மேலும் அறிய

PM Modi On TN Govt: கோயில்களை கையகப்படுத்தும் தமிழ்நாடு அரசு, சிறுபான்மையினரை? - பிரதமர் மோடி

காங்கிரஸ் பேசும் புதிய மொழி தொடர்பாக I.N.D.I.A. கூட்டணியில் உள்ள திமுக, கேள்வி எழுப்ப வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கோயில்களை போன்று சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களையும், தமிழ்நாடு அரசு கையகப்படுத்துமா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி பேச்சு:

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானா மாநிலத்தில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக இடையே அங்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், நிஜாமாபாத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்ததோடு, பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

காங்கிரஸ் பேசும் ”புதிய மொழி”

பிரதமர் மோடி பேசுகையில், “ பல்வேறு கட்சிகளிடம் இருந்து ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான கோரிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், ஏழைகள் தான் நாட்டின் மிகப்பெரிய சாதி.  அவர்களை மேம்படுத்த தன்னுடன் இணைய அனைத்து தரப்பினரையும் கைகூப்பி வேண்டுகிறேன். என்னைப் பொறுத்தவரை இது தான் இது எனது கனவு, எனது வாக்குறுதி, எனது முயற்சி மற்றும் தவம்.

மக்கள் தொகை அடிப்படையில் உரிமைகளை வழங்கப்பட வேண்டும் என்ற புதிய மொழியை காங்கிரஸ் பேச தொடங்கியுள்ளது. ஆனால், அவர்களுக்கான பேச்சை எழுதிக்கொடுத்த நபர்கள் அந்த முழக்கம் தென்னிந்தியர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் பெரும் அநீதியை ஏற்படுத்தும் என்பதை காங்கிரஸ் உணரவில்லை. 

100 மக்களவை தொகுதிகள் பறிபோகும்?

மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தென் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன, ஆனால் மக்கள்தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற காங்கிரஸின் புதிய யோசனை செயல்படுத்தப்பட்டால், தென் மாநிலங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். அதன்படி, தொகுதி மறுவரையறை செய்தால் தென்னிந்தியா 100 மக்களவை தொகுதிகளை இழக்கும். தென்னிந்தியா இதை ஏற்குமா? தென்னிந்தியா காங்கிரசை மன்னிக்குமா?

சிறுபான்மை வழிபாட்டுத் தலங்கள் கையகப்படுத்தப்படுமா?

சிறுபான்மை மத நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நிதி மீதான அரசின் கட்டுப்பாட்டில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் . தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், மாநில அரசு இந்து மத நிறுவனங்களை ஆக்கிரமித்து, அவற்றின் வருவாயை மாநில செலவினங்களுக்காகப் பயன்படுத்துகிறது. ஆனால், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை அவர்கள் தொடுவதில்லை.  கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் இதே நிலைதான் உள்ளது.

காங்கிரசின் புதிய முழக்கத்தின்படி மக்கள்தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டுமானால்,  சிறுபான்மையினரின் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அவற்றின் நிதியை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் அல்லது இந்து மத வழிபாட்டு தலங்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். அதற்கான தமிழ்நாட்டில் காங்கிரஸ் குரல் எழுப்புமா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து, தெலங்கானா மாநிலத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாகவும், பாஜக ஆட்சியின் சாதனை தொடர்பாகவும் பிரதமர் மோடி விரிவாக பேச்னார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Trailer: ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
Embed widget