மேலும் அறிய

"கூட இருக்குறவங்களுக்கு காலை எது ராத்திரி எதுனு தெரியாது" - ராகுல் காந்தி பற்றி பிரணாப் முகர்ஜி கூறியது என்ன?

பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்தா முகர்ஜி, தனது தந்தை குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நேரு குடும்பம் பற்றியும் ராகுல் காந்தி பற்றி பிரணாப் முகர்ஜி தெரிவித்த கருத்துகளும் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், கடந்த 2020ஆம் ஆண்டு மறைந்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

ராகுல் காந்தி பற்றி பிரணாப் முகர்ஜி கூறியது என்ன?

இந்திரா காந்தி தொடங்கி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் அமைச்சரவை வரையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இந்திரா காந்தியின் படுகொலைக்கு பிறகும், 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்த போதிலும் பிரணாப் முகர்ஜியே பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரால் கடைசி வரை அந்த பதவியை அடைய முடியவில்லை.

இச்சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் பிரணாப் முகர்ஜி கொண்டிருந்த உறவு குறித்து அவரது மகள் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்தா முகர்ஜி, தனது தந்தை குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நேரு குடும்பம் பற்றியும் ராகுல் காந்தி பற்றி பிரணாப் முகர்ஜி தெரிவித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளது.

ராகுல் காந்தியுடன் இருப்பவர்களுக்கு காலை எது, இரவு எது என்பது பற்றி கூட தெரியாது என பிரணாப் முகர்ஜி தன்னிடம் தெரிவித்ததாக அவரது மகள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். "ஒரு நாள் காலை, முகலாயத் தோட்டத்தில் (குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டம்) பிரணாப்பின் வழக்கமான காலை நடைப்பயிற்சியின் போது, ​​ராகுல் அவரைப் பார்க்க வந்தார். 

"அரசியல் புரிதல் இல்லை"

காலை நடைப்பயிற்சியின் போதும் பூஜையின் போதும் எந்த தடங்கலும் ஏற்படுவதை பிரணாப் விரும்பவில்லை. இருப்பினும், அவரை சந்திக்க முடிவு செய்தார். உண்மையில் மாலையில்தான் பிரணாப்பை ராகுல் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பிரணாப் உடனான சந்திப்பு காலை என அவரது (ராகுல்) அலுவலகம் தவறுதலாக அவருக்குத் தெரியப்படுத்தியது. 

இச்சம்பவம் குறித்து ராகுல் காந்தியின் உதவியாளர் ஒருவரிடம் இருந்து தெரிந்து கொண்டேன். நான் என் தந்தையிடம் கேட்டபோது, ​​அவர் ஏளனமாக கருத்து தெரிவித்தார். ராகுலின் அலுவலகத்துக்கு a.m. எது p.m. எது என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாவிட்டால், அவர்கள் எப்படி ஒரு நாள் பிரதமர் அலுவலகத்தை இயக்குவார்கள் என்று நம்புகிறார்கள்? என பிரணாப் கூறினார்" என புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லையாம். இதுபற்றி புத்தகத்தில் குறிப்பிட்ட பிரணாப்பின் மகள், "அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் விழாவில் ராகுல் கலந்து கொள்ளவில்லை. காரணம் தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. 

அவர் (ராகுல்) எல்லாவற்றையும் மிக எளிதாகப் பெற்றதால், அவர் அதை மதிக்கவில்லை. சோனியா, தனது மகனை வாரிசு ஆக்குவதில் குறியாக இருக்கிறார். ஆனால், அவருக்கு (ராகுல்) அரசியல் புரிதல் இல்லாதது சிக்கலை உருவாக்குகிறது. அவரால் காங்கிரஸை உயிர்ப்பிக்க முடியுமா? அவர் மக்களை ஊக்குவிக்க முடியுமா? என எனக்கு தெரியாது" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
இந்தியாவில் முதல் முறையாக சபரிமலையில் ஒருங்கிணைந்த AI கூட்ட மேலாண்மை? முழு விவரம் இங்கே..
இந்தியாவில் முதல் முறையாக சபரிமலையில் ஒருங்கிணைந்த AI கூட்ட மேலாண்மை? முழு விவரம் இங்கே..
Top 10 News Headlines: சட்டமன்றத்தில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்.. சென்னை வரும் பிரதமர் மோடி.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: சட்டமன்றத்தில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்.. சென்னை வரும் பிரதமர் மோடி.. 11 மணி செய்திகள் இதோ!
டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..
டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
UDHAYANIDHI VS VIJAY : தைரியம் இருந்தா பார்ட்டி பெயரை சொல்லுங்க..சிஎம் விஜய்க்கு சவால் விட்ட உதயநிதி- சட்டசபையில் நடந்தது என்ன.?
தைரியம் இருந்தா பார்ட்டி பெயரை சொல்லுங்க..சிஎம் விஜய்க்கு சவால் விட்ட உதயநிதி- சட்டசபையில் நடந்தது என்ன.?
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
ஆண்டுக்கு 500 பேர் கூட நியமனம் இல்லை; அரசுப் பள்ளிகளில் 18,107 ஆசிரியர் காலியிடங்கள்- நிரப்புவது எப்போது?
ஆண்டுக்கு 500 பேர் கூட நியமனம் இல்லை; அரசுப் பள்ளிகளில் 18,107 ஆசிரியர் காலியிடங்கள்- நிரப்புவது எப்போது?
Embed widget