மேலும் அறிய

"பெளத்த பாரம்பரியத்தை மீட்டெடுக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது" பிரதமர் மோடி பேச்சு!

மொழி என்பது வெறும் தகவல்தொடர்பு முறை மட்டுமல்ல. அது ஒரு நாகரிகத்தின் ஆன்மா, அதன் கலாச்சாரம், அதன் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாலி மொழி மற்றும் புத்தரின் போதனைகள் உள்ள புனித நூல்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அரசு பல முயற்சிகளை மேற்கொள்ளும் என பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார். 

அபிதம்மா (புத்தரின் போதனைகள்) தினத்தை முன்னிட்டு பேசிய பிரதமர் மோடி, "பாலி மொழியில் புத்தரின் போதனைகள் தெரிவிக்கப்பட்ட நாள் இன்று, இப்போது அந்த மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

"இந்தியாவின் அடையாளத்தை அழிக்க முயன்றனர்"

தர்மத்தைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமான மொழியாக பாலி உள்ளது. ஒரு மொழி என்பது வெறும் தகவல்தொடர்பு முறை மட்டுமல்ல. அது ஒரு நாகரிகத்தின் ஆன்மா, அதன் கலாச்சாரம், அதன் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. பாலி மொழியை உயிர்ப்புடன் வைத்திருப்பதும் அதன் மூலம் புத்தரின் போதனைகளை பாதுகாப்பதும் நமது பாெறுப்பு.

பாலி தற்போது பயன்பாட்டில் இல்லாவிட்டாலும், மொழி, இலக்கியம், கலை மற்றும் ஆன்மீக மரபுகள் ஒரு தேசத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன. அது அதன் அடையாளமாகும். இந்திய அரசு பாலியைப் பாதுகாத்து மேம்படுத்தும்" என்றார்.

கலாசார அமைச்சகத்தின் கீழ் சர்வதேச பௌத்த சம்மேளனம் (IBC) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் தலைமை உரையாற்றிய பிரதமர் மோடி, "சுதந்திரத்திற்கு முன்பு பல நூற்றாண்டு காலனித்துவ ஆட்சியும் படையெடுப்பாளர்களும் இந்தியாவின் அடையாளத்தை அழிக்க முயன்றனர்.

பிரதமர் மோடி பேசியது என்ன?

'அடிமை மனப்பான்மை' கொண்டவர்கள் நமது சுதந்திரத்திற்குப் பிறகும் அப்படியே செய்தனர். அப்போதைய அமைப்பு இந்தியாவை அதன் பாரம்பரியத்திலிருந்து விலகி சென்றது. இதனால் இந்தியா மிகவும் பின்தங்கியிருந்தது.

இந்தியாவின் புத்த பாரம்பரியத்தை மீட்டெடுக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், நாங்கள் 600 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளோம். அவற்றில் பெரும்பாலானவை பௌத்த பொருட்கள்.

செயலிகள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் காப்பக ஆராய்ச்சி மூலம் பாலியை விளம்பரப்படுத்த முயற்சிக்கிறோம். பாலியைப் புரிந்துகொள்ள கல்வி மற்றும் ஆன்மீக முயற்சிகள் இரண்டும் தேவை. அறிஞர்களும் கல்வியாளர்களும் புத்தர் தர்மத்தைப் புரிந்துகொள்ள மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

