மேலும் அறிய

உச்ச நீதிமன்றத்தில் 370வது சட்டப்பிரிவு ரத்து வழக்கு: ஆகஸ்ட் 2 முதல் தினசரி விசாரணை

ஆகஸ்ட் 5, 2019 அன்று, இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளும் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பொருந்தும் வகையில், 1954 ஆம் ஆண்டு உத்தரவை ரத்து செய்து, இந்திய அரசு ஜனாதிபதி ஆணை வெளியிட்டது.

இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 2 முதல் தினசரி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.

மத்திய அரசு பிரமாணப் பத்திரம்

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட மனுக்களுக்கு எதிராக மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் நிலவும் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றம், கல் வீச்சு சம்பவங்களைக் குறைத்தல் மற்றும் பயங்கரவாத வலைப்பின்னல்களை அகற்றுதல் உள்ளிட்டவற்றை பிரமாணப் பத்திரம் எடுத்துக்காட்டுகிறது. ஜம்மு காஷ்மீர் கடந்த 30 ஆண்டுகளாக தீவிரவாத அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறது. அதைத் தடுக்க, சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதுதான் ஒரே வழி என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவு வட இந்தியாவில் சர்ச்சைக்குரிய பகுதியான ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. இது ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு, மாநிலக் கொடி மற்றும் உள் நிர்வாக சுயாட்சி ஆகியவற்றை வழங்கியது. இந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, மாவட்ட வளர்ச்சி கவுன்சில்களுக்கு வெற்றிகரமான தேர்தல் நடத்தப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் 370வது சட்டப்பிரிவு ரத்து வழக்கு: ஆகஸ்ட் 2 முதல் தினசரி விசாரணை

இயல்புநிலை மீட்கப்பட்டது

"இன்று, பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உட்பட அனைத்து தேவையான நிறுவனங்களும் அங்கு சாதாரணமாக இயங்குகின்றன. தொழில் வளர்ச்சி ஏற்பட்டு, அச்சத்தில் வாழ்ந்த மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்," என்று பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், காஷ்மீரி, டோக்ரி, உருது, ஹிந்தி போன்ற உள்ளூர் மொழிகள் அலுவல் மொழிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்: Vegetables Price: தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம்.. இரட்டை சதத்தில் இஞ்சி, பட்டாணி, சின்ன வெங்காயம்.. மற்ற காய்கறிகளின் விலை பட்டியல் இதோ..

நீக்கப்பட்ட சட்டப்பிரிவு 370

ஆகஸ்ட் 5, 2019 அன்று, இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளும் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பொருந்தும் வகையில், 1954 ஆம் ஆண்டு உத்தரவை ரத்து செய்து, இந்திய அரசு ஜனாதிபதி ஆணை வெளியிட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆகஸ்ட் 6 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பிரிவு 1 ஐத் தவிர, பிரிவு 370 இன் அனைத்து பிரிவுகளையும் நீக்கியது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நிலுவையில் உள்ள 20க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் 370வது சட்டப்பிரிவு ரத்து வழக்கு: ஆகஸ்ட் 2 முதல் தினசரி விசாரணை

எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்

சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கடைசியாக மார்ச் 2020 இல் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த விஷயத்தை பெரிய அமர்வுக்கு மாற்ற மறுத்துவிட்டது. அந்த விசாரணையின் போது, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 மற்றும் 35A சட்டப்பிரிவுகளின் செல்லுபடியை எதிர்த்து ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மற்றொரு தொகுதி மனுக்கள் நிலுவையில் உள்ளதாக பெஞ்ச் குறிப்பிட்டது. சட்டப்பிரிவு 370 தொடர்பான அனைத்து விவகாரங்களையும் ஒன்றாக விசாரிக்க பெஞ்ச் முடிவு செய்தது.

இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 2 முதல் தினசரி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget