மேலும் அறிய

"உலகில் எந்த மூலையில் இருந்தாலும் விட மாட்டேன்" தீவிரவாதிகளுக்கு மோடி கொடுத்த வார்னிங்

உலக நாடுகள் மத்தியில் பஹல்காம் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தீவிரவாதிகளை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தீவிரவாதிகளை தேடி கண்டுபிடிப்போம் என்றும் ஒவ்வொரு பயங்கரவாதிகளையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதை முழு உலகத்திற்கும் சொல்லி கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக நாடுகள் மத்தியில் பஹல்காம் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சூழலில், தாக்குதல் நடந்த பிறகு முதல்முறையாக மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.

தீவிரவாதிகளுக்கு எதிராக கொதித்த மோடி:

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இதில், பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள், இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இந்த விவகாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்தியா.

இந்த நிலையில், பிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், "பிகார் மண்ணிலிருந்து உலகிற்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களையும் அடையாளம் கண்டு தண்டனை வழங்கப்படும்.

"நினைத்து பார்க்க முடியாத தண்டனை"

பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா நம்புகிறது. உலகில் எங்கிருந்தாலும் அவர்களை தேடி கண்டுபிடிப்போம். இந்தியாவின் நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க முடியாது. பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் போகாது. நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முழு தேசமும் இதில் உறுதியாக உள்ளது, மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் உள்ளனர்.

நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். மிகத் தெளிவான வார்த்தைகளில் சொல்ல விரும்புகிறேன். இந்தப் பயங்கரவாதிகளும் இந்தத் தாக்குதலுக்கு சதி செய்தவர்களும், அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரிய தண்டனையைப் பெறுவார்கள்" என்றார்.

நிகழ்ச்சியில் முதலில் இந்தியில் பேசிக் கொண்டிருந்த பிரதமர் மோடி, உலகிற்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன் என உரையை தொடர்ந்த பிறகு ஆங்கிலத்தில் தனது உரையை நிகழ்த்தினார். இதன் மூலம், பயங்கரவாதிகளுக்கு எதிரான தனது நிலைபாட்டை உலக நாடுகளுக்கு நேரடியாக சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் முதல் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் முதல் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
Trump Epstein Files: எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
TVK VIJAY: 70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
Embed widget