மேலும் அறிய

Modi Speech: GST சீர்திருத்தத்தால் மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு; சிறு வியாபாரிக்கு கூட மகிழ்ச்சிதான் - மோடி

புதிய ஜிஎஸ்டி வரிகள் நாளை அமலாகும் நிலையில், இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, இதனால் மக்களுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் சேமிப்பு ஏற்படும் என்றும் சிறு வியாபாரிக்கு கூட மகிழ்ச்சிதான் எனவும் குறிப்பிட்டார்.

சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிகள் நாளை முதல் அமலாகின்றன. இதுவரை இருந்த 4 வகையான சதவீதத்திலான ஜிஎஸ்டி வரிகள் தற்போது இரண்டாக குறைக்கப்பட்டுள்ளன. இனி, 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு ஜிஎஸ்டி வரிகள் மட்டுமே இருக்கும். இதனால், பல்வேறு பொருட்களின் விலைகளும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து பேசினார். அவர் என்ன கூறினார் என்பதை தற்போது பார்க்கலாம்.

“புதிய ஜிஎஸ்டி-யால் மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு“

புதிய சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிகள் நவராத்திரி முதல் நாளில் அமலுக்கு வருவது சிறப்பு வாய்ந்ததாக கருதுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன என அறிவித்தார்.

இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம், வியாபாரிகள், தொழில் செய்வோர் உள்ளிட்ட அனைவரும் பயனடைவர் என கூறிய பிதமர் மோடி, ஜிஎஸ்டி வரி குறைப்பால் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும் என குறிப்பிட்டார். ஜிஎஸ்டி வரி குறைப்பால் நாட்டு மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று தெரிவித்த அவர்,  ஒட்டுமொத்த மக்களும் மொத்தமாக 2.5 லட்சம் கோடி அளவிற்கு சேமிக்க முடியும் என கூறினார்.

“நாட்டின் வளர்ச்சி வேகமடையும்“

தற்போது அமலாகும் ஜிஎஸ்டி வரி குறைப்பால், நாட்டின் வளர்ச்சி வேகமடையும் என குறிப்பிட்ட மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய மைல் கல்லாக இருக்கும் என தெரிவித்தார். பல்வேறு பெயர்களில் இருந்த மறைமுக வரிகளால் ஏற்பட்ட சிக்கல்கள் ஜிஎஸ்டி-யால் தீர்ந்ததாக சுட்டிக்காட்டிய அவர், சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரிகளுக்கு முன், மாநிலங்களுக்கு இடையே சரக்குகளை கொண்டு செல்ல சிரமம் இருந்தது என கூறிய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே வரி என்ற குறிக்கோளை ஜிஎஸ்டி சீர்திருத்தம் நிறைவேற்றும் என தெரிவித்தார். மேலும், நாட்டின் வரி விகிதங்களை குறைத்திருப்பது அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“சிறு கடைக்காரர்களுக்கு கூட மகிழ்ச்சி ஏற்படும்“

அதோடு, 25 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்டு நடுத்தர மக்களாக மாற்றியுள்ளோம் என பெருமிதம் தெரிவித்த மோடி, வருமான வரியிலும், ஜிஎஸ்டி-யிலும் சலுகை அளித்துள்ளதை சுட்டிக்காட்டினார். இதனால், நடுத்தர மக்கள் இனி தங்கள் இலக்குகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

தற்போது அமலாகும் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால், சிறு கடைக்காரர்கள் கூட பலனடைய முடியும் என தெரிவித்த மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் கார், ஸ்கூட்டர், பொருட்கள் வாங்குவது எளிதாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

“உள்நாட்டு தயாரிப்புகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்“

மேலும், இந்திய பொருளாதாரத்தின் புதிய அத்தியாயம் நாளை தொடங்குவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பொருட்களை முடிந்தவரை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் எனவும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கே நாட்டு மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்திய தயாரிப்பு பொருட்கள் உலகத் தரம்மிக்கதாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், உள்நாட்டு பொருட்களின் தரம் உலக அளவில் இந்தியாவை முன்னிலைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், இந்திய மக்கள் ஒவ்வொருவரின் கனவையும் நினைவாக்க உழைத்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்தால் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்தினால் மட்டுமே, சுயசார்பு இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும் என தெரிவித்தார்.

 

தலைப்பு செய்திகள்

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Embed widget