்துள்ளன.

குடியரசு தலைவரின் பணிகள் என்ன?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, குடியரசு தலைவருக்கும்,  உச்ச நீதிமன்றத்திற்கும் வெவ்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குடியரசு தலைவர் மத்திய அரசின் தலைவர், நிர்வாக அதிகாரங்கள் குடியரசுத் தலைவரிடம் மட்டுமே இருக்கும். இது மட்டுமல்லாமல், அவர் முப்படைகளின் உச்ச தளபதியாகவும் உள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் உரிமையும் உண்டு. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியத்தின் பரிந்துரையின் பேரில் மட்டுமே குடியரசு தலைவர் நீதிபதிகளை நியமிக்கிறார்.  அதே நேரத்தில், நீதிபதிகளை அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கும் உரிமையும் குடியரசு தலைவருக்கு உண்டு.

குடியரசு தலைவர் அதிகாரங்கள் என்ன?

எந்தவொரு வழக்கிலும் சட்ட அல்லது உண்மை சார்ந்த கேள்விகள் எழுந்தால், இந்த விஷயத்தில் ஆலோசனை வழங்க நீதிமன்றத்திற்கு குடியரசு தலைவர் உத்தரவிடலாம். அதே நேரத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையில் குடியரசு தலைவர் மட்டுமே மன்னிப்பு வழங்க முடியும்.  உச்ச நீதிமன்றம் நாட்டின் குடியரசு தலைவருக்கு ஆலோசனை வழங்க முடியும், ஆனால் குடியரசு தலைவர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லைகுடியரசு தலைவருக்கு பாக்கெட் வீட்டோ (மறுப்பாணை) மற்றும் ஒரு மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரத்தைத் தவிர, அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின்படி தவிர, வேறு எந்த அதிகாரங்களையும் அவர் பயன்படுத்த முடியும்.

உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்கள்:

குடியரசு தலைவரை காட்டிலும் உச்சநீதிமன்றம் தான் அதிகாரமிக்கது எனவும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். காரணம், இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சியே அன்றி நிர்வாகத்தின் ஆட்சி கிடையாது என்பதால் ஆகும். அதோடு, அரசமைப்பின் பாதுகாவலனாகவே உச்சநீதிமன்றம் தான் திகழ்கிறது. குடியரசு தலைவரால் எந்தவொரு சட்டத்தையும் சுயமாக அமல்படுத்த முடியாது. ஆனால், உச்சநீதிமன்றத்தால் அதனை செய்ய முடியும். அந்த அதிகாரத்தை அரசியலமைப்பு பிரிவு 142 வழங்குகிறது. மத்திய மற்றும் மாநில அமைச்சரவை முடிவுகளுக்கு கட்டுப்பட்டே செயல்படுவதால்,  குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் பதவிகள் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் பதவிகள் மட்டுமே என்று விமர்சிக்கப்படுவதும் உண்டு.

மூன்று பதவிகளையும் வகித்த ஹிதயத்துல்லா

குடியரசுத் தலைவர் வெளிநாடு போனாலோ, மனநலம் பாதிக்கப்பட்டாலோ, இறந்தே போனாலோ துணைக் குடியரசுத் தலைவர் அந்தப் பதவிக்கு வருவார். துணைக் குடியரசுத் தலைவரும் அப்படி இல்லாது போனால் நாட்டின் குடியரசுத் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதியே தானாகச் செயல்படுவார். அதாவது அவரை யாரும் பொறுப்பு ஏற்கச் சொல்வதில்லை. அவராகவே அப்பொறுப்பை எடுத்துக் கொள்வார். அதற்கான முன்னுதாரணமாக இருந்தவர்தான். முகமது ஹிதயத்துல்லா. பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் துணைக்குடியரசு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் இந்திய தலைமை நீதிபதி, இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் ஆகிய மூன்று பதவிகளிலும் பணியாற்றிய ஒரே நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget