மேலும் அறிய

"எந்த நாகரிக சமூகமும் இதை ஏத்துக்காது" கொல்கத்தா சம்பவம் குறித்து மனம் நொந்து பேசிய குடியரசு தலைவர்!

கொல்கத்தா மருத்துவர் சம்பவம் குறித்து வேதனையாக பேசியுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கூட்டு மறதியால் இந்தியா சமூகம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

தங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகள், இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாவதை எந்த நாகரீக சமூகமும் அனுமதிக்காது என கொல்கத்தா மருத்துவர் சம்பவம் குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேதனை தெரிவித்துள்ளார். 

நாட்டை உலுக்கிய கொல்கத்தா சம்பவம்: மேற்குவங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து முதல்முறையாக பேசியுள்ளார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. "இந்த கொடூரமான செயல்களின் மூல காரணங்களை சரி செய்ய நம் சமூகத்தில் நேர்மையான, பாரபட்சமற்ற சுயபரிசோதனை நடக்க வேண்டும்" என்றார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய குடியரசு தலைவர், "மிகவும் வேதனையாக உள்ளது. இனியும் இதை ஏற்று கொள்ள முடியாது. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். நீண்டகாலமாக பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை சம்பவங்களை தடுக்க வேண்டும்.

"கூட்டு மறதியால் பாதிக்கப்பட்ட இந்திய சமூகம்"

மாணவர்கள், மருத்துவர்கள், மக்கள் என அனைவரும் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், குற்றவாளிகள் எங்கேயோ அலைந்து திரிந்து வருகின்றனர். தங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு, இத்தகைய கொடுமைகள் நடப்பதை எந்த நாகரீக சமூகமும் அனுமதிக்காது.

குறைந்த சக்தி படைத்தவர்கள், குறைந்த திறன் உள்ளவர்கள், குறைந்த அறிவாற்றல் கொண்டவர்கள் என  பெண்களை தாழ்வானவர்களாக பார்ப்பது இழிவான போக்கு. 2012 ஆம் ஆண்டு நிர்பயா வழக்குக்குப் பிறகு பல ஆண்டுகளாக இந்திய சமூகம் கூட்டு மறதியால் பாதிக்கப்பட்டுள்ளது. அருவருப்பாக இருக்கிறது. இந்த வக்கிரத்தை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த சரியான முறையில் கையாள்வோம்" என்றார்.

கொல்கத்தா மருத்துவர் வழக்கை கண்டித்து நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி பெண்கள் போராடி வருகின்றனர். மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பிறகே, சில மாநிலங்களில் பணிக்கு திரும்ப மருத்துவர்கள் ஒப்பு கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க: 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்.. இளைஞர்களே நோட் பண்ணுங்க.. மோடி அரசின் செம்ம சர்ப்ரைஸ்!

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget