மேலும் அறிய

Watch video : வேலை வேண்டி கோஷம்... போலீஸ் காட்டிய ஆவேசம்.. தலையில் இரத்தம், கையில் தேசிய கொடியுடன் உருண்ட நபர்!

பணி நியமனம் தாமதமானதைக் கண்டித்து பீகாரில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது ஆசிரியர்களை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பணி நியமனம் தாமதமானதைக் கண்டித்து பீகாரில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது ஆசிரியர்களை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பீகாரின் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற பேரணியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மீது காவலர்கள் கொடூரமாக தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாட்னா மாவட்ட கூடுதல் அதிகாரி கே.கே.சிங், தேசிய கொடி பிடித்திருந்த ஒரு ஆசிரியரை அடிக்கும்  வீடியோவில், அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்தோடிய காட்சிகளை நெட்டிசன்கள் வேகமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். 

நெட்டிசன்கள் பகிர்ந்துள்ள வீடியோவின் படி, போராட்டம் நடத்திய வேட்பாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அடிகளை தடுக்க முடியாமல் சிலர் பயந்து ஓடும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளனர். இதில், போராட்டக்காரர்களில் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறு கோஷம் எழுப்பி வருகின்றனர். சில போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்தபோது, கையில் தேசியக் கொடியுடன் சாலையில் படுத்து போராட்டம் நடத்தி வருகிறார்.

இதனால், ஆத்திரமடைந்த மாவட்ட கூடுதல் அதிகாரி கே.கே.சிங், கையில் இருந்த தடியால் அந்த நபரை கடுமையாக தாக்கினார். அவர் கடுமையாக தாக்கப்பட்டு தலையில் இருந்து ரத்தம் வருவதை கவனித்துள்ளார். மேலும், தாக்கப்பட்ட அந்த நபர் வலி தாங்கமுடியாமல் கைகளையும் தலையில் வைத்து சாலையில் உருண்டுள்ளார். போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையில், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் காவல்துறை அதிகாரியின் செயல் குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாவட்ட நிர்வாக கூடுதல் அதிகாரி போராட்டக்காரர்கள் மீது ஏன் தடியடி நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். அதுமட்டுமின்றி, தடியடி நடத்தியதில் காயமடைந்த நபருக்கு உடனடியாக சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. நேற்றைய போராட்டம் உட்பட லத்தி சார்ஜ் தொடர்பாக ஒரு குழுவை அமைக்கப்போவதாகவும் தெரிவித்தார். 

தொடக்கநிலை ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி 5,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் பாட்னா தெருக்களில் இறங்கினர். மேலும் ஏராளமான போலீஸ் படைகள் தண்ணீர் பீரங்கிகளுடன் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாநில தொடக்க இளைஞர் ஆசிரியர் சங்கம் என்ற பதாகையின் கீழ் நடந்து வரும் இந்த இயக்கத்தில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர் வேட்பாளர்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget