மேலும் அறிய

"காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மாவோயிஸ்ட்களுக்கு தைரியம் கிடைக்குது" : பிரதமர் மோடி ஆவேசம்

"எந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கிறதோ, அங்கே குற்றமும் கொள்ளையின் ஆட்சிதான் நிலவுகிறது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக செல்வாக்கு செலுத்தும் மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, நிறைவுபெற்றுள்ளது. அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக, நக்சல் பாதிப்புள்ள 20 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இரண்டாவது கட்ட தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், சூரஜ்பூர் மாவட்டம் பிஷ்ராம்பூர் நகரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய அவர், "காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்டுகளின் மன உறுதி அதிகரிக்கிறது" என்றார்.

"நக்சலைட் வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு தவறிவிட்டது"

தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "எந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கிறதோ, அங்கே குற்றமும் கொள்ளையின் ஆட்சிதான் நிலவுகிறது. நக்சலைட் வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. கடந்த சில நாட்களாக, எங்களிடம் இருந்து பாஜகவினர் பறிக்கப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, எங்கள் நண்பர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வாழ்க்கை அழிக்கப்பட்டது. எனவே சகோதர சகோதரிகளே, நாம் குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளின் நிழலில் வாழ வேண்டுமா? உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும், மாலையில் உங்கள் மகன் வீடு திரும்பவில்லை, உங்கள் மகனின் சடலம் வீட்டிற்கு வந்தால், பணத்தை என்ன செய்வீர்கள்?" என்றார்.

சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய பிரதமர் மோடி, "இங்கே, சகோதரிகள் மற்றும் மகள்களை குற்றவாளிகள் குறிவைக்கின்றனர். நமது பழங்குடி குடும்பங்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். மகள்கள் எங்கே போனார்கள் என்பதற்கு காங்கிரஸ் தலைவர்களிடம் பதில் இல்லை. 

"பழங்குடியினர் கண்ணுக்கு தெரியவில்லை"

இங்கு, சட்ட விரோதமாக ஊடுருவும் நபர்களை, ஓட்டுக்காக, காங்கிரசார் ஊக்குவிக்கின்றனர். பழங்குடியினரின் நிலம் பறிக்கப்படுகிறது. காங்கிரஸின் கொள்கையால், பண்டிகைகளைக் கொண்டாடுவது கூட கடினமாகிவிட்டது. எனது ஆட்சிக் காலத்தில் பல வேலைகள் நடந்துள்ளது. 50 முதல் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் அதை செய்யத் தவறிவிட்டது.

பழங்குடியினர் நலனுக்கான பட்ஜெட் உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில், கடந்த பத்தாண்டுகளில் 80,000 பேருக்கு நிலப் பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நான் ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு வரை, 23,000 நில பத்திரங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக, காங்கிரஸுக்கு இந்தியாவின் 10 கோடி பழங்குடியினர் கண்ணுக்கு தெரியவில்லை. 

பழங்குடியினர் பகுதிகளில் 500 புதிய ஏக்லவ்யா மாதிரிப் பள்ளிகள் எனது ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டன. தாய்மொழியில் படித்தவர்களுக்கு சம வாய்ப்பு வழங்காத விதிகளை காங்கிரஸ் உருவாக்கியது. எனது குடும்பத்தினரே, பாஜக அரசு சொன்னதைச் செய்கிறது. ஒவ்வொரு ஏழைக்கும் 5,00,000 ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதி வழங்கப்படும் என்று பாஜக கூறியது. 

ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டுவோம் என்று பாஜக கூறியது. எரிவாயு இணைப்பு கொடுப்போம், பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு சட்டம் இயற்றுவோம், முத்தலாக் சட்டத்தை இயற்றுவோம் என கூறியது. அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றி விட்டோம்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் பரிசு.. ஏமாந்த ஆண்கள்!
குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் பரிசு.. ஏமாந்த ஆண்கள்!
Parasakthi Twitter Review : இந்த வருஷமும் ஏமாற்றம்தான்...பராசக்தி பார்த்த ரசிகர்கள் புலம்பல்..சோசியல் மீடியா விமர்சனம் இதோ
Parasakthi Twitter Review : இந்த வருஷமும் ஏமாற்றம்தான்...பராசக்தி பார்த்த ரசிகர்கள் புலம்பல்..சோசியல் மீடியா விமர்சனம் இதோ
Embed widget