மேலும் அறிய

"உலகில் எந்த மூலையில் இருந்தாலும் விட மாட்டேன்" தீவிரவாதிகளுக்கு மோடி கொடுத்த வார்னிங்

உலக நாடுகள் மத்தியில் பஹல்காம் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தீவிரவாதிகளை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தீவிரவாதிகளை தேடி கண்டுபிடிப்போம் என்றும் ஒவ்வொரு பயங்கரவாதிகளையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதை முழு உலகத்திற்கும் சொல்லி கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக நாடுகள் மத்தியில் பஹல்காம் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சூழலில், தாக்குதல் நடந்த பிறகு முதல்முறையாக மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.

தீவிரவாதிகளுக்கு எதிராக கொதித்த மோடி:

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இதில், பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள், இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இந்த விவகாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்தியா.

இந்த நிலையில், பிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், "பிகார் மண்ணிலிருந்து உலகிற்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களையும் அடையாளம் கண்டு தண்டனை வழங்கப்படும்.

"நினைத்து பார்க்க முடியாத தண்டனை"

பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா நம்புகிறது. உலகில் எங்கிருந்தாலும் அவர்களை தேடி கண்டுபிடிப்போம். இந்தியாவின் நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க முடியாது. பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் போகாது. நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முழு தேசமும் இதில் உறுதியாக உள்ளது, மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் உள்ளனர்.

நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். மிகத் தெளிவான வார்த்தைகளில் சொல்ல விரும்புகிறேன். இந்தப் பயங்கரவாதிகளும் இந்தத் தாக்குதலுக்கு சதி செய்தவர்களும், அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரிய தண்டனையைப் பெறுவார்கள்" என்றார்.

நிகழ்ச்சியில் முதலில் இந்தியில் பேசிக் கொண்டிருந்த பிரதமர் மோடி, உலகிற்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன் என உரையை தொடர்ந்த பிறகு ஆங்கிலத்தில் தனது உரையை நிகழ்த்தினார். இதன் மூலம், பயங்கரவாதிகளுக்கு எதிரான தனது நிலைபாட்டை உலக நாடுகளுக்கு நேரடியாக சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendranஅமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
“வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
தப்பு நடந்துடுச்சு.. ஸ்ருதி நாராயணனை வாழவிடுங்க.. இயக்குனர் ரங்கராஜ் உருக்கம்
தப்பு நடந்துடுச்சு.. ஸ்ருதி நாராயணனை வாழவிடுங்க.. இயக்குனர் ரங்கராஜ் உருக்கம்
Siddaramaiah's Assets Freezed: மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
Embed widget