பெளத்த மரபின் மறுமலர்ச்சியில், இந்தியா தனது அடையாளத்தை மீண்டும் கண்டுபிடித்து வருகிறது. மேலும் விரைவான வளர்ச்சி மற்றும் அதன் வளமான பாரம்பரியத்தை புதுப்பிப்பதில் ஈடுபட்டுள்ளது" என்றார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து பேசிய மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், "அபிதம்ம திவாஸ் புத்தர் தம்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமல்ல, மனிதகுலம் அனைவருக்கும் மிகவும் முக்கியமான நாளாகும். இன்று அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அழைப்பைக் குறிக்கிறது" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜெர்மன் கத்துக்கிட்டா இத்தனை பயன்களா? நான் முதல்வன் திட்டத்தில் இலவசப்பயிற்சி: விண்ணப்பிக்க நாளை கடைசி
ஜெர்மன் கத்துக்கிட்டா இத்தனை பயன்களா? நான் முதல்வன் திட்டத்தில் இலவசப்பயிற்சி: விண்ணப்பிக்க நாளை கடைசி
TNPSC Reforms: பட்டையைக் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி: படுவேகமாக முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
பட்டையைக் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி: படுவேகமாக முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
Diwali 2024: நெருங்கும் தீபாவளி! அனைத்து ரேசன் கடைகளும் 27ம் தேதி இயங்கும் - அமைச்சர் அறிவிப்பு
Diwali 2024: நெருங்கும் தீபாவளி! அனைத்து ரேசன் கடைகளும் 27ம் தேதி இயங்கும் - அமைச்சர் அறிவிப்பு
Breaking News LIVE 24th OCT 2024: நவம்பர் 2ம் தேதி தொடங்கும் கந்த சஷ்டி : திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்
Breaking News LIVE 24th OCT 2024: நவம்பர் 2ம் தேதி தொடங்கும் கந்த சஷ்டி : திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Maanadu | அம்பேதகர், பெரியார் நடுவில் விஜய்அண்ணா இடம்பெறாதது ஏன்? விஜய் மாஸ்டர் ப்ளான்Madurai People vs Ko Thalapathy | MLA-வை முற்றுகையிட்ட பெண்கள் திணறிய கோ.தளபதிRahul Gandhi speech On wayanad : Govi Chezhian : ”அமைச்சராகியும் மரியாதை இல்ல” பதவியால் என்ன பிரயோஜனம்! புலம்பும் கோவி செழியன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜெர்மன் கத்துக்கிட்டா இத்தனை பயன்களா? நான் முதல்வன் திட்டத்தில் இலவசப்பயிற்சி: விண்ணப்பிக்க நாளை கடைசி
ஜெர்மன் கத்துக்கிட்டா இத்தனை பயன்களா? நான் முதல்வன் திட்டத்தில் இலவசப்பயிற்சி: விண்ணப்பிக்க நாளை கடைசி
TNPSC Reforms: பட்டையைக் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி: படுவேகமாக முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
பட்டையைக் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி: படுவேகமாக முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
Diwali 2024: நெருங்கும் தீபாவளி! அனைத்து ரேசன் கடைகளும் 27ம் தேதி இயங்கும் - அமைச்சர் அறிவிப்பு
Diwali 2024: நெருங்கும் தீபாவளி! அனைத்து ரேசன் கடைகளும் 27ம் தேதி இயங்கும் - அமைச்சர் அறிவிப்பு
Breaking News LIVE 24th OCT 2024: நவம்பர் 2ம் தேதி தொடங்கும் கந்த சஷ்டி : திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்
Breaking News LIVE 24th OCT 2024: நவம்பர் 2ம் தேதி தொடங்கும் கந்த சஷ்டி : திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்
Tirupati: பக்தர்களே! ஜனவரி மாதம் திருப்பதியில் தங்குவதற்கு ரூம் வேண்டுமா? 3 மணிக்கு முன்பதிவு
Tirupati: பக்தர்களே! ஜனவரி மாதம் திருப்பதியில் தங்குவதற்கு ரூம் வேண்டுமா? 3 மணிக்கு முன்பதிவு
Ravichandran Ashwin:டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்; நாதன் லியோனை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்
Ravichandran Ashwin:டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்; நாதன் லியோனை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்
"போதையின் பாதையில் போகாதீங்க" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்.. வீடியோ
Cyclone Dana: தீவிர புயலாக மாறிய டாணா; 200 ரயில்கள் ரத்து! மூடப்படும் கொல்கத்தா விமான நிலையம்
Cyclone Dana: தீவிர புயலாக மாறிய டாணா; 200 ரயில்கள் ரத்து! மூடப்படும் கொல்கத்தா விமான நிலையம்
Embed widget