மேலும் அறிய

Odisha Train Accident: அண்ணன்- தம்பி 3 பேர் உயிரைப் பறித்த ஒடிஷா ரயில் விபத்து.. பணிக்காக வந்த நிலையில் பரிதாபம்..

ஒடிசா ரயில் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தால் ஒட்டுமொத்த நாடே  சோகத்தில் மூழ்கியுள்ளது. 275 பேர் உயிரிழப்புக்கு காரணமான இந்த விபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

 இந்த கோர விபத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 3 பேர் இந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணன் - தம்பிகள்:

மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ளது தெற்கு 24 பர்கானஸ் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள சரணிகாலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹரன்காயன். அவருக்கு வயது 40. அவரது தம்பிகள் நிஷிகாந்த் காயன் ( வயது 35), திபாகர் காயன் ( வயது 32). மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 3 பேரும் தமிழ்நாட்டில் சிறு, சிறு தொழில்கள் செய்து வந்தனர்.

தமிழ்நாட்டில் வேலை பார்த்து வந்த அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் சென்றனர். பின்னர், மீண்டும் பணத்தேவைக்காக 3 பேரும் தமிழ்நாட்டிற்கு சென்று பணியாற்ற வேண்டும் முடிவு செய்துள்ளனர். இதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

3 பேர் உயிரிழப்பு:

ஆனால், துரதிஷ்டவசமாக அந்த ரயில் கோர விபத்தில் சிக்கியதில் சகோதரர்கள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே விபத்தில் அண்ணன்- தம்பி 3 பேரும் உயிரிழந்த சம்பவம் சரணிகாலி கிராமம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த சகோதரர்களின் குடும்பத்திற்கு பலரும் ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு மேற்கு வங்காள அரசு சார்பிலும் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் விபத்தில் வட இந்தியாவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்தவர்கள் அகால மரணம் அடைந்துள்ளனர். அவர்களில் மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மாவட்டத்தில் மட்டும் சுமார் 110 பேர் காயம் அடைந்துள்ளனர். 44 பேர் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

மீண்டும் ரயில் சேவை:

ஒடிசாவில் ரயில் விபத்தில் தடம்புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு 51 மணி நேரத்திற்கு பிறகு நேற்று இரவு மீண்டும் அந்தப்பாதையில் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக நேரில் சென்று பார்வையிட அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழு நேரில் சென்று ஆய்வு செய்தனர் என்பதும், தமிழ்நாடு திரும்பிய அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சென்று ஆய்வு குறித்து விளக்கம் அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: TN School Reopening: குறையாத வெயில் தாக்கம்; பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறதா? முழு விவரம்..

மேலும் படிக்க: Amit Shah Met Wrestlers: ஒருவழியாக மல்யுத்த வீரர்களை சந்தித்த அமித் ஷா..! பாஜக எம்.பி. மீது பாலியல் குற்றச்சாட்டு

 

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi Arrested: சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
தென்னிந்திய நோயாளிகளுக்கு நற்செய்தி! ஜிப்மரில் அதிநவீன நோய் எதிர்ப்பு ஆய்வகம் திறப்பு!
தென்னிந்திய நோயாளிகளுக்கு நற்செய்தி! ஜிப்மரில் அதிநவீன நோய் எதிர்ப்பு ஆய்வகம் திறப்பு!
Tamil Nadu Top 5 News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 5 News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
இன்டர்நெட் இல்லாமல் UPI! PoS-ல் NFC பேமெண்ட்: NPCI அதிரடி அறிவிப்பு!
இன்டர்நெட் இல்லாமல் UPI! PoS-ல் NFC பேமெண்ட்: NPCI அதிரடி அறிவிப்பு!

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Arrested: சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
Iran Starts Nuclear Program: தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
Tasmac cigarettes ban : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
Galaxy S25 Ultra Price Crash: அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Tata Nexon EV on EMI: ரூ.2 லட்சம் இருக்கா.? விற்பனையில் பட்டையை கிளப்பும் டாடா நெக்ஸான் EV கார வாங்கலாம்; EMI எவ்வளவு வரும்.?
ரூ.2 லட்சம் இருக்கா.? விற்பனையில் பட்டையை கிளப்பும் டாடா நெக்ஸான் EV கார வாங்கலாம்; EMI எவ்வளவு வரும்.?
Embed widget