மேலும் அறிய

Opposition Alliance I.N.D.I.A: இந்தியா கூட்டணியில் குழப்பம்? சரத் பவாரின் டபுள் கேம்? தள்ளிப்போகிறது எதிர்க்கட்சிகளின் 3-வது கூட்டம்..!

எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்:

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விதமாக, பாட்னாவில் முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் மார். அதைதொடர்ந்து, அண்மையில் காங்கிரஸ் தலைமையில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய என பெயரிடப்பட்டது. இதையடுத்து, மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தாமதமாகும் 3வது ஆலோசனைக் கூட்டம்?

கூட்டணியின் 3வது ஆலோசனைக் கூட்டத்தை மும்பையில் நடத்த வேண்டும் என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். அதன்பேரில், ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26ம் தேதிகளில் மும்பையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த தேதிகளில் வேறு வேலைகள் இருப்பதால், தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என சில தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், எதிர்க்கட்சிகளின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், தேதியை மாற்றுவது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் துவரை வெளியாகவில்லை. 

சிவசேனா விளக்கம்:

உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சி தான் ஆலோசனைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 25-26 தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் சில கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பதில் உள்ள சிக்கல் குறித்து அக்கட்சியினரிடையே விசாரிக்கப்பட்டது. அதற்கு, ”26 கட்சிகளை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. ஜுன் மாதம் பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போதும் இந்த சிக்கலை நாங்கள் எதிர்கொண்டோம். இருப்பினும், திட்டமிட்டபடி ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவோம்” என சிவசேனா மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

சரத் பவாரின் திட்டம் என்ன?

பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் சரத் பவார் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தான், அவரது கட்சியை சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் உடன் பாஜக கூட்டணியில் இணைந்து அஜித் பவார் நிதியமைச்சர் பதவியை பெற்றுள்ளார். இதனிடையே, வரும் 1ம் தேதி புனேவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அவருக்கு விருது வழங்க உள்ளார் சரத் பவார். இதனால், அவர் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் நீடிப்பாரா அல்லது பிரிந்து சென்று பாஜகவில் சேர்ந்துவிடுவாரா என்ற குழப்பம் கூட்டணியை சேர்ந்த பல கட்சி தலைவர்களிடையே நிலவுகிறது. இதனால், 3வது ஆலோசனைக் கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்பாரா என்பதே சந்தேகமாக உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
Embed widget