மேலும் அறிய

Operation Sindoor Status: வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?

பாகிஸ்தான் மீது தொடுக்கப்பட்டுவரும் ஆபரேஷன் சிந்தூரின் நிலை குறித்து விளக்கமளித்த வெளியுறவுத்துறை மற்றும் ராணுவம், பாகிஸ்தான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை இந்தியா நடத்திவருகிறது. ஆனால், பாகிஸ்தானோ, இந்திய அப்பாவி மக்களை குறி வைத்து தாக்கி வருகிறது. ஆபரேஷன் சிந்தூரின் தற்போதைய நிலை குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்த வெளியுறவுத்துறை மற்றும் ராணுவம், பாகிஸ்தான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர்

காஷ்மீரின் பஹல்காமில், தீவிரவாதிகள் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து,  ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை கடந்த 7-ம் தேதி இந்தியா தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத நிலைகளை இந்தியா தாக்கி அழித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி இந்திய மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்திவருகிறது. பாகிஸ்தானின் பெரும்பாலான தாக்குதல்களை இந்தியா முறியடித்துள்ளது. எனினும், இந்திய தரப்பில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டு, சில இடங்களில் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

எல்லைக் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், இந்திய ராணுவமும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம்

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்த வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் ராணுவம் தரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அவர்கள் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

போர் பதற்றத்தை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை தான் பாகிஸ்தான் எடுத்து வருவதாகவும், பொறுப்பான முறையில் இந்தியா பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவல் தவறானது என்றும், இந்தியாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வதந்திகளை பரப்புவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் விக்ரம் மிஸ்ரி.

மேலும், எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அதிக அளவில் ராணுவத்தை குவித்து வருவதாக தெரிவித்த அவர், இந்திய ஆயுதப்படைகள் அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக கூறினார். பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை சிதைப்பதுதான் பாகிஸ்தானின் நோக்கம் என்றும், இன்று அதிகாலையில் அதிவேக ஏவுகணைகளைக் கொண்டு, பஞ்சாப் விமானப்படை தளத்தை தாக்க அவர்கள் முயன்றதாவும் மிஸ்ரி தெரிவித்துள்ளார். அதோடு, மதத் தலத்தில் இந்தியா ஏவுகணைகள் வீசியதாக பாகிஸ்தான் கூறுவது அபத்தமானது எனவும் அவர் கூறினார்.

கர்னல் சோபியா குரேஷி கூறியது என்ன.?

இதேபோல், செய்தியாளர்களிடம் பேசிய கர்னல் சோபியா குரேஷி, நேற்றிரவு முதல் அதிகாலை வரை, பாகிஸ்தன் 26 முறை இந்தியாவை தாக்க முயற்சித்ததாகவும், பஞ்சாபில் உள்ள விமானப் படைத்தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடங்கியதால், இந்தியா பதில் தாக்குதலை நடத்தியதாக தெரிவித்தார்.

அதிகாலையில், இந்தியாவை தாக்க, பாகிஸ்தான் அதிவேக ஏவுகணையை பயன்படுத்தியதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா பாலிஸ்ட்டிக் ஏவுகணையை பயன்படுத்தியதாக கர்னல் சோபியா கூறினார்.

மேலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படைத் தளத்தையும் பாகிஸ்தான் குறி வைத்துள்ளதாக கூறிய அவர், ஸ்ரீநகரில் உள்ள பள்ளி, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
Embed widget